JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, ஜனவரி 03, 2014

பஞ்சு மெத்தையிலே பெருமாள்.



யாரு அது அவ்வளவு அழகா கோலம் போட்டிருக்காங்க...
நீ தூங்கிக்கிட்டு இல்ல இருக்க.


வாணி முத்துகிருஷ்ணன் அவங்க போட்டு இருக்காங்க.
அவங்களுக்கு தாங்க்ஸ் சொல்லுங்க.

என்ன நீ இன்னுமா படுத்துட்டு இருக்க ?

அந்த கண்ணனே இன்னும் படுத்திட்டு தான் இருக்காரு.
ஆமாம். அவ எப்படி படுத்திட்டு இருக்காரு பாரத்தீல
எப்படி ?
பாட்டை நல்லா படிச்சு பாரு.

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் 
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி 
கொந்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் 
வைத்துகிடந்த மலர் மார்ர்பா!
வாய் திறவாய் 
மைத்தடங் கண்ணினாய் 
நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ 
ஒட்டாய் காண் 
எத்தனையேலும்பிரிவாற்ற கில்லாயால் 
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய். 

விளக்கம் தருபவர் திரு பட்டாபிராமன் அவருக்கு நன்றி.

சஹானா ராகம் மனசை உருக்கும் தன்மை உடையது.
அந்த ராகத்துலே பாடி இந்த நப்பின்னை மனதிலே தன மேலே கருணை உண்டாகட்டும், நாங்களும் அந்த பரமனை, எங்கள் கண்ணனை கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும் என்று கோதை பிராட்டியார் கெஞ்சுவது போல் இருக்கிறது.
 எம்.எல்.வி. அம்மா பாடுவது.
MLV sings. Raag Sahana



velukkudi krishnan
தத்துவார்த்தம்  இங்கே.திருமதி ஷைலஜா அவர்கள் வலையிலும் பொருள் விளக்கம் அவசியம் படிக்கவும்.





பஞ்சு மெத்தை லே பெருமாள்.

எப்படி இருக்கார் ?

கண்ணதாசன் உரை



இங்கே கேட்பதற்கு பொறுமை இருக்குமா ?
அதுக்குள்ளே .
நைவேத்யம் வந்து  விட்டது.
என்ன என்று பார்ப்போம்.



தேங்காய் போளி , கொழக்கட்டை தட்டு தட்டா வந்து விட்டது.

தேங்காய் கொலஸ்ட்ரால். அதுவும் நெய் ரொம்ப சாசுரேடட் கொழுப்பு.   அதிகம்.கம கம அப்படின்னு  வாசனை.

சும்மா புகுந்து விளையாடுவோம் அப்படின்னு
+Balu Sriram நினைக்கிறது  தெரியறது.

இன்னிக்கு மட்டும் ஒ.கே.

இந்த தில்லானா கேட்டுண்டே போளி சுவைப்போம்.