JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, ஜூலை 31, 2009

Varalakshmi Vratham

  Please click at the title to move on to my aanmikam blog for PUJA MANTHRAS AND SONGS RELATED TO VARALAKSHMI VRATHAM
Posted by Picasa

திங்கள், ஜூலை 27, 2009

கற்பக கணபதியே

கற்பக கணபதியே பிள்ளையார் பட்டியில் உறைநிதியே! சொற்பதம் கடந்தவனே உந்தன் பொற்பதம் பணியவந்தோம்! ஆறடி உயரத்திலே அதி யற்புத வடிவத்திலே கோதறு குணத்தினிலே வளர் பார்புகழ் கணபதியே! கல்லினால் ஆனவனே கருணையில் கரும்பென இனிப்பவனே! புல்லினால் பூஜித்தாலும் அகம் மிகமகிழ்ந் தருள்பவனே! உமையவள் திருமகனே எம்மை இமையென காப்பவனே! குறைகளை தீர்ப்பவனே எங்கள் சுமைகளை ஏற்பவனே! வலம்புரி நாயகனே பழம்பெற இறைவலம் வந்தவனே! மறைகளின் அதிபதியே எங்கள் மனம்அமர் குணநிதியே! --கவிநயா பிள்ளையார்பட்டி பிள்ளையார் மேல ஒரு பாட்டு எழுதலாமேன்னு சுப்பு தாத்தா ஒரு முறை சொன்னார். அவர் சொன்னவுடனேயே எழுதிட்டேன்; இருந்தாலும் இப்பதான் பதிவிட முடிஞ்சது. கற்பக கணபதியின் பொற்பதங்கள் சரணம். PLEASE CLICK AT THE TITLE TO LOG ON TO THE AUTHOR OF THIS SONG MADAM KAVINAYA . MAY PILLAYARPATTI PILLAYAR BLESS MADAM KAVINAYA AND HER FAMILY AND SHOWER ALL HIS BEST ON THEM ON ALL DAYS TO COME

வெள்ளி, ஜூலை 17, 2009

Bharati Song in raag punnaga varali

To read the song of Bharathi and listen to Sudha Raghunathan the same song but in Sindhu bairavi, please click at the title of this posting

சனி, ஜூலை 11, 2009

Panchsat Peeta ரூபினி

Panchsat Peeta Roopini:- Lyric :-MuthuswamyDeekshithar Ragam:-Devagantharam Thalam:-Aathi Singer:-MahaRajapuramSanthanam Lyrics:- Panchasat peeta roopini maam Pahi sri Raja Rajeswari Pancha dhasakshari Pantya Kumari Padmanaba sahodhari sankari Devi Jaga Janani chithrupini Devathi nutha Guruguha Rupini Dhesa Kaala pravarthini Maha dheva manol laasini niranjani Dheva Rajamuni Sapa vimosini Dhevaganthar Raga thoshini Bhava Raja Thaala Visvasini Baktha janapriya balapradha

வியாழன், ஜூலை 02, 2009

கிழங்களுக்கு இந்த வயசுலே இப்படி ஒரு ஆசை

அம்மா இந்த வயசிலே பாடமுடியாது அப்படின்னு சொன்னப்போ நான் சொன்னேன்: நானே பாடறேன். உன்னால் முடியும். என்று சொன்னேன். எங்களோட பார்க்காத தமிழ்வலை உலக சினேகிதி அவர்கள் இயற்றிய கவிதை இன்றைக்கு கிடைத்தபோது, அதை நான் மத்யமாவதியிலும் அம்மாவை சாரங்கா ராகத்திலும் பாட முயற்சி செய்தோம். வயசு இரண்டு பேருக்கும் 67 முடிஞ்சு, 68 ஆகிவிட்டது. ஏதோ கர்னாடக சங்கீதம் அப்படி இப்படின்னு, பொழுதைக் கழிச்சிண்டு போகிறோம். அதனாலே, கிழங்களுக்கு இந்த வயசுலே என்ன இப்படி ஒரு ஆசை அப்படின்னு யாரும் கோபப் படவேண்டாம். ஸ்ருதி சரியாக இல்லை. தெரியும். அங்கங்கே ராகம் பிசிரு அடிக்கிறது. அதுவும் தெரியும். இருந்தாலும் பாடறோம். யார் கேட்டாலும், கேட்காவிட்டாலும், எங்க குழந்தைகள் கேட்கும். அது தெரியும். அப்பறம், யாருக்கு பொறுமை இருக்கோ இல்லையோ எங்க ஃப்ரன்டு கவினயா மேடத்துக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி. எங்க பாட்டுக்களை விடாமே கேட்கறது மட்டுமல்ல, நல்லா இருக்குன்னு வேற சொல்லி விடறாங்க. கவிதை கவி நயா மேடம் எழுதியது. Please copy and paste this URL if the above does not work. http://www.youtube.com/watch?v=tYizov--ZNI