JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், டிசம்பர் 31, 2013

கதவைத் திற

விடியறதுக்கு இன்னும் ஜாஸ்தி நேரம் இல்ல.
வெள்ளென வானம் வர நேரமில்லையா.
சீக்கிரமே முழிப்பு வந்துட்டுத்து.

அதனாலே உங்களுக்கு முன்னாடியே எழுந்திண்டு கோலம் போட வந்துட்டேன். என்றாள் பல் போன கிழவி.

பனித்துளி பனித் துளி எல்லாமே இவ தலை லே ..!!

எனக்கோ அந்த பனி லே இவ தலைலே மப் ளர் கூட போட்டுக்காம வாசல்லே உட்கார்ந்துண்டு கோலம் போடறா.  இவ கோலம் போடல்லே நான் என்னிக்காவது சொல்லி இருக்கேனா !!  ஏதோ நான் ஸ்டிக்கர் கோலம் கொண்டு வந்து வாசல்லே ஒட்டினதுல்லே இவ்வளவு ரோசமா ?

ராதே !! உனக்கு கோபம் கூடாதேடி,
சீ சீ    ... கோதே உனக்கு கோபம் கூடாதேடி என்று ஒரு இழு இழுத்தேன்.
ராகத்தை.  அவளையும் வம்புக்கு.

சும்மா வம்பு பண்ணதீக. இதோ வந்துட்டேன் என்று கோலத்தை முடித்து விட்டு திரும்பினாள்.  என்ன பார்க்கறீங்க..

நான் அந்த காலத்தை நினைச்சேன்.
.
அது இருக்கட்டும். கோலம் எப்படி இருக்கு ? என்று என்னை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

ஸ்டைலு ஸ்டைலு தான் என்று ஆரம்பித்தேன்.

வாசல்லே நின்னுண்டு பாட்டா. ?

எதிர் வீட்டு வாசல்லே புதுசா கல்யாணம் ஆன பொண் கோலம் போட்டுண்டு இருந்ததை நான் பார்த்ததை அவ பாத்துட்டா..

என்னது ?

கோலத்தை சொன்னேன். சமாளித்தேன். ஆனா மனசு சொல்லித்து .
பொய் சொல்லக்கூடாது .

கோலத்தைப் பார்த்தேன்.
என்ன அழகான பூக்கள்.!!


http://kolamnkolam.blogspot.in/2009/01/flower-pots-kolam.html
அது சரி, இன்னிக்கு திருப்பாவை 16 வது பாசுரத்தை கேட்போம்.
என்று டி.வி. டி. யை போட்டேன்.



ரொம்ப அழகா பாடி இருக்காங்க இல்ல. ராகம் மோஹனத்திலே
இந்தப் பாட்டுக்கு கூட கதவை திறக்கலையா !!

அப்ப இன்னொரு ராகத்திலே பாடி பார்ப்போம்.

நானும் இன்னிக்கு இதே பாசுரத்தை இன்னொரு ராகத்திலே பாடி இருக்கேன்.

கண்ணா ! கதவைத் திற.  கோதை காத்துக்கிட்டு இருக்கா.

சஹானா தானே ?

ஆமாம்.  கோதை தன்னோட தோழிகளோட பரந்தாமன் கண்ணன் வாசல்லே வந்து ,
கதவைத் திற கதவத் திற, அப்படின்னு சொல்றா.

நீங்க யாரு ? அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா ? அப்படின்னு அந்த வாட்ச்மேன் கேட்பதற்கு முன்னாடியே...

எங்களுக்கு உள்ளே இருக்கிற நேயன் ஒரு இ மெயில் போட்டு இருக்காரு.
அதனாலே தான் அவர் செய்தி படிச்சுட்டு வர்ரோம்.
நீ கதவைத் திற என்கிறாள்.




இந்த பாசுரத்தின் தத்துவத்தை புரிந்து கொள்ளனும் அப்படின்னா
 நீங்க இந்த வழியா போங்க.,.. 

என் தஞ்சாவூர் நண்பர் அழகான வர்ணனை இங்கே.  ஒரே பதிவிலே கண்ணனையும் காணலாம். சிவ தர்சனமும் செய்யலாம்.

துரை செல்வராஜ் சாருக்கு அந்த பரந்தாமன் தீர்காயுசை கொடுக்கட்டும். தொடர்ந்து அவர் இறைப்பணி உலகம் முழுவதும் பரவட்டும்.

Velukkudi Krishnan

வேளுக்குடி கிருஷ்ணன் இன்னமும் .வரவில்லை.
அவர் சிடி யும் இன்னும் வல்லை.

ஆனா இன்னிக்கு வரவேண்டிய நைவேத்யம் வந்துடுத்து.
பாத்த உடனே நாக்கிலே ஜலம் ஊறிடுத்து .
http://www.tastyappetite.net/2010/11/sooji-ka-halwa-rava-kesari.html

ஒன்னு எடுத்து வாயிலே போட்டுக்கப்போனேன்.
என்ன அப்படி அவசரம்?

லைப் லே எதுக்குமே அவசரப்பட கூடாது அப்படின்னு சொல்றாக.
ஆனா அவங்களுக்கு முன்னாடி ஒரு அல்வாத் துண்டை வச்சு பாக்கலையே

பரந்தாமா!
எங்களுக்கு உன் வாசற்கதவை திறக்கும்
நாளும் எந்த நாளோ !!

*********************************************************************************************************************************************************************************************************************************************

இன்னிக்கு என்ன பொன் மொழி. 
****************************************************************************
எல்லாத்துக்குமே நீ ஒரு சாட்சி தான். 
அப்படின்னு உனக்கு புரிஞ்சு போச்சுன்னா,
உனக்கு வலியும் இல்ல மன வேதனையும் இல்ல. 

நடந்தது எதுக்கும் நீ பொறுப்பும் இல்ல. 
நடந்தது எதுவும் உன்னால இல்ல. 

என்னால தான் எதுவுமே ஆவுது அப்படின்னி நீ நின்னைக்கும்போதுதான் 
உனக்கு முடிவு பற்றி கவலை வருது. 

நீ வருவதற்கு முன்னாடியும் உலகம் உருண்டுண்டு தான் இருந்தது. 

நீயும் நானும் போனப்பிறகும் இந்த உலகம் உருண்டுண்டு தான் இருக்கும்.

அப்ப

நீயும் நானும் 

ஜஸ்ட் அப்சர்வர் தான்.  

when you are a mere observer, there is no anguish, no pain, no suffering, no victim, no villain…there’s just you, in total bliss.