JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

புதன், டிசம்பர் 25, 2013

மெல்ல வந்து கதவைத் திற..

என்னங்க இப்படி தூங்கி தூங்கி வழியறீங்க !!

இன்னிக்கு பாடலே கும்பகர்ணன் தோற்றுப்போய் ஆண்டாளிடம் தன தூக்கத்தை கொடுத்த கதை தானே !!

அது சரி.  முதல்லே நாராயணா என்னும் நாமத்தை சொல்லி எழுந்திருங்கள்.

முதலில் நீ ஒரு வாய் சூடா காபி தா.

இந்தாங்க. புடிங்க. குடிச்சுட்டு எழுந்திருங்க..

அப்பாடி, நேற்றைக்கு கிருஸ்துமஸ் கேக் ரொம்ப சாப்பிட்டு விட்டேன் போல இருக்கு. தூக்கம் அப்படி கண்ணை சுற்றி வருது.

அதெல்லாம் அப்பறம். இன்னிக்கு முதல்லே இந்த கோலத்தை பாருங்க.


இந்த கோலம் கோலா லம்பூர் லேந்து வந்ததாக்கும்.
2010 drawn before a plaza at Kuala Lumpur.
அங்கன ஒரு பிளாசா விலே அங்கே வேலை பார்க்கும் இந்தியர் கலாசாரத்தை ஒட்டி நடத்தப்படும் தீபாவளி திருநாளன்று போட்ட கோலம் இது.

இன்னிக்கு என்ன காலை சிற்றுண்டி ?  யார் உபயம் ?பின்னே

அத முதல்லே .கேளுங்க.
 என்ன தான் சொன்னாலும் மனசு  அந்த பெருமாள் மேல திருவரங்கத்தான் பக்கம் திரும்பல்லையே....

முதல்லே  பாடல்,பின்னே   பிரவசனம்.அப்பறம் தான்  பிரசாதம்.

சரி, சீக்கிரமா பாட்டை  போடு.

இன்று திருப்பாவை யிலே
பத்தாவது பாசுரத்தை பாடுபவர் எம்.எல்.வி. அவர்கள்.

தோடி ராகத்துலே எம்.எல்.வி. அம்மா பாடி இருக்காங்க. 
கண்ணதாசன் உரை என்ன தெளிவா இருக்கு. அத ஒரு தரம்  படிச்சு,கோதை அம்மா என்ன தான் எழுதியிருக்கா அப்படின்னு .புரிஞ்சுக்கங்க.

படிக்கிறேன்.பாடவும் போறேன். ஆனா இது கொஞ்சம் ஸ்லைட்டா ஹிந்தி மெட்டு.  நீயும் கேட்கறையா ?





கேட்கிறேன்.ஆனா அதே சமயம் கேட்டுண்டே 
+Shylaja Narayan 
நான் அந்த ஸ்ரீரங்கம் ஷைலஜா வின் இலக்கிய கட்டுரையை இன் த மீன் டைம் படிக்கிறேன்.  அந்த அரங்கத்தான் அபார அருள் அவங்களுக்கு இருக்கு. இல்லைன்னா இது மாதிரி எழுத முடியாது. 

அடடே..வேளுக்குடி சார் வந்தாச்சு.
வாங்கோ. வாங்கோ. (உங்க டைரி இன்னும் வல்லையே சார் !!)
+velukkudi krishnan 
VELUKKUDI KRISHNAN ON THE SECOND DAY

DISCOURSE ON THIRUPPAVAI.





கேட்டுண்டே இருக்கலாம் போல இருக்கு.
அத்தனையும் பாற்கடல் லே கிடைக்கிற திவ்யாம்ருதம்.

மெல்ல வந்து கதவைத் திற..

என்ன விஷயம் ?

இன்னிக்கு ஏதோ புது தினுசா ஒரு டிபன் வந்து இருக்கு.

யாரு கொண்டு வந்திருக்காங்க ?

ஆதி வெங்கட் அவங்க அனுப்பியதா  சொல்றாங்க. 

நம்ம வேங்கட நாகராஜ் இல்ல, டெல்லிக்காரர். அவரது தர்மபத்னி. 

என்ன அடை மாதிரி இருக்கு ?

ஆமாம். இது தவலை அடை .  தவலைப் பானை போல வயிறு இருந்து பசி உயிர் போனாலும் ,  ஒண்ணு சாப்பிட்டாலே வயிறு நிறைஞ்சுடும். அதுக்குன்னு நாலைஞ்சு சாப்பிட்டு வயிறு காஸ் ஜாஸ்தியா போயி,
ஜெலூசில் டாப்லெட் பத்து சாப்பிடாதீங்க.


எனக்குத் தெரியாதா என்ன ?
ரொம்ப டேஸ்டா இருக்கறது எல்லாமே கொஞ்சமாத்தான் சாப்பிடனும். அது சரி, தொட்டுக்க என்ன ?

கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி, சில பேர் இட்லி மிளகாய் பொடி போட்டு இதயம் நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடுவாங்க

ஆஹா. ரொம்ப டேஸ்டா இருக்கே...  அந்தக் காலத்துலே எங்க அம்மா பண்ணுவாங்க..  ஹூம்.. நினைச்சுப்பார்க்கவே முடியாது இப்ப எல்லாம்..

+Geetha Sambasivam சொல்லிக்கொடுத்தாங்களாம். 

அப்ப யாருக்கு தாங்க்ஸ் சொல்லுவது ?

எப்பொருள் யார் யார் தயார் செய்யினும்
அப்பொருள் முதற்கண் உண்பது அறிவு.
+Adhi Venkat
ஆதி வெங்கட் அவர்களுக்கும் நன்றி.

*******************************************************************************


If there is love, then there is no fear, and if there is fear then there is no love. See, fear, love and hatred are all made up of the same energy. When there is hatred in a person, he is not afraid of anything. When there is deep love in a person, then also there is no fear. It is one energy that manifests in these three forms - love, hatred and fear.  +Sri Sri Ravi Shankar