JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், டிசம்பர் 31, 2012

Thiruppavai 16th Song.மணிக்கதவம் தாள் திறவாய்!






நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியர் எமக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!
http://www.koodal1.blogspot.com 

எங்கள் குலத்திற்குத் தலைவனான நந்தகோபனுடைய அரண்மனையைக் காப்பவனே! அவனது கொடியும் தோரணங்களும் தோன்றும் வாயிலைக் காப்பவனே! மாணிக்கக் கதவைத் தாள் திறப்பாய்!
ஆயர் சிறுமியர்களாகிய எங்களுக்கு வேண்டியதெல்லாம் தருவதாக மாயன் பச்சை மணி போல் நிறம் கொண்டவன் நேற்றே வாக்குறுதி தந்திருக்கிறான்! அதனால் அவனைத் துயில் எழுப்பிப் பாட தூயவர்களாக வந்திருக்கிறோம்! அம்மம்மா! பேசிப் பேசி நேரத்தைக் கடத்தாமல் நீர் அன்பின் வெளிப்பாடான நிலைக்கதவைத் திறப்பாய்!

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

Thiruppavai 15th pasuram

சனி, டிசம்பர் 29, 2012

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!

வெள்ளி, டிசம்பர் 28, 2012

Thiruppavai 13th Pasuram




Thiruppavai 13th Pasuram .

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!
புள்ளும் சிலம்பின காண்! போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ?! பாவாய் நீ நன்னாளால்!
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!

Kindly log on to my web friend Thiru Kumaran's blog HERE
and know the meaning of this Pasuram.

வியாழன், டிசம்பர் 27, 2012

Thiruppavai 12 th Pasuram



Thiruppavai 12th Pasuram

இந்த பாசுரத்திற்கு ஒரு அழகான விளக்கத்தைத் தன பதிவிலே ஈந்து இருக்கிறார்கள் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள். அவர்கள் பதிவுக்குச் சென்று அதைப் படிக்க இங்கே கிளிக்கவும்.

புதன், டிசம்பர் 26, 2012

Thiruppavai 11 th Pasuram








செவ்வாய், டிசம்பர் 25, 2012

Thiruppavai 10th Pasuram

திங்கள், டிசம்பர் 24, 2012

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய




Courtesy:
http://bhakthi.wordpress.com/2007/12/24/

இந்த பாசுரத்தில் கண்ணனுக்கு மிகவும் நெருங்கிய ப்ரியமானவளான பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள் ஆண்டாளுடன் கூடிய கோபிகைகள். பகவத் பக்தர்கள் – பாகவதர்கள் அனைவரும் பந்துக்கள் – உறவினர். அனைவரும் பரமாத்மாவிடமிருந்து பிரக்ருதி சம்பந்தத்தால் வந்த தேக பந்துக்கள். பரமாத்மா எல்லோருக்கும் ஆத்ம பந்து. அந்த உரிமையில் “மாமன் மகளே!” என்று ஆண்டாள் அன்போடு அழைக்கிறாள். ‘இட்டீடு கொள்கைக்கு விடவொண்ணாத முறை கட்டிக்கொண்டு..’ என்றபடி க்ருஷ்ண சம்பந்தம் பெற்ற திருவாய்ப்பாடியிலே தனக்கும் ஒரு உறவு இருந்தால் எப்படி இருக்கும் என்ற த்வரையினால் ஆண்டாள் அப்படி அழைக்கிறாள். அந்த கோபிகையோ க்ருஷ்ணனையே மறந்துவிட்டது போல் துயிலணைமேல் படுத்து தூங்குவதால் அவள் தாயரை மாமீ – அவளை எழுப்புங்களேன் என்று கேட்கிறாள்.

இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த க்ருஷ்ணனுக்கு ப்ரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்.

இந்த பாட்டில் கோபிகைகள் கண்ணனுக்கு பிடித்தமான ஒரு கோபிகையை எழுப்ப அவளது தாயாரை துணை வேண்டுவதைப்போல் – இதே மாதிரியான ஒரு சூழலில் நம்மாழ்வார் ஒரு பத்து பாசுரங்கள் பாடியிருக்கிறார். தலைவியான பராங்குச நாயகியைப்பற்றி அவளது தோழி, பராங்குச நாயகியின் தாயாரிடம் பேசுவதாக அமைந்துள்ள இப்பாசுரங்கள் ஒப்பு நோக்கத்தக்கவை. நம்மாழ்வார் பாசுரத்தில் தலைவி திருதொலைவில்லி மங்கலத்தில் இருக்கும் பெருமானிடம் காதல் கொண்டிருக்கிறாள். ஆண்டாள் தூங்கிக்கொண்டிருக்கிற கோபிகையை, ஊமையோ.. செவிடோ என்று கேட்கிறாள். இதே போல நம்மாழ்வார் பாசுரத்திலும், “அன்னைமீர் ! அணிமாமயில் சிறுமானிவள் நம்மைக்கைவலிந்து என்ன வார்த்தையும் கேட்குறாள் – தொலைவில்லிமங்கலமென்றல்லால்” என்று தொலைவில்லி மங்கலம் தவிர வேறு வார்த்தைகள் அவள் காதிலேயே விழுவதில்லை என்கிறார்.

இந்த தொலைவில்லிமங்கல பாசுரங்களில் முதல் பாசுரம் ‘துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்’ என்றே தொடங்குகிறது. இதை பூர்வாசார்யர்கள் தூமணி மாடத்து என்ற பதத்துடன் பொருத்தி அற்புதமாக அர்த்த விசேஷங்களை அருளியிருக்கிறார்கள். தேவாதிதேவனான பெருமானிடம் தேவர்கள் முத்து, பவளம், ரத்தினம் ஆகியவற்றை காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அவற்றை இரண்டாக தோஷமுள்ள ரத்தினங்கள், தோஷமே இல்லாத ரத்தினங்கள் என்று பிரித்து அவற்றில் தோஷமுள்ள ரத்தினங்களில் தோஷத்தை நீக்கி ‘துவளில் மாமணி’களாக மாற்றி தன் மாளிகையில் பெருமான் வைத்துக்கொள்ளுவனாம். தோஷமே இல்லாத ரத்தினங்களைக் கொண்டு ‘தூமணி மாடம்’ கட்டி தன் நாயகிக்கு கொடுப்பனாம்.

அத்தகைய தூமணி மாடத்தில் சுற்றும் விளக்குகள் ஏற்றி ஒளிர தூபம் கமழ துயிலணை மேல் ஆனந்தமாக அந்த கோபிகை தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கும் தமக்கும் உள்ள சம்பந்தத்தை சொல்லி “மாமன் மகளே! மணிக்கதவை திற!” என்று ஆண்டாள் கேட்கிறாள். பரமன் இருக்குமிடமான தூமணிமாடத்தில் தன் ஞானத்தால் ப்ரஹ்மானந்தத்தை அனுபவித்தபடி அந்த கோபிகை இருக்கிறாள். அந்த தூமணி மாடத்தினுள் நுழைய வெளியே இருப்பவர்களுக்கு தெரியவில்லை. அதனால் உள்ளே இருக்கும் கோபிகையையே பார்த்து மணிக்கதவை திற! என்று கேட்கிறார்கள். அவளோ வாய் திறந்து பேசவில்லை. ஒருவேளை அவளுக்கு காதே கேட்கவில்லையோ? அல்லது நிஷ்காம்யமாக அப்படியே ப்ரஹ்ம நிஷ்டையில் உட்கார்ந்து விட்டாளோ? அல்லது அனந்தலோ? அன்யபரையாக பிறரது கட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டாளோ? அனந்தல் என்பதற்கு கர்வம், இறுமாப்பு என்றும் பொருள் கொள்வர். க்ருஷ்ணனை விட்டால் வேறு யார் நம்மை ரக்ஷிக்க தக்கவர் இருக்கிறார்கள் என்ற இறுமாப்பில் இவள் இருக்கிறாளோ?

சரி அவள்தான் பேச மறுக்கிறாள். மாமீர்.. நீங்களாவது அவளை எழுப்பீரோ? அவள் எதாவது மந்திரத்தினால் கட்டப்பட்டு பெருந்துயிலில் ஆழ்ந்துவிட்டாளோ? என்று ஆண்டாள் கேட்கிறாள். இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ?

அந்த பெண்ணின் தாயார் – நம்மாழ்வார் சொன்னபடி – கண்ணனின் நாமந்தவிர வேறெதுவும் அவள் காதுகளில் விழுவதில்லை – அவன் பெயரை சொல்லிப்பாருங்கள் என்று சொல்கிறாள். ‘மாமாயன் – மாதவன் – வைகுந்தன் என்றென்று ‘ எனும்போது ஒவ்வொரு நாமத்தையும் முதலில் வைத்து ஒவ்வொரு சகாஸ்ரனாமமே பாடுகிறோம் என்கிறாள் ஆண்டாள் .

இங்கே ‘மாமாயன்’ என்பது நமக்கு பிறப்பு கொடுத்து நமது முன் ஜென்ம நிலைகளையும் அவனுடனான சம்பந்தத்தையும் மறைத்தான். ‘மாதவன்’ என்பது மா – லக்ஷ்மியின், தவ – கணவன், ஸ்ரீ:பதி என்று பொருள் – அப்படி பிராட்டியுடன் கூடி எங்களை ரக்ஷிக்கிறான். பிராட்டி இல்லையென்றால் அவனால் ரக்ஷிக்க முடியாது – காகாசுரன் எவ்வளவு பெரிய அபசாரம் செய்தும் பிராட்டியுடன் ராமன் இருந்தபடியால் கொல்லப்படாமல் ரக்ஷிக்கப்பட்டான். அப்படி இந்த மிதுனம் ரக்ஷிக்கையை குறிக்கும். ‘வைகுந்தன்’ என்ற திருநாமம், இங்கிருந்து நாம் சரணாகதி செய்து, பிரபத்தி மார்க்கத்தில் அவனை அடையப்போகிற இடம். ஆக நாம் வந்தது, இருந்தது, போக போவது ஆகிய எல்லா நிலைகளுக்கும் காரணன் அவனே என்பது தேறும்.

இவ்வாறு அவன் நாமங்களை பாட அந்த கோபிகையும் தன் துயில் விடுத்து இவர்களுடன் இணைந்தாள்.

ஞாயிறு, டிசம்பர் 23, 2012

கீழ்வானம் வெள்ளென்று



Kindly log on to
http://naachiyaar.blogspot.in
to learn the meaning of the above pasuram
which is Eighth in the Order of THIRUPPAVAI

சனி, டிசம்பர் 22, 2012

கீசு கீசு என்று எங்கும்





கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே?!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?!
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?!
தேசமுடையாய்! திறவேலோர் எம்பாவாய்!

எனது வலை நண்பர் திரு குமரன் அவர்கள் இதற்கான பொழிப்புரையை எவ்வளவு அழகாக தருகிறார் பாருங்கள்.

தலைப்பைக் கிளிக்கினால் அவர் வலைக்கு வழி கிடைக்கும்.


கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் என்னும் பறவை பேசுகின்ற பேச்சுச் சத்தம் கேட்கவில்லையா பேய்ப்பெண்ணே? காசு மாலைகளும் தாலிச் சங்கிலியும் ஒன்றோடு ஒன்று உரசி ஓசை எழுப்ப, கைகளை மாற்றி மாற்றி வாங்கி, வாசமான நறுமணம் கொண்ட தலைமுடியுடைய ஆய்ச்சியர் மத்தினால் தயிர் கடையும் ஓசையைக் கேட்கவில்லையா? எங்களுக்குத் தலைவியான பெண்பிள்ளையே! நாராயணன் உருவமான கேசவன் கண்ணனை நாங்கள் பாடக் கேட்டும் நீ தூங்குகின்றாயா? நம்பமுடியவில்லை! ஒளி மிகுந்தவளே! எழுந்து வந்து கதவைத் திறவாய்!

வெள்ளி, டிசம்பர் 21, 2012

Thiruppavai 6



புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?!
பிள்ளாய்! எழுந்திராய்! பேய் முலை நஞ்சு உண்டுஇந்த
கள்ளச் சகடம் கலக்கழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

 இந்த அழகான பாசுரத்தின் உரை எனது வலை நண்பர் +  திரு குமரன் அவர்கள்  வலையில் இருக்கிறது. அங்கே சென்று அவசியம் படியுங்கள். 

வியாழன், டிசம்பர் 20, 2012

தீயினில் தூசு ஆகும்!







KINDLY CLICK AT THE TITLE TO MOVE ON TO THE BLOG OF MY FRIEND THIRU KUMARAN
TO KNOW THE MEANING AND TEXT OF THIS PAASURAM IN AANDAL THIRUPPAVAI.

புதன், டிசம்பர் 19, 2012

ஆழி மழைக்கண்ணா!





Thiruppaavai  Pasuram 

ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 

எனது வலை  நண்பர் திரு +குமரன் அவர்கள் தினமும் ஒரு பாசுரம் அவர்கள் வலையில் இட்டு அதற்கு உரிய பொருளையும் தருகிறார்கள்  அந்த வலைக்கு அவசியம் செல்லவும் 

செவ்வாய், டிசம்பர் 18, 2012

Thiruppavai 3rd Pasuram

திங்கள், டிசம்பர் 17, 2012

Thiruppavai 2nd Pasuram



வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ?! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய் உண்ணோம்! பால் உண்ணோம்! நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம்! மலர் இட்டு நாம் முடியோம்!
செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்று ஓதோம்!
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!

இந்த பாசுரத்திற்கு அழகான பொருள் எனது நண்பர் குமரன் எழுதிய பதிவுக்கு 
வழி இங்கே  
அவரது வலையில்  நான் கண்ட அற்புதமான ஆழ்வார் அவதாரிகை இங்கு தரப்படுக்கிறது.
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து!



ஞாயிறு, டிசம்பர் 16, 2012

Thiruppavai First Stanza

புதன், டிசம்பர் 12, 2012

Chinmaya Ganapathy





Smt.Rajeswari in her blog has beautifully written a Prayer Song on Lord Ganapathy . Chinmaya Ganapathy in Kolhapur is possibly the TALLEST GANAPATHY STATUE in India.

You may click the title of this posting to move to her blog to read the narration of this great architecture.

Thanks a lot Mrs.Rajeswari. 

செவ்வாய், டிசம்பர் 11, 2012

யாரை எதிர்பார்த்து