JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, ஜூலை 23, 2010

சின்ன மணி சிலம்பொலிக்க

 

















இந்த பாடல் வரும் பதிவுக்குச் செல்ல தலைப்பைக் கிளிக்குங்கள். 

சின்ன மணி சிலம்பொலிக்க 
வெள்ளி மணி பரல்சிரிக்க 
கண்மணியே நீ ஓடி வர வேணும் – வந்து 
கட்டி முத்தம் ஒன் றெனக்கு தர வேணும்

நீண்ட பின்னல் தானசைய
நீள் நிலமும் சேர்ந்தசைய
நித்திலமே நீ ஓடி வர வேணும் – வந்து 
நித்தம் கொள்ளை அன் பெனக்கு தர வேணும்

முத்து மணி நகையாட 
முத்து நகை இதழாட 
சித்திரமே நீ ஓடி வர வேணும் – வந்து
சித்த மெல்லாம் நிறைந் தருளைத் தர வேணும் 

கா தணிகள் தான்குலுங்க 
கை வளைக ளும்சிணுங்க 
கண்மணியே நீ ஓடி வர வேணும் - வந்து 
கன்னல் மொழி இன் னமுதம் தர வேணும்

பன்னிப் பன்னி நான் பாட
பண்ணில் உன்னைத் தினம் பாட
பொன்மணியே கொலு சொலிக்க வர வேணும் – வந்து
பண் ணமர்ந்து இன் னருளைத் தர வேணும்

--கவிநயா
எழுதியவர் கவிநயா

சனி, ஜூலை 17, 2010

திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!



அன்னமாச்சார்யா அவர்களின் அற்புத கிருதி ஸ்ரீமந  நாராயண எனத் துவங்கும் பௌளி ராகத்தில் பாடப்பெறுகிறது. அதைக் கேட்டு மகிழாதார், மயங்காதார் இல்லை.
வலை அன்பர் திரு கண்ணபிரான் ரவி ஷங்கர்  கே. ஆர். எஸ். அவர்கள் அந்தப்பாடலினை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார்கள். 
http://kannansongs.blogspot.com/2010/07/ms-immortal.html

திருநாரணன் திரு! திருநாரணன் திரு!
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!


கமலா சதீ, முக கமல, கமல ஹித!
கமல ப்ரியா, கமலேக்ஷனா!
கமலாசன ஹித, கருட கமன ஸ்ரீ!
கமல நாப நீ பத கமலமே சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)

தாமரை யாளுடன், தாமரை முகம்-அகம்!
தாமரை வேள், செந் தாமரைக் கண்ணா!
தாமரை யில் உறை, கருடனின் மேல் நிறை
தாமரை உந்தி, உந்தன் மலரடிகளே சரணம்!
(திருநாரணன் திரு)

பரம யோகிஜன பாகதேயஸ்ரீ
பரம புருஷா பராத்பரா!
பர மாத்மா பரமாணு ரூபஸ்ரீ
திருவேங்கடகிரி தேவா சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)

பரமான அன்பருக்கு வரமான வரதனே
பரமான பரமே, பரம் பொருளே!
பரமானே, அணுவில் அணுவே
திருவேங்கட மலை உடையானே சரணம்!


அந்தப்பாடலை, இந்த பல் போன கிழவன் பாடுவதை மேலே  கேளுங்கள். அசல் பாட்டு தெலுங்கில் அன்னமாச்சார்யா இயற்றி டாக்டர் எம். எஸ். பாடியது, இப்பதிவின் தலைப்பை க்ளிக் செய்தால் கேட்கலாம். கூடவே தமிழ்ப் பாடலை இயற்றிய கே.ஆர்.எஸ்.ஐயும் சந்திக்கலாம்.

இப்ப என்னோட பேத்தி ஒரு முனு வருசத்துக்கு முன்னாடி இதே பாட்டை பாடினதை கேட்போமா ?



திங்கள், ஜூலை 12, 2010

Devi Karumariamman at Thiruverkadu.

எங்களை ரட்சிப்பாய் தாயே..கரு மாரியம்மா



thaye

வெள்ளி, ஜூலை 09, 2010

வி ஹாவ் ஆல்சோ கம் டு பாரிஸ்.

 தாத்தா ! நம்ப எப்ப பாரிசை பாக்கிறது அப்படின்னு தினேஷ், பிச்சை, கிச்சன் எல்லோரும் கேட்டாங்க.  அதுலே என்னடா கஷ்டம் கீது ? இப்பவே வா பரிசைப் பாக்கலாம் அப்படின்னு தாத்தா கிச்சன், பிச்சை, தினேஷ், அக்ஷயா எல்லோரையும் கூட்டிடுண்டு பாரிசுக்கு வந்தா அங்கே சஞ்சு ஈபில் டவர்லே இருக்கா.  ஹே சஞ்சு !  வி ஹாவ் ஆல்சோ கம் டு பாரிஸ்.



Paris


Paris by Night


Paris at Night from Eiffel Tower.




புதன், ஜூலை 07, 2010

"முருகா!" நினைத்தபோது நீ வர வேண்டும் !!



"முருகா!"  நினைத்தபோது நீ வர வேண்டும். landanil irukkum

லண்டனில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று முருகனை தரிசிக்க 
பதிவின் தலைப்பை கிளிக்குங்கள். 

செவ்வாய், ஜூலை 06, 2010

Oh! what an Incredible Voice from a 6 year old girl !!