JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், டிசம்பர் 31, 2012

Thiruppavai 16th Song.மணிக்கதவம் தாள் திறவாய்!






நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியர் எமக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!
http://www.koodal1.blogspot.com 

எங்கள் குலத்திற்குத் தலைவனான நந்தகோபனுடைய அரண்மனையைக் காப்பவனே! அவனது கொடியும் தோரணங்களும் தோன்றும் வாயிலைக் காப்பவனே! மாணிக்கக் கதவைத் தாள் திறப்பாய்!
ஆயர் சிறுமியர்களாகிய எங்களுக்கு வேண்டியதெல்லாம் தருவதாக மாயன் பச்சை மணி போல் நிறம் கொண்டவன் நேற்றே வாக்குறுதி தந்திருக்கிறான்! அதனால் அவனைத் துயில் எழுப்பிப் பாட தூயவர்களாக வந்திருக்கிறோம்! அம்மம்மா! பேசிப் பேசி நேரத்தைக் கடத்தாமல் நீர் அன்பின் வெளிப்பாடான நிலைக்கதவைத் திறப்பாய்!