JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

புதன், ஏப்ரல் 13, 2011

மன்னுபுகழ் கோசலை குலசேகராழ்வார் பாசுரம்

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே! தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர் கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே! என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ! தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன் மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே! ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ! தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே! காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே! ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ! குலசேகராழ்வார் பாசுரம் http://koodal1.blogspot.com/2011/04/blog-post_12.html