JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, டிசம்பர் 21, 2013

வாசலிலே பூ விளக்கு கோலம்.

திருப்பாவை ஆறாம் நாளான இன்று

வாசலிலே பூ விளக்கு கோலம்.
+Shylaja Narayan
புள்ளும் சிலம்பின காள் என்று துவங்கும் பாசுரம். திருமதி. ஷைலஜா அவர்கள் அற்புதமாக இந்த பாசுரம் உருவான பின் புலத்தை சொல்கிறார்கள் இங்கே சென்று படியுங்கள்.


இன்றைக்கு தாத்தா திருப்பாவை பஜனை கோஷ்டியில் நாட் கோயிங்.
சென்னையில் இரண்டு நாட்களாக அடிக்கும் பனி காரணமாக , ஜல்ப் பிடித்துக்கொண்டு விட்டது.

தாத்தா நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நாங்க போயிட்டு வந்துடறோம். என்று
தாத்தாவின் சிஷ்ய கோடிகள். வாலண்டியர் பண்ண, அவர்
சரி என்றார்.


இன்றைக்கு பிரசாதம் சாம்பார் இட்லி ( நெய் கலந்த சாம்பார்)  ஒரு அம்பது ப்ளேட் ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது.

எப்படி செய்வது என்று கேட்டேன். முதல்லே சாப்பிடுங்க என்றார்கள்.


saambar idli
தாத்தா ஒரு மூணு ப்ளேட் போதும் என்று நினைத்தார். இருந்தாலும் அரை ப்ளேட்டுக்கு மேல் சாப்பிட முடியவில்லை.

ஜலதோஷம் லேசா பீவர் இல்லை மாதிரியும் இருக்கு. இருக்கிற மாதிரியும் இருக்கிறது. 

அதை ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருந்தால், கண்ணுக்கு நேரே இருக்கும் சாம்பார் இட்லி காணாமல் போயிடும் என்ற கவலை வேற.

இப்ப என்ன பண்ணுவது என்று சக தர்மிணியைக் கேட்டேன்.

பேசாம கண்ணை மூடிண்டு ராம ராம அப்படின்னு சொல்லிண்டு ஜபம் பண்ணுங்க அப்படின்னாள்.

த எண்ட் 
***********************************************************************************************************************************************************************************************************************************************


இராம நின்னே நீ ப்ரோவரா..
இன்னிக்கு சனிக்கிழமை. அனுமார் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டே திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் வலைக்கு சென்றேன். ஒவ்வொரு நாளும் மாருதி பகவானை பிரார்த்தனை பண்ணும்போது சொல்லவேண்டிய ஸ்லோகங்கள் இருக்கின்றன. 


Meditate. A few minutes of deep meditation will connect you with the ocean of intuition deep within you. +Sri Sri Ravi Shankar