JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, ஜனவரி 18, 2014

Anjaneya Ashtottara Shatanamavali 108 Names of Hanuman

வெள்ளி, ஜனவரி 17, 2014

Happy Birthday Sanju 17th January 2014

Why this day 

A very happy day t
Why today
A happy day. 

why why why
this day
it is so special this day.
why why why
so many many chocolates 
this day
it is sanju birthday
sanju birthday
oh how so nice
a day today.

happy birthday to you sanchu
THIS GOOD SONG
I WISH
YOU LEARN THIS SANJU
YOU MAY SOON LEARN TO PLAY THIS IN YOUR PIANO AND ALSO SING THIS SOON 




This is Carnatic YOU SANG SEVERAL YEARS AGO.
happy birthday




This is that Cup song.YOU SANG LAST YEAR.





Both wonderful !!
YOU WILL SING ON YOUR
happy birthday THIS YEAR
Happy Birthday Sanju




And this is Amazing
Specially for
Sanju Birthday


PERHAPS ONE DAY YOU WILL MAKE YOUR MARK LIKE THIS, AS THATHA FORESEES IT
TRIGGERING JUDGES TO STAND ON THEIR FEET.

**********************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
COUNTLESS
BLESSINGS FROM THATHA AND PAATTI
FOR GOOD song

I'm limited
Just look at me - I'm limited
And just look at you
You can do all I couldn't do, Glinda
So now it's up to you
For both of us - now it's up to you...

(Kristen Chenoweth):
I've heard it said
That people come into our lives for a reason
Bringing something we must learn
And we are led
To those who help us most to grow
If we let them
And we help them in return
Well, I don't know if I believe that's true
But I know I'm who I am today
Because I knew you...

Like a comet pulled from orbit
As it passes a sun
Like a stream that meets a boulder
Halfway through the wood
Who can say if I've been changed for the better?
But because I knew you
I have been changed for good

(Anna Kendrick):
It well may be

So much of me
Is made of what I learned from you
You'll be with me
Like a handprint on my heart
And now whatever way our stories end
I know you have re-written mine
By being my friend...

Like a ship blown from its mooring
By a wind off the sea
Like a seed dropped by a skybird
In a distant wood
Who can say if I've been changed for the better?
But because I knew you

(Kristen Chenoweth):
Because I knew you

(Both):
I have been changed for good

(Anna Kendrick):
And just to clear the air
I ask forgiveness
For the things I've done you blame me for

(Kristen Chenoweth):
But then, I guess we know
There's blame to share

(Both):
And none of it seems to matter anymore

(Kristen Chenoweth):
Like a comet pulled from orbit
As it passes a sun
Like a stream that meets a boulder
Halfway through the wood

(Anna Kendrick):
Like a ship blown from its mooring
By a wind off the sea
Like a seed dropped by a bird in the wood

(Both):
Who can say if I've been
Changed for the better?
I do believe I have been
Changed for the better

(Kristen Chenoweth):
And because I knew you...

(Anna Kendrick):
Because I knew you...

(Both):
Because I knew you...
I have been changed for good...

செவ்வாய், ஜனவரி 14, 2014

சக்கரை பொங்கல் போல் பொங்கல்

பொங்கலோ பொங்கல்.
பொங்கல் பண்டிகை. தை மாதம் முதல் தேதி .
தை பிறந்தால் வழி பிறக்கும் .





எல்லோருக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்.

சக்கரை பொங்கல் போல் பொங்கல் திரு நாள் போல் எல்லா நாளும்
இனிக்க
கதிரவனை பகலவனை சூரிய பகவானை வணங்கி வழிபடுவோம்.

திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் தமது வலையில் த்வாதச ஆதித்யர்களைப் பற்றி அழகான கவிதை ஒன்று எழுதியிருக்கிறார்கள்.
பொங்கல் திருநாள் சிறப்புக் கவிதை.
அவரது கவிதையை காண படித்து இன்புற இங்கே கிளிக்கவும். 

வழக்கம் போல் சுப்பு தாத்தா அந்த கவிதையை பாடி இருக்கிறார்.

சூடான சக்கரை பொங்கல் இங்கே கிடைக்கிறது.  இன்று மட்டும் இலவசம்.



பொங்கும் மங்களம் எங்கும் பரவுக என்று வாழ்த்துவோம்.
பதிவுலக நண்பர்கள் அனைவரையும் வாழ்த்துவோம்.
சுற்றத்தார் அனைவரையும் வாழ்த்துகிறோம்.

உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் குறிப்பாகவும் சிறப்பாகவும் வாழ்த்துவோம்.


பொங்குக பொங்கல். பொங்கலோ பொங்கல். 

திங்கள், ஜனவரி 13, 2014

பாடு பரமனைத் துதி. பின்னே சாப்பாடு.

மார்கழி மாதம் இன்றுடன் முடிகிறது.
திருப்பாவை திருவிழா இன்று தான் கடைசி.
இன்று மட்டும் திருப்பாவையின் கடைசி இரண்டு பாசுரங்கள் .
தோரணங்கள் வீதிகள் முழுவதும் பரிணமிக்க,
அரங்கன் வருகிறான். அவனை பணிவோம்.

ஆனா, எங்க அம்மாவை காணோம்  எங்கே போயிருக்காங்க.

உனக்குத் தெரியாதா !!

கோவில் வாசல் தெரு முழுக்க கோலம் போடறதுக்கு அம்மா தான் இன் சார்ஜ்.

இன்னிக்கு தேர் இல்ல. அதனால ஊர் கூடி தேர் இழுத்து
எல்லோருக்கும் சாப்பாடு போட்டு தானும் சாப்பிட்டு விட்டு தான்
வருவாங்க.

வா நாமும் சாப்பிட போவோம்.

முதல் லே பாடு  பரமனைத் துதி.
பின்னே சாப்பாடு.

ஒரு
முதலிலே பாசுரம் 29 30 இரண்டையும்  பாடுவோம்.
பிறகு பெருமாளை துதிப்போம்.
பிறகு
இருக்கவே இருக்கு
சாப்பாடு.
ஈரேழு பிறவிக்கும் அவன் தானே நமக்குத் துணை.
அவன் அருள் இருக்கையிலே
அவனியிலே எதற்கு கவலை

pasuram 29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.






pasuram 30
திருப்பாவை பாடல் 30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்: அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
உரைக்கு நன்றி. https://www.facebook.com/kumarakoddam.gnanavairavar.aalayam/posts/315644138553778


pasuram 30

இன்றுடன் திருப்பாவை ஆண்டாள் பாசுரங்கள் முடிவு அடைகின்றன.

எங்களுடன் கூடி கோதை நாச்சியாரின் பக்தி பெருவெள்ளத்தில் நீந்திய
அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் நன்றி.

அனைவரும் கூடி ஆரத்தி எடுத்து மங்களம் பாடி மகிழ்ந்திடுவோம்.

கோதை கல்யாணம் நிறைவு பெறுகிறது.

மங்களம் பாடுபவர் பெயரும் கோதை.


mangalam paadi makizhnthiduvom




வாங்க எல்லோரும் சாப்பிட்டு விட்டு போகலாம்.



இன்று போகி பண்டிகை.
நாளை பொங்கல் திருவிழா.


எல்லோருக்கும் எங்கள்
சக்கரை பொங்கல் வாழ்த்துக்கள்.


ஞாயிறு, ஜனவரி 12, 2014

இன்னிக்கு பாசுரம் சேமியா பாயசம்.



இன்னிக்கு என்ன பாசுரம்?

சேமியா பாயசம்.

நான் பாசுரத்தைக் கேட்டால், நீங்க  பாயசத்தை கொடு என்று சொல்ரீக..

கவிதா கிருஷ்ணமூர்த்தி அவங்க ராம் பஜன் கேளு.

நம்ம இங்கே கண்ணனை கிருஷ்ணனை மாதவனை கோவிந்தனை
மதுசூதனனை பாடத்தானே திருப்பாவை பாடறோம். இங்கே ராம பஜனும் உண்டோ/

அசடு. ராமன் கிருஷ்ணன் என்பதெல்லாமே விஷ்ணுவோட அவதாரம்.

அந்த அந்த யுகத்துக்கு தேவையான சங்கதியை எடுத்து சொல்வதற்கு மக்களை நல வழியில் நடத்துவதற்கு அந்த வேங்கடவன் அனந்தன் ஆகிய கோவிந்தன் எடுத்த அவதாரங்கள்.

முந்தைய ஒரு பாசுரத்திலே இராம அவதார நிகழ்வு பார்த்தோம் இல்லையா.

ஆமாம்.

கவிதா கிருஷ்ணமூர்த்தி குரலே அப்படியே உடல் சிலிர்க்குது இல்லே !!

இதுவும் ஒரு தெய்வீக குரல்.  நம்ம எல்லோருக்குமே உள் இருந்து ஒரு குரல் ஒலிக்குதுல்லே.. அது போல .. அது தான் தெய்வக் குரல்.  அந்த குரலை கேட்பதற்கு அதன் படி நடப்பதற்கு நாம் மனசை பக்குவப்படுத்திவிட்டால், நாம் எல்லாமே அந்த கோவிந்தனின் அடியார்கள் தான்.

சரி, பிரவசனம் போதும். பாட்டை போடுங்க.




அவங்க குரல் கேட்டாலே பாயசம் சாப்பிட்ட மாதிரி தான் ஒரு
பீல் இருக்குது.

இன்றைய  பாசுரமே பாயசம் தான்.

என்ன அப்படி ?

கேட்டுப்பார். சுவைத்துப்பார். உண்டு பார். 

இது மாதிரி சொல்வது சம்பிரதாயம். வைஷ்ணவ கோவில்களில் இது போல சொல்வார்கள்.




எம்.எல்.வி. பாடுகிறார். கேளுங்கள்.
சபா விலே இது மாதிரி பாடுவார்கள்.
திருப்பாவை அத்தனை 30 பாசுரங்களையும் எந்த ராகத்திலே வேணுமானாலும் பாடலாம். ஒவ்வொரு பாசுரத்திற்கும் ஒரு பாவம் இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் பாடுவது சிறந்தது.



புரியுது. ஒவ்வொரு ஹோட்டலிலும் ஒரு டேஸ்ட் . இடத்திற்கு தகுந்தாற்போல இருக்கணும்.
இல்லையா ..
ஆமாம்.
இப்ப கவியரசர் கண்ணதாசன் உரை என்ன என்று பார்ப்போம்.


இன்றைக்கு என்ன நெய்வேத்யம் ?
பாயசம். கேரளா சேமியா பாயசம்.
neyvedehyam semiya payasam kerala style.
அது என்ன கேரளா ஸ்டைல் சேமியா பாயசம்.
அது கீதா மேடம் ஒருவருக்குத்தான் இந்த ரகசியம் தெரியும்.
+Geetha Sambasivam
+Balu Sriram
+kg gouthaman
+Dindigul Dhanabalan
ஒரு வேளை கேசரி பவுடர் கொஞ்சம் கூட போடுவாங்க போல இருக்குது.

கலரா இருக்குது.





sukamo sukam.
சுகமோ சுகம்.

இந்த பாயசம் ஒரு சங்கதி சொல்லுது.

என்ன ?

இந்த பாயசம் போல உலகத்தில் உள்ள எல்லோரது
எதிர்காலம் தித்திக்க அந்த கோவிந்தனை பிரார்த்திப்போம்.

கோவிந்தா கோவிந்தா.

என்னது முனுமுனுக்கிரீக. மனசுக்குள்ளே கோவிந்தன் கிட்டே ஒரு தனி வேண்டுகோளா ?

ஆமாம்.
என்ன ?
கோவிந்தா, சூப்பர் சிங்கர் இன் அப்படிங்கற வலைக்கு போயி, சோனியாவுக்கு ஒரு வோட் போடு அப்படின்னு பிரார்த்திச்சுக்கிட்டேன்.




சனி, ஜனவரி 11, 2014

ஞானம் பிறக்கணும்.

A mature intellect is devoted, a mature heart is full of knowledge. Meditation matures your intellect as well as your heart. +Sri Sri Ravi Shankar 

இன்னிக்கு ஏகாதசி. 

தெரியும். 

அதுவும் வைகுண்ட ஏகாதசி.

அதுவும் தெரியும். ஏன் இது மாதிரி கேட்கறே ?

சிலருக்கு பலது புரியாது. பலருக்கு சிலது புரியாது. 

நான் அந்த சிலர் லே இருக்கேனா ? பலர் லே இருக்கேனா ?

அதுவே உங்களுக்கு புரியலே அப்படின்னா, 
சிலர் பலது புரிஞ்சாலும் புரியாது மாதிரி ஒரு போர்வையை போத்திண்டு இருக்காக.

ரொம்ப குளிர் இல்லையா ?

பகவத் கடாக்ஷம் எங்கேயாவது தன மேலே பட்டு, எங்கே நல்ல எண்ணங்கள் 
தோன்றி விடுமோ என்ற மாதிரியும் இருக்கும். 

எதுக்கு காலையிலே இதெல்லாம் சொல்லி கிட்டு இருக்கே.?

இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி, இன்னிக்காவது அமைதியா இருங்கோ. 
அப்படின்னு சொல்றேன்.

நான் என்னிக்குமே அமைதி தானே. 

மனசை அமைதியா வச்சுண்டு, கோவிந்தா கோவிந்தா அப்படின்னு 
அந்த கோவிந்தனை நினைச்சுக்கோங்க.


கூடாரை வெல்லும் ஸ்ரீ கோவிந்தா.  



 கூடாரை வெல்லும் ஸ்ரீ .கோவிந்தா.

பெருமாள் கருட வாகனத்திலே வருகிறார். எல்லாரும் ஒரு நிமிஷமாவது பொறுமையாக இருந்து பார்க்க வேண்டுகிறேன்.





இன்று வைகுண்ட ஏகாதசி.

எல்லோரும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் வலைக்கு சென்று பெருமாளை சேவிக்க வேண்டுகிறேன்.


கவியரசர் கண்ணதாசன் இந்த பாசுரத்திற்கு அளித்த விளக்க உரை இதுவே.
சுப்பு தாத்தா பௌளி ராகத்தில் பாடிட முயற்சி செய்து இருக்கிறார். அது பிறகு வரும்,.


இன்றைக்கு நைவேத்யம் அக்கார வடிசல்.
திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள்  உபயம்.
கோவிந்தா கோவிந்தா அப்படின்னு  சொல்லிண்டு ஒரு வாய்
எல்லோரும்  சாப்பிட வேண்டும்.
பெருமாளை கண்கூட தரிசனம் செய்யணும்.

கோவிந்தனுக்கு அன்னியிலே லோகத்துலே பெரிசா அடையத் தக்கது எதுவும் இல்ல அப்படிங்கற ஞானம் பிறக்கணும்.

இன்னிக்கு மேடம் ஷைலஜா அவர்கள், துரை செல்வராஜ் அவர்கள் வலைக்கும் சென்று பெருமாள் தரிசனம் செய்யவும்.
akkaravadisil

சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா.




எனக்கு நித்யபடி இந்த அக்கார வடிசல் கிடைக்கணும்.

என்ன சொல்றீக ??

ஞானம் பிறக்கணும். அப்படின்னு சொன்னேன்.

கோவிந்தா கோவிந்தா.



வெள்ளி, ஜனவரி 10, 2014

மாலே மணிவண்ணா !! இன்னிக்கு மோஹினி ஆட்டமாமே !!

www.mykolam.blogspot.com
மோதகமா ? இல்லை மோஹினி ஆட்டமா ?

இரண்டும் இல்ல. இன்னிக்கு மாலே மணி வண்ணா ?

அது என்ன மாலே !  அந்த காலத்துலே யே மால் எல்லாம் இருந்ததா ?

மால் என்றால் திருமால்.

அப்பறம் என்ன மோஹினி ஆட்டம். ! அவதாரம் அப்படின்னு சொல்லணும்.

வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் தான் மோஹினி அவதாரம்.

அது தனி. இன்னிக்கு நைவேத்யம் ஆகும்போதே எல்லாரும்
கிருஷ்ண கானத்திலே லயிச்ச மோகினி ஆட்டம் தாஸ்ய பாவம் பார்க்கப்போறோம். கூடவே மோதகம் நைவேத்யம்.

பலே !! பலே !!

பெங்களூரைச் சேர்ந்த ஒரு குழுவினர் இதில் பங்கு ஏற்கின்றனர்.
மோதகம் சாப்பிடுவது கூட நம்ம மட்டும் போதாதா ?



எம்.எல். வி.அம்மா பாடுகிற பாடகி   ஒருவர் கூட இன்றைய காலத்தில் கிடைக்கவில்லையே என்று வருந்தும் படியாக  இருக்கிறது.

இந்த கம்பீரம் குரலில் இன்றைய பாடகிகளில் யாருக்கு இருக்கிறது ?
விஜய் டி.வி. லே போகஸ் வேற ரூட்டிலே இருக்குமோ ? புரியல்லே !!





வேளுக்குடி
கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசம்



கண்ணதாசன் அவர்கள் பாசுரத்திற்கான தெளிவுரை இங்கே வழங்குகிறார்.

]
இன்னிக்கு நைவேத்யம் பகவத் பிரசாதம் மோதகம்.
கொழுக்கட்டை.
வெஜிடபிள் கொழுக்கட்டை.

mohini aattam thasya bhava










***************************************************************************************************************************************************************************************************************************************




வியாழன், ஜனவரி 09, 2014

ஒருத்தி மகனாய்ப் பிறந்து...

வாசலிலே பெருமாள் வரார்.
வரவா என்று ஒரு ஓசை.
என்ன என்று உன்னிப்பா கேட்டேன்.
ரவா தோசை செய்ய வந்திருப்பவர்
வ ரவா என்று கேட்டு இருக்கிறார்.

#####################################################################


பாசுரம் 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...

என்று துவங்கும் பதிகத்தை தனது வலையில் எனது நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் அழகுறப் பதித்து இருப்பதை யாம் காண முடிகிறது.

அதை நீங்கள் கீழே காண்கிறீர்கள். சைவமும் வைணவமும் ஒருங்கே இணைந்து வலையத்தில் வளைய வரும் வலைப்பதிவு இதுவே. இங்கே சென்று வாருங்கள். 
சிலருக்கு வானத்தில் ஒன்றல்ல, இரு கதிவரன்கள் காட்சி அளித்துள்ளனர். வானிலே இரண்டு ஆதித்யர்கள் பிரகாசமாகி இருப்பது, எனக்கு த்வைதமும் அத்வைதமும் காட்சி அளித்ததோ என்று நினைத்தேன்.
இரண்டு அல்ல, ஒன்று தான்.
ஒன்று உண்மை. அடுத்தது பிரமை.
அவன் இருக்கிறான் என்பது உள்ளே பகலவன் காட்டிய பிரகாசம்.

அவன் அருளாலே அவன் தாள் போற்றி.எனச்சொல்லுவது தேவாரம்.

மேற்கொண்டு திருப்பாவை பார்ப்போம்.





வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் என்ன சொல்கிறார் என்று கவனித்து பார்க்கவேண்டும்.



கவிஞ்ர் கண்ணதாசன் தரும் உரை உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருக்கிறது.

ஒரு மாறுதலுக்கு மூவாயிரப்படி வியாக்கியானம் செய்த பரமகாருணிகரான பெரிய வாச்சான் பிள்ளை அருளிச்செய்த புத்தகத்தில் இருந்து படிப்போமா என்று நினைத்தேன்.

அந்த உரைக்கு  ஒரு வியாக்யானம் சொல்ல எனது விசிஷ்டாத்வைத நண்பர் திரு சக்ரபாணி அய்யங்கார் அவர்களால் தான் இயலும். அவரோ  அட்லாண்டாவில் இருக்கிறார்.
+chakrapany sourirajan
அவர் பாவம் மைனஸ் ஆறு டிகிரி குளிரில் தவிக்கிறார்.
நான் இந்த உரைக்கு சரியான பொருள்  புரியவில்லையே என்று தவிக்கிறேன். அவர் வந்து சொல்வார். அதை அடுத்த வருஷம் தருகிறேன்./
பெருமாள் அனுக்ரஹம் செய்தால்.


அதை இன்னும் நான் சற்று படித்து வெளியிடுகிறேன்.
ஆண்டாள் கல்யாணம் ஒரு அற்புத நிகழ்ச்சி இன்னிக்கு.

மிகவும் நல்லா இருக்கு.

கடைசி வரைக்கும் பார்த்துட்டு பிறகு
ப்ரேக் பாஸ்ட் சாப்பிட செல்லவும்.







இன்னிக்கு இன்ஸ்டன்ட் தோசா.
நெய் ரோஸ்ட்  .மாவு தோசை ரோஸ்ட்.
+Geetha Sambasivam
கீதா  சாம்பசிவம் வலைலே தோசை வேனுமா அப்படின்னு கேட்டு .இருக்காங்க. அங்கென போனா எப்படி பண்றது அப்படின்னு  மட்டும் தான் சொல்லி  இருக்கிறது.அப்ப இங்கே கோதுமை தோசை கிடைக்காதா ...என்று
சுப்பு தாத்தா கேட்டார்.

இது ஒன்னும் ஹோட்டல் இல்ல. இது கேடரிங் ஸ்கூல். இங்கே கற்று கொடுப்போம். எப்படி தோசை பண்றது ? அதை தெரிஞ்சுண்டு நீங்க உங்க வீட்டிலே போய் செய்து  சாப்பிடனும். அப்படின்னு சொல்றாக.

இது நமக்கு சரிப்பட்டு வராது அப்படின்னு ச்ருதிஸ் கிச்சன் போனோம்.
அங்கே வாங்கோ வாங்கோ அப்படின்னு  கூப்பிட்டு,உங்களுக்கு 100, 1000 வேணுமா
நாங்களே அங்கு பஜனை பண்ற ஹாலுக்கு வந்து தோசை பண்ணி ஹாட் ஆ சர்வ் செய்யறோம் என்று சொல்ல உடனே ஆர்டர் பண்ணிட்டு வந்தேன்.

நெய் ரவா ரோஸ்ட் வேணும் அப்படின்னு பிரியப்படுபவர்கள் அடுத்த ஹாலுக்கு செல்லவும். அங்கே இன்ஸ்டன்ட் ரவா தோசை கிடைக்கும்.
+Dindigul Dhanabalan +Balu Sriram





*******************************************************************************************************************************************************************************************************************************************

இந்த மாதம் 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி.
அன்றைய சிறப்பினை நாம் ராஜேஸ்வரி அவர்கள் வலையிலே அன்றோ அதற்கு முதல் நாளோ பார்க்கலாம்.

கோவிந்தன் அந்த ஸ்ரீநிவாசன், பரந்தாமன்,ரங்கன், கண்ணன், வாசுதேவன்
என்று நாம் பல விதமாக வர்ணிக்கும்
மாதவன் செய்த மிராகிள்
எனது இன்னொரு வலையில் வெளியாகிறது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++










புதன், ஜனவரி 08, 2014

இன்று யாம் வந்தோம் .அப்படின்னு முடியுது இந்த பாசுரம். எதுக்காக

இது புதன் கோலம்.

அப்படின்னா திங்கள் கோலம், செவ்வாய் கோலம் அப்படின்னு எல்லாம் இருக்கா?

குறுக்கே கேள்வி கேட்க கூடாது. சொன்னா சரி அப்படின்னு சொல்லணும்.

சரி.

இன்னிக்கு எத்தனையாவது பாசுரம் ?

சரி.

என்ன சரி ?

நீ தானே என்ன சொன்னாலும் சரி அப்படின்னு சொல்லணும் சொல்லிருக்க..

ராகவா..

இது மார்கழி மாசம். ஒண்னு நாராயணா இல்ல கோவிந்தா சொல்லணும்.
Courtesy: www.thanjavur14.blogspot.com

சரி. இன்னிக்கு 24 வது பாசுரம் இல்லையா ?

முதல்லே பாட்டை போடுங்க...  வந்த எல்லோரும் முதலிலே மேடம் ஷைலஜா அவங்க வலைக்கு சென்று அவங்க எழுதியிருக்கும் இந்த அழகான பாசுரத்துக்கான  பொருளை படித்து வருவோமா

வாருங்கள். நாம் அங்கே போவோம். 

இன்று யாம் வந்தோம் .அப்படின்னு முடியுது இந்த பாசுரம்.
எதுக்காக ?

நீ முதல்லே காபியை போடு.

இன்னிக்கு திருமதி விஜயலட்சுமி இராமச்சந்திரன் அவர்கள் நம்ம அகத்துளே வந்து நாலு பாசுரம் பாடப்போறாங்க.



இந்த பாசுரத்திலே சொல்லப்பட்ட அத்தனை இதிகாச புரானங்களுக்கான விளக்கமும் அழகான படங்களும் எங்கள் வலை நண்பர்
                கோவர்த்தனம் கொற்றக்குடை என்ற தலைப்பிலே
       மேடம் ராஜராஜேஸ்வரி  அவர்கள் வலையிலே 

சும்மா சொல்லல்லே.. அங்கே ஒரு தரம் போயிட்டு அதுலே என்ன சொல்லி இருக்கு அப்படின்னு படிச்சுட்டு வாங்க. ஜன்ம சாபல்யம்.

கண்ணதாசன் பாடலும் உறையும் இப்போ.


உரை , இடையினம். நீங்க வல்லினம் உச்சரிக்கறேள்.


சரி சரி.  இன்னிக்கு உரை யை விட இன்னொன்னு முக்கியம்.

Madam ராஜி அப்படின்னு பதிவர் மா நாட்டுக்கு பங்களூர் லேந்து வந்தவங்க.

அவங்க இன்னிக்கு பஜனை முடிந்த உடன் வந்தவர்களுக்கு வினியோகம் செய்ய
1000 மசாலா வடை அனுப்பி இருக்காங்க.

அடே !!  1000 வடையா !!
நம்ம என்ன அனுமாருக்கு வடை மாலையா சாத்தப்போறோம்.
நன்றி: ராஜி .(பெங்களூர் வலைப்பதிவர்.)

இருந்தாலும் இந்த வடையை பார்த்தாலே ஆளுக்கு 5 , 10 சாப்பிடுவாங்க. அந்த மாங்காய் தொக்கு நல்லா இருக்குமா ? இல்ல ஆச்சி மசாலா செய்யற கொத்தமல்லி தொக்கு சூட் ஆகுமா ?

முதலிலே வருகை தந்த விருந்தினரை உபசரிப்போம்.
+Dindigul Dhanabalan
+Balu Sriram +kg gouthaman +S. P. Raghunathan +
+Venkatasubramanian Ramamurthy
+Venkataraman Nagarajan

+Rajeswari Jaghamani

எல்லோரும் மேடம் ராஜிக்கு  தேங்க்ஸ் சொல்லுவோம்.

சூடா ஒரு காபி இந்தாங்க.

காபி சாபிட்டு கிட்டே ஆண்டாள் கோவிலே தர்சனம் பாருங்க.




YOU ARE BLESSED. 

அண்ட் தட் இஸ் த ரீசன் 
யூ  ஆர் ஹியர் டுடே. 

செவ்வாய், ஜனவரி 07, 2014

த்வாபர யுகத்திலே நெய் ஊத்தப்பம்

சொர்கத்திலிருந்து பூ மாரி சொரிந்தார் போல்.....!!!!

இன்னிக்கு திருப்பாவை 23 வது பாசுரம்.  அதை சிறப்பிக்க இன்னும் ஒரு நிகழ்வும். 

வலைச்சரத்தில் ஆதி வெங்கட் அவர்கள் இன்று ஆசிரியர் பதவி ஏற்பதை முன்னிட்டு அவர்கள் வலையிலிருந்து ஒரு திருக்கோலம். 
+Adhi Venkat 
நன்றி.ஆதி வெங்கட். அவர்கள்.


எதுக்கும் இருக்கட்டும் அப்படின்னு  கோவில் லே ஒரு படம் புடிச்சுண்டு வந்தேன். அத அப்படியே நம்மாத்து வாசல் லே போடணும். 

இன்றைக்கு பாசுரத்திலே 23 என்று ஹிந்து தினசரி கொடுப்பதும் 23 ஆக திருப்பாவை புத்தகத்தில் இருப்பதும் மாறி இருக்கிறது. இல்லை. எனக்குத் தான் பிரமையோ.

கண்ணன் இப்போது தான் கண்களைத் திறக்கின்ற காட்சி.

ஜஸ்ட் ஒரு மாறுதல் பொருட்டு, இன்று நித்ய ஸ்ரீ அவர்கள் பாடுகின்ற ஒன்றல்ல நான்கு பாசுரங்களை இன்று தருவோம்.

TODAY
first you are listening to NITHYASHREE MAHADEVAN

அந்த பூக்கோலத்தை இன்னிக்கு ஹால் லே போடுங்கோ.
என்ன விசேஷம் !!
போக போகத் தெரியும்.

இன்று சிங்கப்பெருமாள்  கோவிலே வீற்றிருக்கும் சிங்கம் தன் கண்களை விழிப்பது போல் ஒரு உணர்வு.
ஆகவே, இன்று ஒரு வித்தியாசமாக, இன்னொரு உரை தனை முதலில் யாம் படிப்போம்.
+revathi narasimhan


நாச்சியாரின் கருணை மிகு குரலைக் கேட்ட கண்ணன் எங்கள் பரமன் பரந்தாமன், வாசுதேவன், பிருந்தாவன சாரங்கன், மணி வண்ணன், தனது மலர்ப் படுக்கையில் இருந்து,
உடல் சிலிர்த்துக்கொண்டு, ஒரு முறை கர்ஜித்து, பின் ராஜ நடை போட்டு சிங்கம் போல் வருகிறான்.

வந்து அந்த சிம்மாசனத்திலே உட்காரப்போகிறான் .

அந்த சிம்மாசனம் இந்த வலை நண்பர் திருமதி ஆதி வெங்கட் வைப் ஆப் வேங்கட நாகராஜ் அவர்கள் போட்ட பூக்கோலத்தில் மேலே இருக்கிறது.

ஓ !! அப்படியா சமாசாரம் !!

சிம்மாசனத்திலே உட்கார்ந்து கொண்டு எங்களைப் பார். எங்களுக்கு அருள் செய் என்று கோதை பிரார்த்திக்கிராளாம்.

வேளுக்குடி உபன்யாசம் நாளைக்கு  வரும்.



கண்ணதாசன் இந்த பாட்டுக்கு எழுதிய உரை இப்போ.
இன்னும் கொஞ்ச நேரத்தில் கூகிள் வெளியீடு ஆகும்.
அதற்கு முன்னே எனது வலை நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் வலைப்படம் அவருக்கு எமது நன்றி.




ரொம்ப டயர்டா ஆயிடுத்து. சூரி சார்.

பொறுமை . பொறுமை.

இன்னிக்கு மாஹிஸ் கிச்சன் லேந்து ஸ்பெசலா நெய் ஊத்தப்பம் இங்கேயே சுடச்சுட போட்டு தருவதற்கு ஏற்பாடு ஆகியிருக்கு


.ஏன் சூரி சார், அந்த த்வாபர யுகத்திலே நெய் ஊத்தப்பம் எல்லாம் இருந்திருக்காதோ ?
+Venkatasubramanian Ramamurthy
+Balu Sriram
என்ன திடீர் அப்படின்னு ஒரு சந்தேஹம்.?

இந்த கோதை இப்படி மாத்தி மாத்தி அப்பீல் பண்றா. பகவான் கண்ணை துறந்து பார்க்கலையே... நானா இருந்தா..

நீரா இருந்தா என்ன செஞ்சு இருப்பீர்.

ஒரு பத்து நெய் ஊத்தாப்பத்தை அவர் முன்னாடி வச்சு .
நீ கண்ணைத் தொற . இல்லாட்டி, அத்தனையும் காணாம போயிடும் அப்படின்னு சொல்வேன்.


கண்ணன் பக்தாளுக்கு அடிமை இல்லையோ..

சரி. சரி.

நெய் ஊத்தப்பம் ஜோர். ஸ்பெசல் நெய்யோ !



இட்லி மிளகாய் பொடி 2 ஸ்பூன் கூட போடுங்கோ. இதயம் நல்ல எண்ணை தாராளமா சாதிங்கோ..

ஆஹா.எத்தனை ஒருவருக்கு அப்படின்னு இருக்கா ?

மேக்சிமம் 10 வரைக்கும் சாப்பிடலாம். ப்ரீ. ஆனா, 11 சாப்பிட்டா, மொத்தம் 11 க்கும் ரூபாய் 45 வீதம் பில் கட்டனும்.

அது என்ன கஜ்ரிவால் டெல்லி லே கணக்கு போட்டு தண்ணி விடரா மாதிரி இருக்கு.
http://mahikitchen.blogspot.in/2013/12/blog-post_24.html
தோ பாருங்கோ !!
என்ன ?
ஊத்தப்பம் ரொம்ப நன்னா இருக்காம்.
ஆமாம். அதுக்கென்ன ?
உங்க ப்ரெண்ட் விஜயராகவன் அவர் ஆத்துக்காரிக்கு ஒரு அஞ்சு பார்சல் எடுத்துண்டு போலாமா அப்படின்னு கேட்கறார்.
+Anandaraja Vijayaraghavan
+Ranjani Narayanan
+ilayanila ilamathy
+Madhan Nagasubramaniam
அஞ்சு என்ன பத்து எடுத்துக்கட்டும். ஆவி பறக்க  ஹாட் பாக் லே வச்சு அனுப்பு.



இது என்ன இந்த சின்ன பொண்ணுங்கல்லாம் குதிச்சுண்டு வர்றது ? என்ன விசேஷம் ?

கோதை ஆண்டாள் திருமண வைபவம். குழந்தைகள் டான்ஸ் ப்ரோக்ராம்.

வந்தவர்கள் எல்லாம் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டுகிண்டே இந்த டான்ஸ் ப்ரோக்ராம் பார்க்கலாம்.



***********************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
இன்றைய பொன்மொழி.

Even if it seems to be lost, think that it is not gone away but is there and just hidden.

 +Sri Sri Ravi Shankar


திங்கள், ஜனவரி 06, 2014

அவ உசிரையே வச்சுட்டா.

                                                        இது என்ன கோலம் !!
P L A S T I C   R A N G O L I


இருபத்தி ஒரு நாட்களாக கொட்டற பனியிலே கோலம் போட்டுக்கொண்டு இருந்த எங்களுக்கு
எங்கள் பெண் நியூ ஜெர்சி லேந்து

 " ஏ ம் மா
கோலம் கோலம் இப்படின்னு கஷ்டப்பட்டிருண்டு இருக்கே..என்று கேட்டாள்.

கோல மாவு, காவி, கலர் கோலப்பொடி,

 இதெல்லாமே இப்ப கிடையாது. இப்ப எல்லாமே பிளாஸ்டிக் லே வந்துடுத்து. ஜஸ்ட் உனக்கு வேண்டியபடி வாங்கி அட்ஜஸ்ட் செஞ்சு போட்டுக்க வேண்டியது தான்.

பழைய சம்பிரதாயம், எங்களோட குடும்ப நம்பிக்கைகள், எங்கள் ஊரு கட்டுப்பாடு, அப்படின்னு எல்லாம் வச்சுண்டு இருக்கோமே, அதெல்லாம் என்ன ஆவுறது ?

அம்மா, இன்னிக்கு 2014லே நம்ம லைப் லே எல்லாமே அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வது தான் முக்கியம். இப்படித்தான் நடக்கணும் அப்படின்னு வீம்பு புடிச்சுண்டு இருக்கக்கூடாது.

அவ சொல்றதும் ஒரு விதத்துலே பார்த்தா சரிதான்.

நீ எப்பவுமே உன் பொண்ணு கட்சி .

சர்டன்லி. நீங்களே பாருங்க.  நீங்க சொல்ற கோதை சரித்ரத்துலே பாருங்கோ.
கட்டிண்டா அந்த கண்ணனைத் தான் கட்டிப்பேன் என்று அந்த காலத்திலேயே கோதை சொல்லி இருக்கிறாள். இதை பிடிவாதம் அப்படின்னு சொல்வேளா?

மாட்டேன். அது பகவான் மேல அவ உசிரையே வச்சுட்டா.

அவரவர்களுக்கு பகவான் என்று யாரைத் தோன்றதோ அவர் மேலே உயிரை வச்சுடலாமா ? என்ன சொல்றேன் ? அது சரின்னா இதுவும் சரிதான்.


 கோதையோட அப்பா SAYEE matrimonial  லே இல்ல ஒரு தமிழ் மாட்ரிமோனி லே ஒரு ad கொடுக்கல்ல.  ஏன் அப்படின்னா,

அவருக்கு, கோதை பிறக்கும்போதே , இவ  தாயார் அவதாரம்.
நடந்தது எல்லாமே தெய்வ நிச்சிதம் ஈச்வர சங்கல்பம் அப்படின்னு தெரிஞ்சது.

அந்த கோதை ஆகப்பட்டவள்  பெருமாளே அவதரித்த பெண் வடிவத்தில் பிறந்த ஒரே ஆழ்வார் என்று பெரியவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்.


paasuram 22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான 
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்க்  கீழே 
சங்கம் இருப்பார்ப்போல் வந்து தலைப்பெய்தோம் 
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போல 
செங்கண்சிறுத் சிறிதே எம்மேல் விழியாவோ 
திங்களும் ஆதித்யனும்  எழுந்தால்போல்  
அங்கண் இரண்டுங் கொண்டெங்கள்மேல்  
நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் 


என்ன இது ! நீங்களே பிரவசனத்தை ஆரம்பிச்சுட்டேள். இது என்ன உங்க காலேஜ் ஆ ? நாங்கள் எல்லாம் என்ன உங்க ஸ்டூடெண்ட்ஸ் அப்படின்னு நினைப்பா ?

 முதல்லே எம்.எல்.வி. அம்மா டி.வி.டி போடுங்கோ. என்கிறாள். சக தர்மினி.





வேளுக்குடி  வந்துட்டார். அவரது உபன்யாசத்தை கேட்போம்.
velukkudi krishnan 22 pasuram. upanyasam.



அடுத்து கண்ணதாசன் உரை இந்த பாசுரத்துக்கு



வேளுக்குடி சார்  சொல்றது எதுவுமே மூளைக்கு எட்டுவதற்கு முன்னாடி, பசி பசி அப்படின்னு இடும்பை கூர் என் வயிறு ஒன்றின் வைப்ரேஷ்னஸ் மட்டும் தான் மூளைக்கு புரியறது.

அவசரப்படாதே வயிறே. பொறு.
இன்னிக்கு நைவேத்யம் பூரி சென்னா படோரா .
யதா சௌகர்யம் துஷத்வம்

சத்தமா சொல்லாதீங்கோ..இன்னிக்கு உபவாசம் இருக்கிறவா கூட வ்ரதத்தை நாளைக்கு போஸ்ட்போன் பண்ணிடுவா..

+Balu Sriram +kg gouthaman +Anandaraja Vijayaraghavan
இதிலே பூண்டு இருக்கா வெங்காயம் இருக்கா அப்படின்னு சந்தேஹம் இருந்தா

நீங்க நினைக்கிறவா பக்தர்ஸ் எல்லாம் இன்னிக்கு வலைச்சரம் போயிருக்காங்க. அங்க ஆதி வெங்கட் அவங்களோட பிரவசனம். உபன்யாசம். சொற்பொழிவு.
சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஒரு ஆடோ புடிச்சுண்டு நாமும் போய் கேட்கணும். ஸ்ரீரங்கத்துலேந்து, அவர்கள் இந்தப் பனிலே வந்து இருக்காங்க.
+Geetha Sambasivam
+Ananya Mahadevan +Adhi Venkat

 அவங்களுக்கு மட்டும் வெறும் பூரி மசாலா, சாஸ்த்ரோக்தமா பண்ணியது.
  சுத்தமான கிணற்று ஜலம் . RO மூலம் பரிசுத்தப்படுத்தியது.


இதுவும் சரியா படலே அப்படின்னா,
இந்தாங்கோ துளசி தீர்த்தம்.
+Vasudevan Tirumurti
+Venkata Ramani
+Venkataraman Nagarajan
ஓம் ஹரிஹி

இன்னிக்கு இது போதுமா.

இருங்கோ.

செவிக்கு உணவு வேண்டாமா ?
சாப்பிட்டது ஜீரணம் ஆகவேண்டாமா !!



கோபிகாதி ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா.



***********************************************************************************************************************************************************************************************************************************************.
இன்னிக்கு நீங்க படிக்கவேண்டியது.

LEARN TO FLOW WITH LIFE.
மேலே கிளிக்குங்கள்.

ஞாயிறு, ஜனவரி 05, 2014

நாங்கள் பூரியை நினைச்சு வரோம். நீங்களோ பூரி ஜெகன்னாதனை நோக்கி போகச் சொல்றீக

என்னங்க..

என்ன என்னங்க.

நம்ம வீட்டிலே 

என்ன நம்ம வீட்டுலே 

அட ..என்னக திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு ..
வாசலை பாருங்க. என்ன இம்புட்டு மாடு.
 இம்புட்டு பேரு பால் கறந்துட்டு இருக்கராக..
என்ன விசேஷம்..



அடியே.. 
நம்ம தான் வீட்டை மாத்திகிட்டு வந்துட்டோம்டி. 
sangu chakra kolam 

ஆமாண்டி, அந்த யாதவ குல கோகுலத்துக்கே வந்துட்டோம் டி. 

அப்ப இனிமே ஆவின் பால் வேண்டாம் 
அப்படின்னு நம்ம பால் வெங்கடேசனுக்கு செல் அடிச்சட்டுமா..

கொஞ்சம் பொறுடி. இது எப்பவும் நீடிக்குமா அப்படின்னு தெரியல்லையே 
இரண்டு நிமிஷம் கழிச்சு ஜரகண்டி, ஜரகண்டி அப்படின்னு சொல்லிடுவாக இல்ல. 

அப்படியா..அப்ப கனவு முடிஞ்ச உடனே காட்சியும் மாறுமோ. 

திருப்பாவை பாசுரம் 21

ஏற்ற கலன்கள்  எதிர்பொங்கி மீதளிப்ப 
மாற்றாதே பால் சொரியும் வள்ளற்ப் பெரும்பசுக்கள் 
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்
  ஏற்றமுடையாய் உலகினில் 
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய் 
மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்க்கண் 
ஆற்றாது வந்துன் அடிபணியுமாப்போலே 
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்  


விளக்கம் 

பாத்திரங்களில் பொங்கி வழியும்படி இடைவிடாமல் பால் சொரியும் 
பசுக்களுக்கு சொந்தக்காரனான நந்தகோபனின் மைந்தனே 
கண்ணனே எழுவாயாக 
அடியாரைக் காப்பதில் அக்கறை கொண்டவனே 
வேதங்களாலும் அறியமுடியாதபெரியவனே 
இவ்வுலகில் அவதரித்த ஒளி  பொருந்திய முகம் கொண்ட
நாராயணனே துயிலெழாய் உன்னை வெல்ல முடியாத பகைவர்கள் உன் காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்க வந்துள்ளதுபோல் நாங்களும் உன் புகழ் பாடிக்கொண்டு உன்னை அடைய வந்துள்ளோம்.  
விளக்கம் தந்த திரு.பட்டாபிராமன் அவர்கள் வலைக்குச் செல்ல இங்கே கில்லிடவும் 


எம்.எல். வி. அம்மா 21வதுபாசுரம் பாடுகின்ற அதே வேளையில் பெருமாளை சேவியுங்கள்.


ஒரு பக்கம் பசும்பால் குடம் குடமா கொட்டுது.
இன்னொரு பக்கம் சிசுக்கள் அதுக்காக ஏங்கி நிற்கும் காட்சி.

கண்ணதாசன் என்ன சொல்றாரு. கேட்போமா. !

இதை சுப்பு தாத்தா பாடி இருக்காரு தன்யாசி ராகத்துலே.
பாடுறாரா படிக்கிறாரா நீங்களே கேளுங்க.
கொஞ்ச நேரத்துலே
கூகிள்லே 


இன்னிக்கு ஒரு ஸ்பெசல் நிவேதனம்.

வட  இந்தியாவிலே இருந்து ஒரு பஜனை கோஷ்டி வந்திருக்கு.
அவங்க இப்ப ராதா கிருஷ்ண பஜனை பண்ண போராங்க.

பஜனை முடிஞ்சப்பறம் , அவங்க சம்ப்ரதாயத்து படி உணவு அளிக்கப்படும்.


அமைதியா கேட்கணும்.



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ணா ஹரே ராம
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே கிருஷ்ணா.
+Balu Sriram
எல்லோரும் ஒரு அஞ்சு நிமிஷம் சேர்ந்து  பாடணும்.

பாடி முடிச்சாச்சு.

அவசரப்படக்கூடாது. ரொம்ப அவசரம் அப்படின்னா
இந்த மெனு லிஸ்டை பார்த்துகினே இருங்க.
+Balu Sriram
ஏன் பார்த்தா பசி தீருமா.?

பகவானை பார்த்தாலே ஏன் நினைச்சாலே பசி வராது.

 சுவாமி,நாங்கள் பூரியை நினைச்சு வரோம். நீங்களோ பூரி ஜெகன்னாதனை நோக்கி போகச் சொல்றீக..   இன்னிக்கு மட்டும் கொஞ்சம் ஒப்ளைஜ் பண்ணுங்க.  பசி கண்ணை மறைக்குது.

கொஞ்சம் பொறுத்துக்கணும். பகவானே துயில் களைய வில்லை. அதற்குத்தான் பஜனை .
அவர்கள் முடிக்கும்போது தான் எல்லோரும் சாப்பிட முடியும்.

அவர்களுக்கு பசிக்குமா தெரியல்லையே...

வரும்போதே செமத்தியா ஒரு புடி புடிச்சுட்டு வந்திருப்பாகளோ ?
பஜனை லே எழுந்திருக்கிறா மாதிரியே தெரியலையே...

அப்ப அதுக்குள்ளே மேடம் ஷைலஜா உரை என்ன என்று பார்த்துவிட்டு வருவோம்.
+Shylaja Narayan
அப்பாடி !!  ஒரு தினுசா கடைசி யா ஹரே கிருஷ்ணா சொல்லிட்டார்.

என்ன நைவேத்யம்.

பாநி பூரி. குலோப் ஜாமுன்.
குலோப் ஜானிலே நெய் நிறையா இருக்குமோ ?
நெய் அப்படின்னா ghee யா ?
ஆமாம்.
இருங்க. +Geetha Sambasivam மேடத்தை கேட்டு சொல்றேன்.



என்ன சுவை ! என்ன சுவை !!
கண்ணபிரானின் கருணையும் அதே சுவை.
சுவைத்தவர்கள் சொல்லமுடியாது.
சொல்ல நா வன்மை படைத்தவர்கள் சுவைக்க இயலாது.
கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.
******************************************************************************************************************************************************************************************************************************************