JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, டிசம்பர் 31, 2011

A COLOURFUL NEW YEAR FOR EVERYONE !! LUCKY 2012

Man follows the earth. Earth follows heaven. Heaven follows the Tao. Tao follows what is natural. 

-Lao Tzu 

What is Tao ? Click the title and know more.

சனி, டிசம்பர் 24, 2011

HANUMATH PANCHARATHNAM

புதன், டிசம்பர் 21, 2011

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

Bharatanatyam Sri Andal's Sanga Tamizh Malai

சனி, டிசம்பர் 17, 2011

Thirupaavai Paasuram 1

திங்கள், டிசம்பர் 12, 2011

அரி, அரி, அரி!"என்றாள் ."கண்ணா!




பாஞ்சாலி சபதத்தில் இருந்து ஒரு பாடல் எனது நண்பர் வலை பதிவு ஒன்றில் வெளியாகி உள்ளது. அதை நான் பாடி இருக்கிறேன். வெளியிட்டவர் திருமதி லலிதா மிட்டல் அவர்கள்.

பாரதியின் எழுத்து தான் என்னே !!



அரி, அரி, அரி!"என்றாள் ."கண்ணா!
       அபயமபயமுனக்கபயம்" என்றாள்.
கரியினுக்கருள் புரிந்தே-அன்று
      கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்!
கரிய நன்னிறமுடையாய்!-அன்று
     காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதோர் பொருளாவாய்!-கண்ணா!
    பேசரும் பழமறைப் பொருளாவாய்!
சக்கரமேந்தி நின்றாய் ! -கண்ணா!
    சார்ங்கமென்றொரு வில்லைக் கரத்துடையாய்!
அக்கரப் பொருளாவாய் ! -கண்ணா!
    அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய்! -கண்ணா!
    தொண்டர்கண்ணீர்களைத்   துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக் காப்பாய்,--அந்தச்
    சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய் !
வானத்துள்  வானாவாய்,--தீ,
    மண்,நீர்,காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் -தவ
   முனிவர்தம் அகத்தினிலொளிர் தருவாய்;
கானத்துப் பொய்கையிலே -தனிக்
   கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து சீதேவி, -அவள்
    தாளிணை கைக்கொண்டு -மகிழ்ந்திருப்பாய்!
ஆதியிலாதியப்பா!--கண்ணா!
    அறிவினைக்கடந்த விண்ணகப்பொருளே !
சோதிக்குஞ்சோதியப்பா !--என்றன்
    சொல்லினைக்கேட்டருள் செய்திடுவாய் !
மாதிக்கு வெளியினிலே -நடு
    வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய்--கண்ணா!
    சுடர்ப்பொருளே ,பேரடற்பொருளே!
"கம்பத்திலுள்ளானோ?--அடா !
     காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செயுமூடா!"--என்று
     மகன்மிசையுறுமியத் தூணுதைத்தான்
செம்பவிர்குழலுடையான்;--அந்தத்
     தீயவல்லிரணியனுடல் பிளந்தாய்!
நம்பி நின்னடி தொழுதேன்;--என்னை
     நாணழியாதிங்கு காத்தருள்வாய்.
வாக்கினுக்கீசனையும் --நின்றன்
    வாக்கினிலசைத்திடும் வலிமையினாய் ,
ஆக்கினை கரத்துடையாய் --என்றன்
    அன்புடை எந்தை !என் அருட்கடலே!
நோக்கினிற்கதிருடையாய் !--இங்கு
     நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்!
தேக்குநல் வானமுதே!--இங்கு
    சிற்றிடையாய்ச்சியில் வெண்ணையுண்டாய்!
வையகம் காத்திடுவாய்!--கண்ணா!
    மணிவண்ணா,என்றன் மனச்சுடரே!
ஐய,நின்பதமலரே    --சரண்
   அரி,அரி, அரி, அரி, அரி!"என்றாள்.

அது இங்கேயும் இருக்கிறது.

http://youtu.be/_UqVfy37094

சனி, டிசம்பர் 10, 2011

புதன், டிசம்பர் 07, 2011

Annamalai Deepam, 8 Dec 2011

வெள்ளி, டிசம்பர் 02, 2011

கருணைசெய் அரங்கா...கருணைசெய்

KRS, my web friend, has beautifully translated A KRITHI BY PURANDHARADASAR PLEASE CLICK THE TITLE OF THIS POSTING TO MOVE ON TO THE BLOG OF SRI K.R.S You may also see this song in Youtube http://youtu.be/NMccOYABfsQ

புதன், நவம்பர் 23, 2011

திங்கள், நவம்பர் 21, 2011

Muthai Tharu -Srinivas & Nithyashree

Muruganai kaana Ayiram - Nithyashree

சனி, நவம்பர் 19, 2011

ஸ்ரீ ரங்க புர வாசனே ரங்கனே

A song on Lord Renganatha of Srirengam Smt.Saranya writes the poem. Please cut and paste this URL if u r not taken to the blog by clicking above http://valarumkavi.blogspot.com See the text That is in praise of Lord Renganatha.

வெள்ளி, நவம்பர் 11, 2011

OUR DAUGHTER'S BIRTHDAY TODAY 12 NOV 2011 ..HAPPY BIRTHDAY

TODAY IS HAPPY BIRTHDAY OF OUR DAUGHTER
  GOWRI BALASUBRAMANIAN.  

It sounds incredible that 41 years have rolled .

OUR GRANDKID, HER DAUGHTER SINGS HANUMAN CHALISA ON HER BIRTHDAY. 

WISH YOU HAPPY BIRTHDAY, gowri kannamma
FROM APPA AND AMMA
 On the occasion of the happy birthday,
appa sings a song in praise of Lord Shiva at Koteeswarar Temple, near Thiruvidaimarudur, near Kumbakonam.  The song is penned by Tamil Poetess Smt.T.V.Thangamani. 
Raag: Yadhukula Kambhodhi

திங்கள், நவம்பர் 07, 2011

Baba never hinted He will be moving out !!

SATHYA SAYEE BABA NEVER HINTED, TO MY KNOWLEDGE, THAT HE WILL BE MOVING OUT , from the title of my blog.     

OF COURSE, BHAGAWAN SATHYA SAYEE BABA ABANDONED HIS PHYSICAL BODY A FEW MONTHS AGO, TO LIVE PERMANENTLY IN THE HEARTS OF HIS DEVOTEES. 


QUITE IRONICALLY, I HAD A DIFFERENT EXPERIENCE.

MY KITH AND KIN WHO VISITED MY BLOG WERE AWARE OF THE ICON OF THIS BLOG "THE BLESSING HAND OF THE BABA "

SUDDENLY THE BABA'S BLESSING HAND DISAPPEARED FROM THE TITLE. I DID NOT KNOW WHY IT HAPPENED. Is it a sequel to what had happened a few days ago at my doctor's clinic and my narration thereof ? (for more details,click here)

WHEN I OPENED THE DESIGN UNDER THE SETTINGS AND OPENED THE PARTICULAR GADGET/WIDGET , there is a note  THAT THE PICTURE IS FROM AN INVALID URL.

IS THE PICTURE of BABA  UNDER COPY WRIT OF ANY INDIVIDUAL OR CORPORATE , THAT ALSO I DO NOT KNOW.

HOWEVER, I HAVE PUT SHIRDI BABA'S PICTURE AT THE TITLE.

I FERVENTLY  HOPE SHIRDI BABA CONTINUES HIS PRESENCE THERE.






வியாழன், நவம்பர் 03, 2011

Karthikeya Gaangeya Gowri

Today is Happy Birthday of my son KARTHIKEYAN

SO WE PRAY TO LORD KARTHIKEYA TO SHOWER ALL HIS BEST ON HIM AND ALL NEAR AND DEAR TO HIM

செவ்வாய், நவம்பர் 01, 2011

திருசெந்தூரில் கடல் ஓரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்....


 திருசெந்தூரில் கடல் ஓரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்....

டி எம்.எஸ். பாடுகிறார்.  
SKANDHA SHASTI TODAY SEE ALSO http://kandhanaithuthi.blogspot.com http://vazhvuneri.blogspot.com

சனி, அக்டோபர் 29, 2011

திருமழபாடி





 திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள திருமழபாடி ஊரில் குடி கொண்டிருக்கும் சிவ பெருமான் மீது ஒரு பாடல் அழகாக திருமதி தங்கமணி அவர்கள் எழுதி உள்ளார்கள்.  அது : 

வலைமீ தினிலே.. படுமீனாய் ..
.வதையே செயுமூ..ழதுவீழும் 
கலைசேர் மதிசூ.. டிடுநேசன் ..
.கழலே தருவான்..துணையாக 
நிலையா மிறைவோன்..அருளேதம் .
..நினைவா யடியார்..தொழுமீசன் 
அலையார் புனல்சேர்.. மழபாடி ...
அகலா துறைமா..மணிதானே!...1 

துளிவான் நிலவோ..டலையாறும் 
...சுருளார் சடைமேல்.. அணியாகி 
வெளியே சிவனா.. டிடுமேடை ..
.விரையார் கழலோன்..நடமாகும் 
தளியே அடியார்.. மனமாகும் ...
தரு ஆல் நிழல்கீழ்.. குருவாவன் 
அளிஆர் பொழில்சூழ்.. மழபாடி ...
அகலா துறைமா.. மணிதானே....2 


Posted by Thangamani on Thursday, October 27, 2011 

PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING TO MOVE ON TO THE BLOG OF THE AUTHOR OF THIS GREAT SONG ON LORD SHIVA AT THIRUMAZHAPADI, TIRUCHY DISTRICT.

புதன், அக்டோபர் 26, 2011

HAPPY DEEPAVALI 2011


 தீபாவளி அன்று நாதஸ்வர கலைஞர் தவில் வித்வான்களுக்கு வரவேற்பு 

deepavali special



அடுத்ததும் நாதஸ்வரமே. என்ன ஒரு அபாரமான கீர்த்தனை !!
nadhaswaram
thiruvizha jayashankar
ksheerasagara  ..  raag deva ghandari



வயலினில் குன்னக்குடி சபாஷ் போட வைக்கிறார்.
violin
kunnakkudi vaidhyanathan
thirupughazh
muthai thiru


வீணை ராஜேஷ் வித்யா அமக்களம் கதந குதூகுலம் ராகம்
ரகு வம்ச சுதா ..  எங்க அம்மா பாட்டு.
rajesh vaidhya
raghuvamsa sudha
kadhana kudookulam


மிருதங்கம்
thani aavarthanam
தனி ஆவர்த்தனம். இதோ !!
hariharayanan


கடம் சுரேஷ் இது என் சொந்த அத்தையோட பேரன். உலகப்புகழ் கிட்டிய கடம் வாத்ய நிபுணர். சபாஷ் !!
suresh

சனி, அக்டோபர் 22, 2011

Inner Engineering Online Introduction



 அகப் பொறி இயல் இன்னும் தலைப்பிலே 
 அழகுபட அறிவுறுத்தும் 
ஆங்கிலச் சொற்பொழிவு ஒன்று 
 எனது வலை நண்பர் திரு ஜீவா அவர்கள் 
வலையிலே கண்டேன். 
விண்டேன். மென்று உண்டேன். 
எனது உற்றமும் சுற்றமும் கண்டிட 
அவருக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு 
எனது வலையிலே பதிப்பித்து இருக்கிறேன். 

உனது அக மகிழ்வு உனது கைகளிலே உள்ளது. 
உணர்ந்து நீ செயல்படும்பொழுது 
உவகையே நீ ஆகிறாய். 

இருப்பத்தி ஐந்து நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவை
பொறுமையாகக் கேளுங்கள்.  

வியாழன், அக்டோபர் 20, 2011

Adi Shankara and Devi

MAHALAKSHMI STOTRAM STARTS FROM THE 60TH SECOND OF THIS VIDEO. KOLLUR MOOKAMBIKA BLESSES THE YOUNG SAINT AND TELLS HIM THAT HE WOULD BE THE JAGADHGURU SANKARACHARYA AND WOULD INSTAL FIVE PEETAMS AT THE DESIGNATED PLACES IN BHARAT.

செவ்வாய், அக்டோபர் 18, 2011

dinesh Happy Birthday 19 OCT 2011


TODAY HAPPY BIRTHDAY FOR DINESH 

A VERY HAPPY BIRTHDAY TO YOU DINESH

 BLESSINGS FROM

THATHA PAATTI 
PERIA ATHAI PERIA ATHIMBER
CHINNA ATHAI CHINNA ATHIMBER
APPA AMMA 

GREETINGS FROM
SANCHU 
AKSHAYA
PRANAV AMBRAVANESH PICHAI
PRAJVAL KARUMARI KICHAN

BIRTHDAY PARTY BEING HELD AT TOP OF MOUNT EVEREST 
ALL ARE WELCOME 
 patti and thatha singing at the Tea party at Mount Everest.


சனி, அக்டோபர் 15, 2011

SGS Hanuman

Sri Ram Hanumath Slokam

kindly click at the title to MOVE ON TO THE BLOG WHICH INSPIRED ME TO RECITE THE HANUMATH SLOKAS. PLEASE ALSO SEE THE HEARTENING PICTURES OF HANUMAN WITH THE VADAMALAI ON.

செவ்வாய், அக்டோபர் 11, 2011

Nava Rathri Golu (Traditional )

GREETINGS TO EVERYONE. NAVARATHRI GOLU AT MY SON IN LAW'S HOUSE AT MONMOUTH JUNCTION. MY GRAND KIDS SANCHU AND AKSHAYA SING DURING AN EVENING. THEERATHA VILAYATTU PILLAI IS A POPULAR SONG COMPOSED BY SUBRAMANIA BHARATHI. VENKATACHALA NILAYAM IS A CARNATIC SONG . MANGALA AARTHI GOWRI KALYANAM VAIBHOGAME. COURTESY: MRS.SUDHA RAGHUNATHAN THE BEAUTIFUL KOLAM IS FROM ONE OF MY FAVOURITE BLOGS SPECIALISING IN HEARTENING KOLAMS, SUITING EVERY FESTIVAL.

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

NAVARATHRI GOLU TRADITIONAL

A TRADITIONAL GOLU AT MY SON IN LAW'S HOUSE AT MONMOUTH JUNCTION. NJ. MY GRAND DAUGHTERS SING THE SONGS AND OF COURSE THE GRAND OLD MAN SINGS ERU MAYILE AND THEN TRADITIONAL GOWRI KALYANAM. DO NOT MISS TO SEE TILL THE END. WISH EVERYONE ALL THE BEST BLESSINGS FROM DEVI GODDESS DURGA LAKSHMI SARASWATHI.

புதன், அக்டோபர் 05, 2011

வெள்ளை உள்ளத் தாமரையில்

Today is Saraswathi Pooja. Sing this with your hearts full of Her Glory.

செவ்வாய், அக்டோபர் 04, 2011

Saraswathi Devi Sloka - Saraswathi Namasthubyam

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

Navaratri Kolu. The Durbar of MAHISHASURA MARDHINI.

The dolls, called Kollu or Golu, represents the durbar or assembly of Goddess Durga. This assembly is held just before Mother Goddess ventures on her mission to slay Mahishasura, the buffalo-headed demon. Therefore when depicted along with the 'kolu,' Goddess Durga is also referred as Mahishasura-mardini. WE GREET ALL ON THE NAVARATHRI DAYS.

புதன், செப்டம்பர் 28, 2011

Aigiri Nandini part 1

TODAY IS THE FIRST DAY OF NAVARATHRI 2011.

ELSEWHERE IN ONE OF MY BLOGS WE HAVE DETAILS ON THE SIGNIFICANCE OF NAVARATHRI.
mahishasura mardhini stotram part One
 
part Two

Read it everyday throughout Navarathri Festival and be Blessed By Devi Durga Lakshmi Saraswathi.

சனி, செப்டம்பர் 17, 2011

Grandkid Akshaya wins Second Prize in Drawing Competition. Congratulations.

My grandkid Akshaya Karthikeyan has won a prize in the Drawing Competiton held recently at Doha. 

CONGRATULATIONS.

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

எங்க பாட்டியின் பிறந்த நாள் இன்று. 16 செப்டம்பர்




happy birthday to you  paatti
from
sanchu, akshaya, pichai, dinesh, prajval
pl click to see US BIGGER !!!

எங்க பாட்டியின்
 பிறந்த நாள்
இன்று. 16 செப்டம்பர் 

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

Vaidyanaashtakam - A Sacred Chant for Lord Shiva.

Thirumathi Thangamani has composed a song on Lord Vaideeswara in her blog http://kavidhaithuligal.blogspot.com PLEASE CLICK THE TITLE OF THIS POSTING TO READ THE TEXT OF THIS SONG. I have sung this in Raag Atana. Follows is VAIDHYANATHASHTAGAM.

சனி, செப்டம்பர் 10, 2011

கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொறி கப்பிய கறிமுகன் ...... அடிபேணி



  • கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொறி 
  • கப்பிய கறிமுகன் ...... அடிபேணி 
  • கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ 
  • கற்பகம் எனவினை ...... கடிதேகும் 
  • மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் 
  • மற்பொரு திரள்புய ...... மதயானை
  • மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
  • மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே 
  • முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
  • முற்பட எழுதிய ...... முதல்வோனே
  • முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
  • அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
  • அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்
  • அப்புனம் அதனிடை ...... இபமாகி 
  • அக்குற மகளுடன் அச்சிறு முருகனை 
  • அக்கணம் மணமருள் ...... பெருமாளே . 
  • Also click at the title of this posting to listen to a THIRUPUGAZH on 
  • mandhurai AMBRAVANESWARA AND VALAMBIKAI AMMAN by
  • ARUNAGIRINATHAR.
  • MANDHURAI லால்குடிக்கு பக்கத்தில் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். 
  • அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் கேட்க தலைப்பை கிளிக்கவும்.

வியாழன், செப்டம்பர் 01, 2011

கணபதியே உன்பாதம் சரணமய்யா

Courtesy: Smt.Ramalakshmi Rajan

A song on Lord Ganesh Kindly click at the title of the posting to move on to the author's blog http://kavinaya.blogspot.com

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

theeraadha vilaiyaattup pillai - kannan


My grandkid Sanchitha sings THE MOST POPULAR SONG OF SUBRAMANIA BHARATHI
  • theeraadha vilaiyaattup pillai - kannan
  • theruvilae pengalukkoayaadha thollai 
  • (theeraadha) 

  • thinnap pazham kondu varuvaan -
  • paadhi thinginra poadhilae thattip parippaan
  • ennappan ennaiyaan enraal -
  • adhanai echchir paduththik kadiththuk koduppaan 
  • (theeraadha) 
  •  
  • azhagulla malar kondu vandhae - ennai
  • azha ahach cheydhapin kannai moodik kol
  • kuzhalilae soottuvaen enbaan -
  • ennaik kurudaakki malarinai thoazhikku vaippaan
  • (theeraadha)

  • pinnalaip pinninrizhuppaan - thalai
  • pinnae thirumbumun naer senru maraivaan 
  • vannap puduch chaelai thanilae -
  • puzhudi vaarich chorindhae varuththik kulaippaan(theeraadha)

pullaanguzhal kondu varuvaan -
amudhu pongith thadhumbu nal geedham padaippaan 
kallaal mayanguvadhu poalae -
adhainaik kanmoodi vaaythirandhae kaettiruppoam

My Grandkid Sanju plays Piano .. HARVEST TIME.

HARVEST TIME. MY GRANDKID SANCHU PLAYS THE PIANO.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

Sri Krishna Janmashtami

Hariharan sings Krishna Nee Begane in Sai Babas presence

புதன், ஆகஸ்ட் 17, 2011

kisne banaya phoolon ko ?

My grandkid Dinesh illustrates .

  •   KISNE BANAAYA PHOOLON KO ? 
  • KISNE BANAYA CHIDIYON KO ? 
  • KISNE BANAYA THAARON KO? 
  • PRABHU NE FROM SWARG SE. 
  • KISNE BANAYA SAARI DUNIYA
  • PRABHU NE HI FROM SWARG SE. 

WHO CREATED ALL THE FLOWERS, BIRDS, STARS AND IN FACT THE ENTIRE UNIVERSE ? 

WELL ! IT IS THE LORD FROM HEAVENS. 
SO THANK HIM FOR all HIS GRACE.

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

Shastriya Sangeet (Raag JhinJyothi) Bhajan on Sri Ramachandra - "Ram Shl...

Sri Ram Jai Ram"Sri Ram Jai Ram"
POPULAR BHAJAN SINGER HARIHARAN . RAMAYAN BHAJAN.

ஹரிஹரன் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.
ராகம் ஜின்ஜின் ஜ்யோதி

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

GAYATHRI MANTHRA

சனி, ஆகஸ்ட் 13, 2011

YAJURVEDHA UPAKARMA 13 aUGUST 2011



upakarma today
What follows is the Introduction and first part consisting of KAMOKARISHID MANURA KARISHID JAPAM.

http://youtu.be/UnlxOB0cXXY

KARA VARSHAM SRAVAN MONTH POWERNAMAASYAAYAM

THIS IS FOLLOWED BY MAHA SANKALPAM (PART 2) AND YAGYOPAVITHA DHARANAM AND KANDARISHI THARPANAM. (PART 3 AND 4) 
PLEASE FOLLOW THE CHAIN GIVEN IN PART 1.

KINDLY PASS ON THE RICH TRADITION AND CULTURE INITIATED BY OUR ANCESTORS. 
AND THAT WILL BE THE DISPLAY OF OUR GRATITUDE TO OUR ANCESTORS.



வியாழன், ஆகஸ்ட் 11, 2011

வரலக்ஷ்மி வரதம் வரும் வெள்ளி 12 ஆகஸ்ட் 2011

வரலக்ஷ்மி வரதம்  வரும் வெள்ளி 12 ஆகஸ்ட் 2011 
சம்பிரதாயப்படி பூஜை செய்ய விருப்பம் உடையவர்கள், இந்த போஸ்டின் தலைக் கிளிக்கிடவும்.  

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

marghazhi Thingal mathi niraintha nannaalay,

My grandkid Akshaya Sings. raag naattai.

சனி, ஆகஸ்ட் 06, 2011

A very happy birthday to you this day Balu.

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

நாளென் செயும்வினை தானென்

  • நாளென் செயும்வினை தானென் செயுமெனை 
  • நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு
  • தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ்
  • சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
நமக்கு இன்னல்கள் தோன்றும் காலத்தெல்லாம் ஜோதிடத்தை நாடி, ஒன்பது கோள்கள் அவற்றால் நமக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றி அறிய முற்படுவோம்.
நமக்கு கந்தன் அருள் இருப்பின் அந்த ஆறுமுகனின் விழி நம் வழியிலே வீழ்வின் நம் கோள்களைப் பற்றி என் கவலை யுர வேண்டும் ?
அந்த ஷண்முகன், கந்தன், குகன், ஆறுமுகன், வேலன் நம்மை கோள்களிலிருந்து என்றுமே காப்பான். இது திண்ணம்.

கந்தர் அலங்காரத்தில் இது முப்பத்தி எட்டாவது பாடல்.   அருணகிரிநாதர் அருளிச் செய்தது.
தினமும் பாடி முருகனின் அருள் பெறுக.

சனி, ஜூலை 30, 2011

MAHALAKSHMI astothram மஹாலக்ஷ்மி அஷ்டோத்ரம்

ஒவ்வொரு நாமாவின் ஆரம்பத்தில் 'ஓம்' மற்றும் இறுதியில் 'நம:' சேர்த்துக் கொள்ளவும். ஓம் ப்ரத்ருத்யை நம: விக்ருத்யை வித்யாயை ஸர்வபூத-ஹிதப்ரதாயை ச்ரத்தாயைஅ விபூத்யை ஸ¤ரப்யை பரமாத்மிகாயை வாசே பத்மாலயாயை நம; பத்மாயை கசயே ஸ்வாஹாயை ஸ்வதாயை ஸுதாயை தன்யாயை ஹிரண்மய்யை லக்ஷ்ம்யை நித்யபுஷ்டாயை விபாவர்யை நம: அதித்யை தித்யை தீப்தாயை வஸுதாயை வஸுதாரிண்யை கமலாயை காந்தாயை காமாக்ஷ்யை க்ரோதஸம்பவாயை அனுக்ரஹப்ராயை நம: புத்தயே அநாகயை ஹரிவல்லபாயை அசோகாயை அம்ருதாயை தீப்தாயை லோகசோக-விநாசின்யை தர்மநிலயாயை கருணாயை லோகமாத்ரே நம பத்மப்ரியாயை பத்மஹஸ்தாயை பத்மாக்ஷ்யை பத்மஸுந்தர்யை பத்மோத்பவாயை பத்மமுக்யை பத்மநாபப்ரியாயை ரமாயை பத்மமாலாதராயை தேவ்யை நம: பத்மின்யை பத்மகந்தின்யை புண்யகந்தாயை ஸுப்ரஸன்னாயை ப்ரஸதாபிமுக்யை ப்ரபாயை சந்த்ரவதனாயை சந்த்ராயை சந்த்ரஸஹோதர்யை சதுர்ப்புஜாயை நம: சந்த்ரரூபாயை இந்திராயை இந்து-சீதலாயை ஆஹ்லாதஈஜனன்யை புஷ்ட்யை சிவாயை சிவகர்யை ஸத்யை விமலாயை விச்வஜனன்யை நம: துஷ்ட்யை தாரித்ர்ய-நாசின்யை ப்ரீதிபுஷ்கரிண்யை சாந்தாயை சுக்லமால்யாம்பராயை ச்ரியை பாஸ்கர்யை பில்வநிலயாயை வராரோஹாயை யசஸ்வின்யை நம: வஸுந்த்ராயை உதாராங்காயை ஹரிண்யை ஹேமமாலின்யை தனதானயகர்யை ஸித்தயே ஸ்த்ரைணஸெளம்யாயை சுபப்ரதாயை ந்ருபமேச்மகதானந்தாயை வரலக்ஷ்ம்யை நம: வஸுப்ரதாயை சுபாயை ஹிரண்யப்ராகாராயை ஸமுத்ரதனயாயை ஜயாயை மங்களா தேவ்யை விஷ்ணுவக்ஷஸ்தல-ஸ்திதாயை விஷ்ணுபதன்யை ப்ரஸன்னாக்ஷ்யை நாராயணஸமாச்ரிதாயை தாரித்ர்யத்வமஸின்யை தேவ்யை ஸர்வோபத்ரவவாரிண்யை நவதுர்க்காயை மஹாகாள்யை ப்ரஹ்மவிஷ்ணு - சிவாத்மி காயை த்ரிகாலஜ்ஞானஸம்பன்னாயை புவனேச்வர்யை நம: ஓம் அன்புடன் கவிநயா

வியாழன், ஜூலை 28, 2011

அபிராமி அந்தாதி


அப்படி என்ன தூக்கம் பகல் நேரத்திலே ?
நான் ஒன்னும் தூங்கல்லே!  அபிராமி அந்தாதி கண்ணை மூடிண்டு சொல்லிண்டு இருக்கேன் .

தலைப்பைக் கிளிக்கினால், அபிராமி அந்தாதி கேட்கலாமே !!

புதன், ஜூலை 27, 2011

Aadi Kiruthigai at BridgeWater, NJ 14 Aug 2009

ஞாயிறு, ஜூலை 24, 2011

ஞாயிறு, ஜூலை 03, 2011

உறங்கிடுவீர் உறங்கிடுவீர்

sivakumaran kavidhaikal on nuances of sleep http://sivakumarankavithaikal.blogspot.com/
  • இன்றிரவு உறக்கத்தில் எங்கிருப்பேன் நான் ? 
  • நன்றாக உறங்கியபின் "நான்" இருப்பேனா ?
  • தொன்றுதொட்டு வருவது தான் தூக்கம் எனினும்
  • ஒன்று மட்டும் விளங்கவில்லை, உறக்கம் என்ன ? ஏன்?
  •  
  • உறங்கியபின் வருகின்ற உலகம் எதுவோ ? 
  • இறங்கிவரும் விண்ணுலகம் என்ப ததுவோ ?
  • கிறங்க வைக்கும் மது கொடுக்கும் மயக்கமதுவும்
  • நிறங்களற்ற உறக்கமதின் நிலைமையும் ஒன்றோ ? 
  •  
  • விழித்திருக்கும் போதிருக்கும் வேதனை எல்லாம்
  • ஒழிந்திடுமோ ஒளிந்திடுமோ உறக்கம் வந்ததும் ?
  • கழிப்பதுவும் வகுப்பதுமாய் காலம் இருக்க
  • செழிப்புடனே நித்திரையில் சிரித்திருப்பதேன் ?

There are more stanzas in this song on sleep. Please click on to his blog. subbu thatha sings on Raag kanada. PLEASE CLICK AT THE TITLE TO MOVE ON TO THE BLOG OF THE AUTHOR OF THE SONG.

WELL !  FOR THOSE WHO ARE NOT HAVING ADEQUATE SLEEP or THOSE WHO SLEEP BUT COMPLAIN OFTEN THAT THEY DO NOT SLEEP , KINDLY CLICK HERE OR LOG ON TO:
http://nithra.com

புதன், ஜூன் 29, 2011

கோளறு பதிகம்

கோளறு பதிகம். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம். "வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியார‌ வர்க்கு மிகவே." "என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும் உடனாய நாள்க ள‌வைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார‌வர்க்கு மிகவே. " "உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே. " "மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்களான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதம‌வையும் அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல் கொடு நாகமோடு கரடி ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய் வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த வத‌னால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே."

திங்கள், ஜூன் 27, 2011

The exceptionally stunning saree

Please click the URL above to see the amazing saree.
இந்த புடவை விலை மிகக் குறைவாம். 
ரூபாய் 40 லட்சம் தானாம்.
அப்படி என்ன இதில் ?
12 விலை மதிப்பற்ற ரத்தினங்கள் இருக்கிறதாம்.
கூடவே ராஜ ரவி வர்மாவின் 12 ஓவியங்களும் உண்டாம்.

ஞாயிறு, ஜூன் 26, 2011

kichan

வியாழன், ஜூன் 23, 2011

INDECO HOTELS SWAMIMALAI

ஞாயிறு, ஜூன் 05, 2011

Shakthi Sahitha Ganapathim

Worship Vinayaka To rid of all obstacles in your way.
அலை அலை போல ஆழி அலை போல
அடுத்து அடுத்து இன்னல்கள் வரினும்
மனம் சலியாது அவற்றை எதிர்நோக்கி
இன்னல்கள் களைந்து இன்பங்கள் பெற்றிட
ஈசன் ஒருவனே .  அவனே விநாயகன்.

This is the Nottuswaram as composed by Muthusamy Deekshitar.
taaLam: tishra Eka
Composer: Muttuswami Dikshitar
Language: Sanskrit.


  shakti sahita கணபதிம்
  shankarAdi sevitham
  virakta sakala munivara sura rAja vinuta குருகாம்
  bhaktAnipOSakam bhavasutam 
vinAyakam bhakthi mukthi pradhaam
  bhUSitAngam raktapadAmbujam bhAvayAmi

செவ்வாய், மே 31, 2011

Om Sakthi

Madam Kavinaya sings the Glory of Goddess Shakthi. Subbu thatha sings in Raag Hindholam.

ஞாயிறு, மே 29, 2011

Ghanam for removing fear of death

TRIAMBAKAM YAJAMAHE SUGANDHIM PUSHTI VARDHANAM

Thrayambakam Yajamahe

I turn Seventy today.

திங்கள், மே 16, 2011

ADHI SAKTHI KALI MARI

Thiru Sivakumaran has composed a lyric on Goddess Adhi Sakthi Please click the title to log on to his posting to see the text. Thatha sings in Raag Desh.

ஞாயிறு, மே 15, 2011

Shambho Maha Deva Deva

margabhandhu stotram composed by APPAYYA DEEKSHITAR as translated by Mrs.Lalitha Mittal. Please click the title of this posting to see the lyric in full

புதன், மே 11, 2011

சஞ்சல மகற்றிடுவாய் - அம்மா

Another song in praise of Goddess Durga Devi by Madam Kavinaya Raag Atana . For the lyric, please log on here:

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

Sai Baba -Aarti For Bhagavan

புதன், ஏப்ரல் 20, 2011

world most funny video ever.mp4

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

Sundarar

Sundarar

வியாழன், ஏப்ரல் 14, 2011

சித்திரை பூத்தது

Thatha Greets and Blesses all Grandkids sanju akshaya pichai dinesh kichan ON THE EVE OF TAMIL NEW YEAR DAY. THE ABOVE NEW YEAR SONG IS COMPOSED BY SMT.LALITHA MITTAL. PLEASE LOG ON TO HER BLOG BY CLICKING THE TITLE OF THIS POSTING. YOU KNOW THAT BLOG CONTAINS ONLY PRAYERS TO GOD.

புதன், ஏப்ரல் 13, 2011

மன்னுபுகழ் கோசலை குலசேகராழ்வார் பாசுரம்

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே! தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர் கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே! என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ! தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன் மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே! ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ! தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே! காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே! ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ! குலசேகராழ்வார் பாசுரம் http://koodal1.blogspot.com/2011/04/blog-post_12.html

ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

Om namah shivay dhun by Jagjit Singh

வெள்ளி, மார்ச் 25, 2011

OM SAKTHI POTRI POTRI





thiru sivakumaran
 திரு சிவகுமாரன் அவர்களது அருட்கவி வலைப்பதிவில் வெளியான அன்னையின் போற்றிப் பதிகம் இது. 
பக்தர் பெருமக்கள் யாவரும் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அன்னையைத் துதித்து போற்றி போற்றி என அவள் அருள் வேண்டிட வேண்டுகிறோம். 
இப்பாடலின் வரிகளை படிக்க இப்பதிவின் தலைப்பை கிளிக்குங்கள். 

முதல் இரண்டு பாடல்கள் ராகம் பூபாளம். . பின் வருவது பைரவி மற்றும் முகாரியின் கலவை. ரசியுங்கள். கேளுங்கள்.

ஞாயிறு, மார்ச் 20, 2011

வெள்ளி, மார்ச் 18, 2011

ஆதியும் அந்தமு மில்லா அரனவன்

My deep Gratitude to Thiru Sivakumaran has composed a prayer song of Goddess Devi. Thiru Sivakumaran is so well versed with all the chandams of Tamil poetry Grammar that the songs composed by him can be sung in any Raag of Carnatic Music. Devotional as the song it is, and Anandha Bhairavi is one such Raag which brings out the Bhakthi in the minds of the devotees , I thought of rendering the same in Raag anandha Bhairavi. for Full Text of the lyric, please click the title of this posting, to move on to the blog of the author.

வியாழன், மார்ச் 17, 2011

Thatha Wears new Denture

The second version of how Thatha came to wear a partial denture. thatha describes the events to his grandkids.

செவ்வாய், மார்ச் 15, 2011

appa with new teeth

ஞாயிறு, மார்ச் 13, 2011

amma sollum Slokangal.

வெள்ளி, மார்ச் 11, 2011

ho krishna !

 
My webfriend Sri Tanvee has written a beautiful song on Lord Krishna. I have sung this in dharbari कनाडा
please click the title of the posting to move on to his blog.
The song is so beautiful, that i chose to sing this anticipating his permission.
 हो कृष्ण हो कृष्ण मैं तुम्हारी 
कृष्ण श्रद्धा कृष्ण पूजा 
दिन दिन सीख चली 
कृष्ण प्रेम कृष्ण गीत निस दिन गाती चली 
कृष्ण धर्मं कृष्ण ज्ञान दिन दिन बात चली 
कृष्ण जोग कृष्ण लोग जीवन सुधर चली
कृष्ण दर्पण कृष्ण अर्पण दिन दिन करती चली 
कृष्ण माया कृष्ण लीला अखियाँ देख चली 
हो मुकुंद राम हो मुरारी हो कृष्ण हो बन्सिदार बनवारी 
दिन दिन गाती चली

 . Ho Krishna, Ho Krishna ,Ho Krishna , main tumhari... Krishna shraddha , Krishna pooja, Din din sikh chali. Krishna prem, krishna geet, Nisdin gaati chali, Ho Radhika raman, Ho Mukund Muraari Ho Krishna, Ho krishna,Ho Krishna main tumhari... Krishna dharma, Krishna gyaan, Din din baatt chali. Krishna jog, Krishna log, Jeevan sudhaar chali. Ho Naaraa-yanaa, Ho Manmohan giridhaari Ho Krishna, Ho Krishna, Ho Krishna , main tumhari... Krishna darpan ,Krishna arpan, Din din karti chali. Krishna maya, Krishna leela, Ankhiyaan dekh chali. Ho Thakurji, Ho Bansidhar banvaari Ho Krishna,Ho Krishna, Ho Krishna, main tumhari... Krishna bhakti, Krishna shakti, Din din badti chali. Krishna krupa, Krishna rupa, Mann mein basaye chali. Ho Keshav madhav, Sudharshan chakradhaari, Ho Krishna, Ho Krishna, Ho Krishna, main tumhari... http://allaboutkrishna.blogspot.com/2011/03/krishna-main-tumhari-bhajan.html?showComment=1299853481666#c3797993716232356107 *~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*!*~**~*~*~*~*~*~*~*~*~*~*

வியாழன், மார்ச் 10, 2011

அம்மா!

Madam kavinaya seeks a blessing from the Goddess. It is just unpolluted love of Her, the Goddess alone. Please click on the title to move on to her blog

செவ்வாய், மார்ச் 08, 2011

OM GANAPATHY OM



A masterpiece by Sri Sivakumaran . An incredible prayer to Lord Ganesh. Please click the title of this posting to proceed to the blog of the author of this song.

செவ்வாய், மார்ச் 01, 2011

My first Certificate of Excellence

Van
Posted by Picasa

வியாழன், பிப்ரவரி 24, 2011

கண்ணா! என் கவிதைக்குக் கருவாகி வா ;




New Delhi, Smt.Lalitha Mittal beseeches Lord Kanna to form Himself as the Core thought of her Song. Please click the title of this posting to move on to her blog for the text of the song. The song is sung ( ! ) by Subbu thatha in Raag Shanmugha priya.

சனி, பிப்ரவரி 19, 2011

காத்யாயனி கதம்ப வனவாசினி




காத்யாயனி கதம்ப வனவாசினி  சுப்பு தாத்தா தோடி ராகத்தில் பாட முயற்சி செய்கிறார்.
இப்பாடலின் ஆசிரியர் திரு சங்கர். அவரது வல்லைக்குச் செல்ல தலைப்பைக் கிளிக்கவும். 

வியாழன், பிப்ரவரி 17, 2011

எம்பெருமான்

thighzh reflects how LORD SHIVA got integrated in her inner self. please click the title to move on to the blog of the author of this song. subbu thatha just tries to sing this venbaa in Raag Ataana.

புதன், பிப்ரவரி 16, 2011

Wedding Anniversary of Our Daughter



Happy Valentine Day

என்னுடைய வேலன்டைனுக்கு இன்னிக்கு க்ரீடிங்க்ஸ்.
அது சரி, என்னுடைய வேலண்டினா யாரு ?


இங்கே பாருங்கள்.














திங்கள், பிப்ரவரி 14, 2011

Happy VALENTINE DAY !!!

வெள்ளி, பிப்ரவரி 11, 2011

Happy VALENTINE DAY !!!



புதன், பிப்ரவரி 09, 2011

திருவடி நிழலில் ஒருஇடம் தருவாய்

A prayer song by Madam Kavinaya. Please click at the title to log on to her blog. Subbu thatha thinks that he has sung the lyric in Raag kambhodhi. With almost all teeth gone, subbu thatha is left to wonder whether listeners are able to decipher words. God Save them. FOR THOSE OF YOU, WHO ARE ANGRY WITH SUBBU THATHA, FOR A CHANGE, THE PURITAN SWARA MANNAR, THE LEGENDARY Madurai Mani Iyer sings UN THIRUVADI CHARANAM ENDRU NAAN NAMBHI VANDHEN. RAAG KAMBHODI

ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

மாதவனைக் கூப்பிடுவோம்




Earlier, on seeing the venbaa of Thighazh in her blog http://venbaavanam.blogspot.com I sang the paadal in Raag Anandha Bhairavi. One of our esteemed viewers Sri Appadurai suggested that I sing the same in Raag Chenchuritti. Hence another attempt in raag Chenchurutti. மாவாலே கோலமிட்டு மாதவனைக் கூப்பிடுவோம் பாவாலே பண்ணிசைத்துப் பாலகனைக் கூப்பிடுவோம் நாவாலே நாம்பாடி நாதனைக் கூப்பிடுவோம் வாவா மணிவண்ணா வா

சனி, பிப்ரவரி 05, 2011

நீ வேய்ங்குழல் ஊத நிதம்

Sri Shankar has penned what I must say a beautiful lyric . I thought of singing the song in a different raaga . I DID IT THOUGH THE DENTIST HAD PRACTICALLY REMOVED ALL MY TEETH. WITH THE PAINKILLER DICLOMOL, I HAD DEVELOPED ABDOMINAL PAIN ALSO. EVEN WITH THIS, I COULD NOT RESIST SINGING THE SONG. TO KNOW THE CONTENTS OF THE SONG ( FOR I BELIEVE YOU MAY NOT BE TO DECIPHER WHEN I SING IT) PLEASE CLICK AT THE TITLE AND LOG ON TO http://kannansongs.blogspot.com

sayee ram சாயி ராம்



shirdi sayee bhajan written by Ms.B.N.Kala, a devotee of Shirdi Sayee Baba.. Please click at the title to move on to her blog.

செவ்வாய், பிப்ரவரி 01, 2011

தாயே! கடைதேற்று!

An imaginative poetry by Mrs.Lalitha Mittal Kindly click the title of this posting to log on to her blog.

திங்கள், ஜனவரி 31, 2011

Tom and Jerry Car Race

வியாழன், ஜனவரி 27, 2011

சரணம் அய்யப்பா (ஹரிவராசனம் மெட்டு )

பாடலை இயற்றிய திரு சிவகுமாரன் அவர்கள் வலைக்குச் செல்ல தலைப்பை கிளிக்கவும்.
  சரணம்  அய்யப்பா
    (ஹரிவராசனம் மெட்டு )
    சரணம் அய்யப்பா - சுவாமி சரணம் அய்யப்பா
    சரணம் அய்யப்பா - சுவாமி சரணம் அய்யப்பா
   
    அரனின் மோகனம் அரியின் யௌவனம்
     அளித்த சீதனம் அய்யன் உதித்தனன்
    பரம தேவனின் பாலன் அய்யப்பன்
      பதங்கள் தேடிஎன் பாடல் அர்ப்பணம் (சரணம்)
   
    வேங்கை வாகனம் விரும்பும் பாலகன்
     விரிந்த கானகம் உறையும் நாயகன்
    தாங்கும் பூமகன் தாளைத் தேடிஎன்
      தமிழில் கோர்த்திடும் மாலை சமர்ப்பணம்.(சரணம்..)
   
    மாலை அணிந்ததும் வேண்டும் கண்ணியம்
     மறந்தும் தவறுகள் தவிர்த்தல் புண்ணியம்
    காலை மாலையும் கடவுள் எண்ணமாய்
      காக்கும் விரதத்தால் கருணை திண்ணமாம்.(சரணம்..)
   
    பாதை முழுவதும் பாயும் முட்களாம்
      பாதம்  இடறியே பார்க்கும் கற்களாம்
    சோதனைகளைத் தாண்டி அய்யனின்
      சரணம் பாடுங்கள் வாழ்க்கை மலரலாம் ( சரணம்..)
   
    கட்டும் இருமுடி கனப்ப தில்லையே.
       கால்கள் வீங்கியும் வலிப்பதில்லையே.
    அட்ட திக்குகள் ஆளும் ஐயப்பன்
      அருளைப் பொழிவதால் அல்லல் இல்லையே. ( சரணம்...)
   
    பாரம் தலையிலே; பக்தி நெஞ்சிலே
      பாவக் கணக்குகள் பரமன் கையிலே
    வீர மணிகண்டன் பேரைச் சொன்னதும்
      விதியின் கடுமைகள் விலகிப் போகுமே. ( சரணம்..)
   
    பேட்டைத் துள்ளலில் வேடம் போடுங்கள்.
      பேதம் இன்றியே ஆடிப் பாடுங்கள்.
    காட்டுப் பாதையை கடந்து ஓடுங்கள்
       காட்சி  தருகிறான்-(அவனை) கனிந்து தேடுங்கள். (சரணம்..)
   
    பம்பை நதிப்புனல் பாவம் கரைத்திடும்
      படிகள் பதினெட்டும் பாடம் உரைத்திடும்
    நம்பி வந்திடில் நலங்கள் சேர்ந்திடும்
      நாளும் வணங்கினால் ஞானம் பிறந்திடும் ( சரணம்..)
   
    பாயும் புலியிடம் பாலைக் கறந்தவன்
      பாவி அரக்கியை அழிக்கப் பிறந்தவன்
    நோயும் பிணிகளும் நீக்கும் மருந்தவன்
      நுழைந்து பாருங்கள் (அவன்) இதயம் திறந்தவன் (சரணம்..)
   
    ஜோதி தரிசனம் கோடி புண்ணியம்
      சோகம் துயரங்கள் ஓடும் நிச்சயம்
    ஆதி பரமனும் அழகன் விஷ்ணுவும்
      அய்யன்  உருவிலே தோன்றல் சத்தியம். ( சரணம்..)
   
    சாமி அய்யப்பா என்னும் சரணங்கள்
      சபரி மலையிலே ஒலிக்கும் தருணங்கள்
    பூமி கைகளில் அடங்கும் பாருங்கள்
      புதிய சுகமது உணர வாருங்கள்      ( சரணம்..)
   
    ........சுவாமியே......ய்  சரணம் அய்யப்பா......
   




ஞாயிறு, ஜனவரி 23, 2011

THYAGARAJA ARADHANA ;

வெள்ளி, ஜனவரி 21, 2011

Enga Thatha Paatti 43rd Marriage Anniversary Today ...EPPADI IRUNTHAVANGA NAANGA EPPADI AAYITTOM PARUNGA.

மாங்கல்யம் தந்து நா நே நா ...அந்த நேரம் அதாவது 21 ஜனவரி 1968
Posted by Picasa


அமெரிக்காவிலே ஆமாம் பெப்ருவரி 2009 லே எடுத்தது 
Posted by Picasa



thathavum paattium appa kooda agliyaththaan irukkaanga...!!!!

புதன், ஜனவரி 19, 2011

Bhaj Govindam துதி கோவிந்தனை




புது தில்லியில் வசிக்கும் திருமதி லலிதா மிட்டல் அவர்கள் ஆதி சங்கரரின் பஜ கோவிந்தத்தை தமிழில் மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு இல்லை எனினும் கோவிந்தத்தின் சாரம் தெளிவாக இருக்கிறது. இந்த சுப்பு தாத்தா சும்மா இருக்க முடியாத தாத்தா .  அதனால் அந்த பாடலை பல ராகங்களில் பாட முயற்சி செய்து இருக்கிறார்.  முதல் 11 பாடல்கள் மட்டும்.  மற்றவை பிறகு வரும்.
திருமதி லலிதா மிட்டல் அவர்கள் வேலைக்குச் செல்ல பதிவின் தலைப்பைச் சொடுக்கவும்.

   1. பஜகோவிந்தம் பஜகோவிந்தம் .பஜகோவிந்தம் மூடமதே சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே  நஹிநஹி ரக்ஷதி  டுக்ரிங்கரணே]


           துதி கோவிந்தனை,துதிகோவிந்தனை
           கதி கோவிந்தனே, மடமதியே!
           கதவினைக்காலன் தட்டிடும் நேரம்
           உதவிடுமோ உந்தன்  இலக்கண  ஞானம் ?


2. [மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்  .குரு சத்புத்தி மனசி வித்ருஷ்ணாம்
யல்லபசே நிஜகர்மோபாத்தம் .வித்தம்  தேன  விநோதயசித்தம்  ]
          மூடா!பொன்பொருள் மோகம் அறுப்பாய் ;
         நாடுவாய் மெய்ப்பொருள்  நிர்மல நெஞ்சால் ;
         பாடுபட்டுழைத்து நீதேடிடும்  தனத்தால்
        கூடிடும் சுகத்துடன் குறையின்றி வாழ்வாய்.


3. [நாரிஸ்தனபர நாபிதேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம்
 எதன்மான்சவசாதிவிகாரம் மனசி விசிந்தய வாரம் வாரம் ]
           வெறியூட்டும் இள வனிதையர் தோற்றம்,
           வெறுந் தோல்மூடிய சதைகளின் மாற்றம்,
           வெறுப்பூட்டும் இந்த உண்மையை உணர்வாய்.
           மறவாதிருக்கப் பலமுறைநினைப்பாய்.


4. [நளினிதளகதஜலமதிதரலம் தத்வஜ்ஜீவிதமதிசயசபலம்
வித்திவ்யாத்யபிமானகிரஸ்தம் லோகம் சோகஹதம் ச சமஸ்தம் ]
            தாமரை இலையினில் நீர்த்துளிபோலே
            பூமியில் வாழ்வும் நிலையற்றதாமே.
             ரோகமும் பீதியும் சேர்ந்ததோர் சோக
            சாகரமிந்த உலகென உணர்வாய்.

 
5.[யாவத்வித்தோபார்ஜனசக்த--ஸ்தாவன்நிஜபரிவாரோ ரக்த :
 பச்சாஜ்ஜீவதி ஜர்ஜரதேஹே வார்த்தா கோபி ந ப்ருச்சதி கேஹே ]

           சம்பாதித்திடும் தெம்புள்ளவரையில்
          அன்பாய்ப் பழகிடும் உனபரிவாரம்
         ஓடாய் உழைத்துநீ ஓய்ந்திடும் நேரம்
         வேண்டாதவனாய் ஒதுக்கிடும் உன்னை.

 
6.[யாவத்பவனோ நிவசதி தேஹேதாவத்ப்ருச்சதி குசலம் கேஹே
 கதவதி வாயௌ தேஹாபாயே பார்யா பிப்யதி தஸ்மின்காயே]
         சுவாசமிருக்கும் வரையினிலுன்மேல்
         பாசம் காட்டும் உன்பரிவாரம்.;
      உயிரற்ற  உன்னுடல் கண்டுன்மனைவியும்
      பயந்து ஒதுங்கிப்  பதுங்குவதுண்மை!


7.[பாலஸ் தாவத் க்ரீடாசக்த --ஸ்தருணஸ்தாவத்த ரூணிசக்தஹ
 வ்ருத்தஸ்தாவச் சிந்தாசக்தஹ பரேப்ரும்ஹாணி கோபினசக்தஹா]


          விளையாட்டில் சிறுவயதை கடந்தாய் ;
           இளமையைச் சிற்றின்பத்திலிழந்தாய்;
        முதுமையில் குடும்பக் கவலையில் கவிழ்ந்தாய்;
          முழுமுதற்கடவுளை முற்றிலும் மறந்தாய்.


8.[கா தேகாந்தா கஸ்தே புத்திரஹ சன்சாரோயமதீவ விசித்ரஹ
கஸ்யம் த்வம் கஹ குத ஆயாத -ஸ்தத்வம் சிந்தய ததிஹ ப்ராதஹ ]

             யாருந்தன் மனைவி? யாருந்தன் பிள்ளை/  ?
            பாரினில் பந்தங்கள் விசித்திரத்தொல்லை !
             '"யாருடையோன் நீ ? யார் நீ ?'"என்றே
            ஆராய்ந்துணர்வாய் மெய்மையை நன்றாய் .


9.[சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்  நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல சித்தம் நிஷ்ச்சலசித்தே ஜீவன்முக்திஹி  ]


            தேய்ந்திடுமாசை தூயரைச் சேர்ந்தால் ;
            மாய்ந்திடும் மாயை ,ஆசையுந்தேய்ந்தால் ;
           எட்டிடும் மெய்ப்பொருள் ,மாயை மாய்ந்தால்;
           கிட்டிடும் ஜீவன் முக்தியுமதனால்.


10.[வயசிகதே கஹ காமவிகாரஹ சுஷ்கே நீரே கஹ    காசாரஹ
க்ஷீணோ வித்தே கஹ பரிவாரோ ஞாதே தத்வே கஹ சன்சாரஹ]


           முதுமையில் மோஹத்திற்கிடமேது?
          வறண்ட நீர்நிலை ஏரியாகாது.
           சொத்திழந்தோனுக்கு சொந்தங்களேது?
           சத்தியமுணர்ந்தபின் பந்தங்களேது?


11.[மா குறு தனஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷத்காலஹ  சர்வம்
மாயாமயமிதமகிலம் ஹித்வா ப்ரம்ஹபதம் த்வம் பிரவிஷா விதித்வா ]


           பணம்,படை,இளமையால் ஆணவம் வேண்டாம் ;
          கணத்தினிலழிபவை இவையென அறிவாய் ;
          மாயாமயமிந்த வாழ்வென உணர்ந்தே
          தூயப்ரம்ம நிலைதனை யடைவாய் .

இதற்குப் பின்னே வரும் பாடல்கள் அடுத்த பதிவில் பாடப்பெறும்.

 12.  [தினமபி ரஜனி சாயம் ப்ராதஹ சிஷிர வஸந்தௌ புனராயாதஹ
   காலஹ  க்ரீடதி கச்சத்யாயுஹு ததபின முஞ்சத்யாஷாவாயுஹு ]
            புலரும்பொழுதுமாலையாய் மாறும் ;
            குளிரும்பனியும் வசந்தமாய் மாறும் ;
            இளமை மாறி முதுமை வரினும்
           உளத்தாசை  மட்டும் மாறுவதில்லை !


13.[கா தே காந்தா தனகதசிந்தா வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா
 க்ஷணமபி சஜ்ஜனசங்கதிறேகா பவதிபவார்ணவதரணே நௌகா ]


               பத்தினி,சொத்தென சிந்தனை நன்றோ?
              அத்தனையும் அவனருளாலன்றோ ?
              உத்தமர் உறவே பிறவிக்கடலினை
              பத்திரமாகக் கடந்திட உதவும் !


14.[ஜடிலோமுண்டி லுஞ்சிதகேஷஹ காஷாயாம்பரபஹுக்ருதவேஷஹ
யஷ்யன்னபி ச ந யஷ்யதி மூடோ ஹசுதரநிமித்தம் பஹுக்ருதவேஷஹ ]
                சடைமுடி வளர்த்து தபஸ்விபோல் தெரிவார் ;
                முடித்தலை மழித்து மகான்போல் காண்பார்;
               உடுத்திய காவியில் துறவிபோல் திரிவார் ;
              நடிப்பெல்லாம் தம் வயிற்றை நிறப்ப!


15.[அங்கம் கலிதம் பலிதம் முண்டம் தஷனவிஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் ததபி ந முஞ்சத்யாஷாபிண்டம் ]


             தள்ளாமையால் உடல் தளர்ந்துவிட்டாலும் சுகத
             வெள்ளியாய்த்தலைமுடி வெளுத்துவிட்டாலும்
           பல்லிழந்தே வாய் பொக்கையானாலும்
           பொல்லாத ஆசைகள் போவதேயில்லை !


16.[அக்ரே வன்ஹிஹி ப்ருஷ்டே பானுஹு ராத்ரௌ சுபுக சமர்ப்பிதஜானுஹு
கரதலபிக்ஷஸ்தருதலவாசஹ ததபி ந முஞ்சத்யாஷாபாஷஹ ]
            துறவியாய் வெயிலில் குளிர்க்காயந்திருப்பார்;
            உறங்கிட முடங்குவார் காட்டாந்தரையில் ;
           கரமேந்தி உணவு ;மரத்தடி வாழ்க்கை;
          இருப்பினும் துறத்துது பலவித வேட்கை ;


17.[[குருதே கங்காசாகரகமனம் வ்ருதபரிபாலனமத்வா தானம்
ஞானவிஹீனஹ சர்வமதேன முக்திம் ந பஜதி ஜன்மஷதேன]
         நிர்மலகங்கையில் நீராடிடினும்
       நியமமாய் விரதங்கள் அனுசரித்திடினும்
      உன்னை நீ  உணராவிடில் கிட்டாது
      ஜன்மங்கள் நூறெடுத்தாலும் முக்தி !


18.[சுரமந்திரதரு மூலநிவாசஹ ஷய்யாமூதலமஜினம் வாசஹ
ஸர்வப்பரிக்ரஹமோகத்யாகஹ கஸ்ய சுகம் ந கரோதிவிராகஹ]
         தங்கிட ஆலயமும் தரு நிழலும் ;
        அங்கத்தை மூடுவதோ தோலாடை ;
      இங்ஙனம் யாவும் துறந்தவர் மனத்தில்
      பொங்கிடும் மகிழ்ச்சி மங்குவதேது ?



19.[ யோகரதோவா  போகரதோ வா சங்கரதோ வா சங்கவிஹீனஹ
  யஸ்யப்ரம்மணி ரமதே சித்தம் நந்ததி நந்ததி நந்தத்யேவ]
             யோகமோ,போகமா எதில் சுகித்தாலும்
             சினேகமோ,தனிமையோ எதில் மகிழ்ந்தாலும்
             மனம் பரம்பொருளுடன் லயித்துவிட்டாலோ
            ஆனந்தம்!என்றும் பரமானந்தம் !


20. [பகவத்கீதா கிஞ்சித தீதா கங்காஜலலவகணிகா பீதா
 சக்ருதபி ஏன முராரி சமர்ச்சா த்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா ]
            சிலவரியேனும் கீதை படிப்போர்க்கும் ,
           துளியேனும் கங்கை நீர் குடிப்போர்க்கும் ',
        அரியைக் கணமேனும் துதிப்போர்க்கும் ,
        ஒருகாலும் யமபயமென்பதே இல்லை.


21. [புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனிஜடரே சயனம்
 இஹ சன்சாரே பஹுதுஸ்தாரே க்ருபயா பாரே பாஹி முராரே ]
            மாண்டபின் ஜனனம்;மறுபடி மரணம் ;
            மீண்டும் தாயின் கர்ப்பத்தில் சயனம் ;
            பிறவிக்கடலிதைக் கடப்பது கடினம்;
            கரை சேர்த்தருள்வாய் ,முராரி!சரணம் .


22.[ரத்யாசற்படவிரசிதகந்தஹ புண்யாபுண்யதிவர்ஜிதபந்தஹ
யோகி யோகநியோஜிதசித்தோ ரமதே பாலோன்மத்தவதேவ ]
            வழியிலகப்பட்ட கந்தலுடுத்தி
            பழி,புகழ் கடந்ததோர் நெறி கடைபிடிக்கும்
           யோகியர் ஈசனுள் ஐக்கியமாகி
           குழந்தைகள் போலே குதூகலித்திருப்பார்.


23.[கஸ்த்வம் கோஹம் குத ஆயாதஹ காமே ஜனனி கோ மே தாதஹ
இதி பரிபாவய சர்வமசாரம் விஸ்வம் த்யக்த்வா ச்வப்னவிசாரம் ]
          "  நான் யார்?நீ யார்? யார் தாய், தந்தை?
            நாநெங்கிருந்து வந்தேன் ?'"என்றே
           தேறியுணர்வாய், கனவுமயமான
          பாருலகத்து பந்தமறுத்தே


24.   [த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு -வ்யர்த்தம் க்ருப்யசி மய்யசஹிஷ்ணுஹு
  சர்வஸ்மின்னபி பஷ்யாத்மானம் சர்வத்ரோத்ஸ்ருஜ பேதஞானம்]
                   அனைத்திலும் நிறைந்த அரியை உன்னுள்
                   உணர்ந்திடத் தேவை  உள்ளத்தில் பொறுமை ;
                   அஞ்ஞானத்தால் வரும் பேதமொழித்தே
                  என்றும் எதிலும் அவனையே காண்பாய் .


25.[ஸ்ஹத்ரௌ மித்ரேபுத்ரே பந்தௌ மா குரு யத்னம்  விக்ரஹஸந்தௌ
 பவ சமசித்தஹ சர்வத்ரம் த்வம் வாஞ்சஸ்யசிராத்யதி   விஷ்ணுத்வம் ]
                   உற்றார்,அற்றாருடன் உறவை வளர்ப்பதில்
                 பொற்சமயம் வீணாக்குதல் வேண்டாம் .
                  உள்ளம் சமநிலையடைந்து நிலைத்தால்
                  உனக்கும் கிட்டும் விஷ்ணுத்துவமே!


26.[காமம் குரோதம் லோபம் மோஹம் த்யக்த்வாத்மானம் பாவய கோஹம்
 ஆத்மஞானவிஹீனா மூடாஹ தே பச்யந்தே நரகநிகூடஹ ]
                 காமக்ரோத லோபமோகம் ஒழித்து  
               '' நானே அவன் ''என்ற ஞானம் பெறுவாய் .
               மெய்ப்பொருள் தேடா மூடர்கள் இந்த
                வையத்திலேயே உணர்வார் நரகம் !


27.[கேயம் கீதா நாம சஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம்
 நேயம் சஜ்ஜன சங்கே சித்தம் தேயம் தீனஜனாய ச வித்தம் ]
               கீதையும் ,அரியின் ஆயிரம்பேரும்
               ஓதியே த்யாநிப்பாய் திருமகள் பதியை;
               தூயோர் நட்பை நாடுவாய் என்றும் ;
               தீனருக்கு தனம் ஈந்து மகிழ்வாய்.


28.[சுகதஹ  க்ரியதே  ராமாபோகஹ பஷ்சாதந்த ஷரீரே ரோகஹ
யத்யபி லோகே மரணம் சரணம் ததபி ந முஞ்சதி பாபாசரணம்]
               இன்பத்தில் மூழ்கி இளமை இழப்பார் ;
               பின்விளைவே பல ரோகமென்றரியார்;
              மரணம் உறுதி என்றறிந்தி ருந்தாலும்
              துறவாரே தன் தீயநெறிகளை !


29.  [ அர்த்தமனர்த்தம் பாவய நித்யம் நாஸ்தி தத ஹ சுகலேஷஹ சத்யம்
  புத்ராதிபி தனபாஜாம்  பீதிஹி  சர்வத்ரைஷா  விஹிதா ரீதிஹி  ]
                      தனத்தால் சுகமில்லை  சோகமே  என்று
                      அனுதினம் நினைப்பாய் மீண்டும்  மீண்டும்
                    தனயனும் சொத்தால் உன்பகையாவான் .
                    மனித இயல்பிதை மறந்திடவேண்டாம்  .


30.[பிராணாயாமம் ப்ரத்யாஹாரம்  நித்யநித்யவிவேகவிசாரம்
 ஜாப்யசமேத சமாதிவிதானம் குர்வவகானம் மகதவகானம் ]
                    புலனடக்கி  சுவாசம்  சீராக்கி
                   அலசிஆய்வாய்   எது நித்தியமென்றே
                  மௌனத்தில் மூழ்கி ஜபத்தினில்  ஆழ்ந்து
                   கவனமாய் செயல்படு இலக்கினையடைய  .


31.    [குருச்சரணாம்புஜ நிற்பர பக்தஹ சந்சாராதசிராத்பவமுக்தஹ
     செநிந்த்ரியமானச  நியமாதேவம்  த்ரக்ஷ்யசி  நிஜஹ்ருதயச்தம் தேவம்  ]
                     பரமாய்குருவினை நம்பிடும்  பக்தா!
                     அறநெறிகாத்து ஐம்புலனடக்கி
                      பிறவிக்கடலை  எளிதாய்க் கடப்பாய்!
                    இறைவனையுன்னுள்  அனுபவித்திருப்பாய்  !
==========================================================================                                                                                                
    
        .
Posted by Lalitha Mittal