JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, டிசம்பர் 20, 2013

அது யாரு அந்த மாயன் ?


அது யாரு அந்த மாயன் ?

என்ன கேட்கற ?

யாரு அந்த மாயன் ?

மாயனா யாரை கேட்கராய் !  எனக்கு எந்த மாமனையும் தெரியாது.

நாராயணா நாராயானா !!
மாயனைச் சொன்னேன்.
நேத்திக்கு அந்த குழந்தைகள் போட்ட கோலாட்டமே  மனசுலே நின்னுண்டு இருந்தது இல்லையா.
இராத்திரி லே ஒரு கனவு.

என்ன .. உனக்கு ஒரு ரூபி வச்ச மோதிரம் வாங்கற மாதிரியா ?

அதெல்லாம் பிஸ்தா.
இங்கே இந்த கனவிலே அந்த குழந்தகள் அத்தனையும் வித விதமா கலர் புல்லா டிரஸ் பண்ணிண்டு வந்து
திருப்பாவை அஞ்சாம் பாசுரத்துக்கு நாட்டியம் ஆடறா பாருங்கோ..

நான் எங்கே பார்த்தேன்.?
 நீ மட்டும் தானே கனவிலே பார்த்தேன் அப்படின்னு சொல்ற.  பாத்த உடனே என்னை எழுப்பக்கூடாதோ...

கனவு கலைஞ்சு போடும் இல்ல.
அதனாலே தான்.
இப்ப பாருங்க...
கண்ணன் நினைச்சான் கனவுலே வந்துட்டான்.

கையைக் கிள்ளிப் பார்த்தேன். நான் தூங்கிக்கொண்டு இல்லை.
கிழவி கனவில் கண்டதை உடனே டவுன்லோடு பண்ணி வச்சு இருக்கிறாள்.

காலை விடிந்து விட்டது. எனக்கு முன்னமேயே வீட்டுக்காரி எழுந்து
இந்த எழுபத்தி இரண்டு வயசுலே வாசல்லே என்னமா ஒரு அழகா கோலம் போட்டு இருக்கிறாள் .

மீனாச்சி என்று அன்பொழுக அழைத்தேன்.

என்ன ?

என்று அந்த  சரவணன் மீனாச்சி சீரியல் ஹீரோயின் குரலில் ரிடார்ட் செய்ய...
நான் தொடர்ந்தேன்.

ரொம்ப அழகா...

ஆகிற வயசுக்கு, இந்த கமேண்டாலாம் தேவையா ?

உன்னை சொல்லலீடி .. கோலத்தை சொன்னேன்.

அதுவா. வாணி முத்துகிருஷ்ணனுக்கு தாங்க்ஸ் சொல்லுங்க.
இப்ப இந்த நாட்டியத்தை பாருங்க. என்று டி.வி.டி ஐ. ஆன் பண்ண, 




என்ன ஒரு சிரத்தை? என்ன ஒரு பக்தி.

அதுக்கு இந்த குழந்தைகளுக்கு அந்த ஆண்டாளே அனுகிரஹம் பண்ணி இருக்கணும்.

மீனாச்சி, ஏண்டி அந்த அனுகிரஹத்துலே ஒரு அஞ்சு பர்சென்ட் கூட உனக்கு கிடைக்கலையா ?

ஆண்டாள் பெயரைச் சொல்வதற்கும் அந்த திருப்பாவை தனை தினம் தினம் காலை எழுந்தவுடன் பாடவேண்டும் என்று மனசு கொடுத்ததே அந்த தாயார் தானே. !!

ஆமாம். ஆமாம்.

என்ன ஆமாம் என்று கேட்டுக்கொண்டே ஸ்ரீரங்கம் வந்தார்.

இந்த உரை பளிச் அப்படின்னு செந்தமிழ் லே அழகா இருக்கிறது இல்லையா.
என்னோட உரையையும் பாருங்க.. என்றார்.

இன்றைய பஜனை கோஷ்டி ஊர்வலத்தைத் துவங்கியது.

தாத்தாவுக்கு மூட்டு வலி பயங்கரமா. நெற்றிக்கு சாலிகிராமம் பாபா கோவிலுக்கு போயிட்டு வந்தார். வாழ்க்கையிலே எத்தனை மேடு பள்ளம் இருக்கும் என்பதை விருகம்பாக்கம் ரோடுகளே ஆட்டோவில் போகும்போதும் சொல்லுகின்றன.

 இருந்தாலும் தத்தக்கா தத்தக்கா என்று அவரும் நடந்தார்.
பாட்டை கேட்டுண்டே தாத்தாவும் போகிறார் ஊர்வலத்துடன்.
 மனசு சொல்றது:
என்னமா அந்த அம்மா பாடறாங்க..

அந்த நாராயணன் நாமத்தை  கேட்டுகிட்டே இருக்கணும். 
நாராயணன் நம்மை அறியாம கூட்டிண்டு போகனும் 



தாத்தா நீங்க உட்காருங்கோ. நாங்க இன்னிக்கு பிரசாதம் எல்லாம் தந்துடரோம் என்று +Balu Sriram வாய்ஸ் தர்றார்.

இன்னிக்கு என்ன பிரசாதம் என்று கேட்பதற்குள் வாசனை மூக்கைத் துளைத்து விட்டது.

இவ்வளவு டேஸ்டா எங்க கிடைக்கிறது என்று கொண்டு வந்தவரை கேட்டேன்.

ஒரு ரோஜா கொத்துடன் பிரசன்னமான அவர்,  கடவுள் காட்டும் பிரத்யேக அன்பு தான் நாம் நம்ம பிரண்ட்ஸ் வழியாக உணரும் நட்பு என்று புள்ளி வைத்த கோலம் போல சிக் என்று ஒரே செண்டன்ஸில் ஒரு உண்மையை புரிய வைக்கிறார்.
+Ramalakshmi Rajan

பத்மா ரிசைப்ஸ் என்று பெங்களூர் ல் இருக்கிறது. ஸ்பெசல் ஆக நிவேத்தியம் என்று சொல்லி வாங்கிண்டு வந்தேன் அவர்களும் சொல்ல வலை நண்பர் எல்லோருமே எஸ். எஸ். என்றார்கள்.

தாங்க்ஸ் .

நண்பர் திரு வெங்கடராமன் பெங்களூரில் தான் இருக்கிறார். அவர்கிட்டே ஒரு வார்த்தை சொன்னால் போதும். ஒரு கூடை நிறையா வாங்கிண்டு வந்திடுவார்.

நாராயணா !!

ப்ளீஸ் டிலே யுவர் விசிட் டில் ஐ ஹாவ் ஹார்ட் புல் ஆப் கேசரி.

த எண்டு
தொடரும்.  நாளைக்கு ஆறாவது பாசுரம் திருப்பாவை

************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
மனசு இருக்கே அது சஞ்சலம் என்பதற்கு ஒரு உதாரணம். 
ரவி சங்கர் அவர்கள் சொல்லுவார்.

The most unreliable thing in your life is your own mind. One minute, it likes s omething, another minute it likes something else. So, your mind goes all over the place. So, you cannot rely on your own mind. Once you know this, you will laugh, you will smile. Never mind: why should I control someone else’s mind when my mind itself is not under my control? Isn’t it? +Sri Sri Ravi Shankar