JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஜனவரி 24, 2013

Long Long Ago..



This photo was taken some 44 years ago at Thanjavur Srinivasa Nagar Giri Road House, where we moved into on 3rd February 1969.

The house had three small rooms , the first we used as a kitchen, the middle wherein we entered from side ways, and a third one overlooking the road.  

There in the garden we had almost all the flower plants . I had a small camera provided by my good friend which I was using for a long time.  It was a kodak camera.  The film roll has to be finished in order that it is neatly packed so that prints could be taken later from any studio.

We were in this house right upto the end of 1969 when one day I was told by another friend who told me to shift to another house near market almost the next day.


புதன், ஜனவரி 16, 2013

Grandkid Sanju Happy BirthDay on 17th January 2013



A very Happy Birth day to You, Sanju. +Sanchitha Bala 

ஞாயிறு, ஜனவரி 13, 2013

Thiruppavai 29th 30th Pasuram

Thiruppavai 29th 30th Pasuram

சனி, ஜனவரி 12, 2013

Thiruppavai 28th Pasuram

வெள்ளி, ஜனவரி 11, 2013

Thiruppaavai 27th Pasuram

வியாழன், ஜனவரி 10, 2013

Thiruppavai 26th Pasuram

புதன், ஜனவரி 09, 2013

Thiruppavai 25th Pasuram




ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்! பறை தருதியாகில்
திருத்தக்கச் செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
The meaning of this Paasuram is provided by Thiru Kumaran my web friend
in this blog
www.koodal1.blogspot.com
It is reproduced below heartily thanking him for the lucid interpretation.


பெருமையில் சிறந்த ஒருத்தியான தேவகியின் திருமகனாகப் பிறந்து, பிறந்த அன்று இரவே பெருமையில் சிறந்த இன்னொருத்தியான யுசோதையின் மகனாக மறைத்து வைக்கப்பட்டு நீ வளரும் போது, நீர் மறைந்து வாழ்வதைப் பொறுக்க இயலாமல் உனக்குத் தீங்கு செய்ய நினைத்து அரக்கர்களை அனுப்பிய கம்சனின் எண்ணத்தை பொய்யாக்கி, அவனது வயிற்றில் நெருப்பாக நின்ற நெடுமாலே! கண்ணா!

உன்னைப் போற்றி வந்தோம்! நீ எங்களுக்கு வேண்டியதை தருவாய். நாங்கள் உனது பெருமை மிக்க செல்வத்தையும் புகழையும் பாடி எங்களது வருத்தங்கள் எல்லாம் தீர்ந்து மகிழ்வோம்!


செவ்வாய், ஜனவரி 08, 2013

Thiruppavai 24th Pasuram

திங்கள், ஜனவரி 07, 2013

thiruppavai 23rd pasuram




மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவு உற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதரு மா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்து அருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!


Please move on to the blogs of my web friends Smt.Valli Narasimhan OR Mr.Kumaran to understand the meaning of this pasuram.





ஞாயிறு, ஜனவரி 06, 2013

Thiruppavai 22nd Pasuram

சனி, ஜனவரி 05, 2013

Thiruppavai 21st Pasuram

வெள்ளி, ஜனவரி 04, 2013

Thiruppavai 20th Pasuram


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்!
செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்!
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

Courtesy:
The following text is reproduced from the blog of my web friend Thiru +Kumaran.
Thank U Mr.Kumaran.



முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்னால் சென்று அவர்களது இடர்களை எல்லாம் நீக்கும் கடவுளே எழுந்திருப்பாய்!

சிறந்த குணங்களை உடையவனே! வலிமை உடையவனே! உன்னை வெறுத்தார்களுக்கு வெப்பம் கொடுக்கும் குற்றமில்லாதவனே! எழுந்திருப்பாய்!

செப்பு போன்ற மெல்லிய முலையும் சிவந்த வாயும் சிறிய இடையும் உடைய நப்பின்னைப் பிராட்டியே! திருமகளே! எழுந்திருப்பாய்!

உன் கணவன் மூலமாக நாங்கள் வேண்டியதெல்லாம் தந்து இப்போதே நாங்கள் மார்கழி நீராடும்படி செய்வாய்!

வியாழன், ஜனவரி 03, 2013

Thiruppavai 19th pasuram




குத்துவிளக்கு எரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல் ஏறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்!
மைத்தடங்கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனைப் போதும் துயில் எழ ஒட்டாய் காண்!
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!

My web friend Thiru +Kumaran has romanticized the paasuram in his illustrating the scene. Please log on to his blog for his dedication to spiritual journey.

We Get Blessed by the Lord through Thaayaar only. Possibly this is the inference here.

குத்துவிளக்கு எரிய தந்தக்கால்களை உடைய கட்டிலின் மேல் மெத்து மெத்தென்ற பஞ்சினால் ஆன மெத்தையின் மேல், கொத்து கொத்தாக மலர்கள் சூடிய தலைமுடியை உடைய நப்பின்னையின் கொங்கையைத் தழுவியபடி கிடக்கும் மலர் போன்ற மார்பை உடையவனே! வாயைத் திறந்து பேசுவாய்!

மையணிந்த கண்ணை உடையவளே! நீ உன் கணவணை எத்தனை நேரமானாலும் துயில் நீங்கி எழ விடமாட்டேன் என்கிறாய்! எள்ளளவு நேரமும் உன் கணவனைப் பிரிந்து உன்னால் இருக்க இயலாது போலும்! அப்படி இருப்பது உன் தகுதிக்கு சரியானது இல்லை!

புதன், ஜனவரி 02, 2013

Thiruppavai 18th Pasuram




உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்!
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!


courtesy: my web friend Thiru Kumaran's blog
www.koodal1.blogspot.com

வலிமையான மதங்கொண்ட யானைகளை உடையவனும் தோற்காத தோள் வலிமையை உடையவனும் ஆன நந்தகோபாலனின் மருமகளே நப்பின்னைப் பிராட்டியே! மணம் கமழும் தலைமுடியை உடையவளே! கதவைத் திறப்பாய்!

ஆண்கோழிகள் (சேவல்கள்) எல்லாப் பக்கங்களிலும் கூவுகின்றன பார்! மாதவிப் பந்தல் மேல் பல விதமான குயில் இனங்கள் கூவுகின்றன பார்!

பந்து விளையாடும் விரல்களை உடையவளே! உன் கணவனது திருப்பெயர்களை நாங்கள் பாட, உன் கைகளில் இருக்கும் பெருமை மிக்க வளையல்கள் ஒலி எழுப்ப, உன் செந்தாமரை போன்ற திருக்கைகளால் மகிழ்ச்சியுடன் வந்து கதவை திறப்பாய்!

***




இராமானுஜர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வினை இந்தப் படத்தில் சித்தரித்திருக்கிறார்கள். இராமானுஜர் ஒரு முறை பிக்ஷைக்குச் செல்லும் போது தனது வழக்கம் போல் திருப்பாவை பாசுரங்களைப் பாடிக் கொண்டு சென்றார். பெரிய நம்பிகளின் திருமாளிகைக்கு முன் வரும் போது 'உந்து மத களிற்றன்' என்று தொடங்கும் இந்த பாசுரத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அப்போது பிக்ஷை அளிப்பதற்காக வெளியே வந்த பெரிய நம்பிகளின் திருமகள் அத்துழாய் வெளியே வந்தார். அந்த பெண்ணைப் பார்த்தவுடன் நந்தகோபனின் மருமகள் நப்பின்னைப் பிராட்டி தனது சீர் ஆர் வளையல்கள் ஒலிக்க செந்தாமரைக் கையால் கதவைத் திறந்து வந்தாள் என்று எண்ணி அவளது கால்களில் விழுந்து வணங்கினார் எம்பெருமானார்.

செவ்வாய், ஜனவரி 01, 2013

Thiruppavai 17th Pasuram