JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், செப்டம்பர் 24, 2013

The new Design that Madam Thulasi Gopal may select on Gopal Sir's birthday.


A new saree 
Design by Ranjana craft. 

Wonderful designs are there in this blog . Please click above.

You may visit the blog or face book for further details. 

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

வாடியம்மா



வாடியம்மா 

இது மேடம் கவி நயா அவர்களின் கவிதை. அம்மன் புகழ் பாடி ஒவ்வொரு செவ்வாய் அன்றும் தனது ஆன்மீக பதிவான அம்மன் பாட்டு என்னும் வலையில்
இடுகிறார்.

இதுவரை நான் பார்த்தவரை ஒரு ஆயிரம் பாடல்கள் எழுதியிருப்பார். அதில் நான் ஒரு எழுநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளுக்கு நான் மெட்டு போட்டு இருக்கிறேன்.

ஆன்மிகம் பற்றி பதிவுகள் எழுதுவோர் ஆயிரமாயிரம் இருப்பினும்
அம்மன் பாத அடிகளில் தன இதயத்தைப் பதித்து கண்ணீரால் அவற்றை நனைத்துக் கவி பாடும் திறன் கொண்ட அவர் ஈடுபாடு வியக்கத்தக்க ஒன்றாம்.

அதுவும் அவர் போற்றி மகிழும் அன்னையின் கிருபையே.

அவர் வலைக்கு செல்லவும். இன்று மட்டுமல்ல. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையிலும். 

திங்கள், செப்டம்பர் 16, 2013

மீனாச்சி பாட்டிக்கு ......இன்னிக்கு happy birthday



மீனாச்சி பாட்டிக்கு இன்னிக்கு 71 வயது முடிஞ்சு, 72 வது வயது பிறக்கிறது.
happy birthday to you..அப்படின்னு சொல்ல கிழவி இருக்கும் ஈஸி சேர் பக்கத்துலே போனேன்.

ஹாப்பி பர்த் டே டு யூ என்றேன்...
இன்னிக்கு திருவோணத்திரு நாள் இல்லையா ? எல்லார் வீட்டிலேயும் பிரதமன் அப்படின்னு ஒரு பால் பாயசம் பண்ணி சாப்பிடுவாங்க. நாம இன்னிக்கு கோவிலுக்கு போயிட்டு வருவோமா...

திரு ஓணம் சைலஜா வீட்டில் 
பாட்டியோட தங்கச்சி துளசி அம்மாவும் கோபாலும் 


சரி, சரி. என்றார்.

என்னமா நாள் ஓடறது ?

அவர் கிட்டே ஒரு பேச்சுக் கொடுத்தேன் .... எனக்கும் பொழுது போகணும் இல்லையா

என்ன நினைப்பு ?

ஒண்ணுமில்லே.



இந்த 72 வயசுலே கடந்து வந்த காடு, மேடு , பள்ளம் பத்தி.....??????


ஹூம் ....ஹூம்   இல்லை. 

உடம்பைப் பத்தியா ?

இல்லை. 

ஆத்துக்காரர் இந்த வயசுலேயும் கோபக்காரரா இருக்காரே அப்படின்னா?

இல்லை,. அது அவாவா ஸ்வபாவம். நம்ம யாரையும் திருத்த முடியாது. 

குழந்தைகளை பத்தியா ?

இல்லை. அவங்களுக்கு எல்லாமே வயசாயிடுச்சு. 
அவங்க குழந்தைகளை பொறுப்புடனே வளர்க்கும் சக்தியும் புத்தியும் அவர்கள் தனக்குத் தானே தான் டெவலப் பண்ணிக்கணும்.  ..

பேரக்குழந்தைகளைப் பத்தியா ?

எல்லாம் தங்கம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம். 

எல்லாம் பகவான் மாந்துரையான் நல்லபடி பார்த்துப்பான். 
 எனக்கு நம்பிக்கை இருக்கு. 

பின்ன எதைப் பத்தி சிந்தனை ?

சொல்லிடுவேன். சத்தம் போடுவேள். அதனால எனக்கு என்ன அப்படின்னு 
பேசாம இருக்கேன்.

இல்ல. சத்தம் போடல்ல. 

நான் நம்பமாட்டேன். உங்க சுபாவம் எனக்கு ஐம்பது வருஷம் தெரியும். 

அம்பது இல்லை. நாப்பத்தி அஞ்சு தான்.

வைச்சுக்கோங்க. அது போதாதா.

அப்ப சொல்லு.  எதைப் பத்தி ....

எதையும் பத்தி சொல்லும்படி  இல்லை. 

அப்ப சொல்லு ..சோகத்துக்கு காரணம் என்ன ? .இது அது எது  ? அப்படின்னு ...
எதாச்சும் சொல்லு.

ஒரே விஷயம் தான் திக் திக் அப்படிங்கறது. 
என்ன இருந்தாலும் இது தப்பு தானே...

எது தப்பு.. நான் ஏதாவது தப்பு ... காபிலே சக்கரை கம்மியா போட்டுட்டேனா?

உங்களை ஒண்ணும் சொல்லலே...

பின்ன யாரை ?  வாடர் காரன் நாலு வாரமா வராம இருக்கானே அதையா 

இல்ல. 

எதித்தாத்து மாமி, காலி பண்ணும்போது சொல்லிண்டு போகலை அதுதானே..

சீ..சீ.. அவங்க ரொம்ப நல்ல மாமி.  அதப்பத்தி சொல்வேனா என்ன.?

அத்வானி இன்னும் சரின்னு சொல்லலையே அதுவா ?

அரசியலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் ??

பின்ன என்ன ..?

பின்னே ஒன்னும் இல்ல. முன்னே தான். 

முன்னே என்ன...என் மூஞ்சி தான் இருக்கு. அதுலே என்ன ? மூக்கிலே கொஞ்சம் சளி ஒட்டிண்டு இருக்கு.  அதுவா ?? வெளிலே போறதுக்கு முன்னாடி துடைச்சுண்டு போரேன். நிம்மதி தானே 

உங்களுக்கு எது சொன்னாலுமே இப்படி ஒரு கிண்டல், நையாண்டி தான். ஆர்ப்பாட்டம் தான். 

ஏண்டி, நானா ஆர்ப்பாட்டம்  பண்றேன். பண்ணினதெல்லாம் உங்க.....

அவங்களைப் பத்தி எதுக்கு இப்ப...?

நீ தானே ஆரம்பிச்ச ..

நான் ஒண்ணும் ஆரம்பிக்கல்ல...

அப்ப நான் ஆரம்பிச்சேனா..  நான் நல்லதுக்குத் தானே..சொன்னேன்.

என்ன சொன்னேன் தொன்னேன். 

நாளைக்கு உன் பிறந்த நாளேச்சே.  திருவேற்காடு போய் அம்மனுக்கு ரோஜாப்பூ மாலை போட்டு வேண்டிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கேனே. 



எதுக்கு நீ 
.....இப்ப கவலையா இருக்கே.. நான்தான் உனக்கு அந்த மாணிக்கம்  பதிச்ச மோதிரம் வாங்கித்தர்றேன் அப்படின்னு சொல்லிட்டேனே..



அதுக்கு ஒண்ணும் எனக்கு வருத்தம் இல்ல.  
நான் என்னிக்காவது அது வேணும் இது வேணும் அப்படின்னு கேட்டு இருக்கேனா..

இல்லை.  

இருக்கறது எல்லாத்தையுமே வேண்டாம் அப்படின்னு கொடுத்தாச்சே.

அதான் கேட்கறேன். என்ன வருத்தம் என்ன கவலை...

ஒண்ணுமில்லை.  இந்த சரவணன் இருக்கானே...

யாரு சரவணன்..  ஆனந்தி  புள்ளையா ...அவன் தில்லி லேன்னா இருக்கான். 

அவன் தங்கமான புள்ளையாச்சே..அவனைச் சொல்லல.

பின்ன யாரை...

சத்த சும்மா இருங்க.. என்ன சும்மா இருக்கவிடுங்கா. நானே ஒரு தினுசா 
சமாதானம்  ஆகி விடுவேன். 

என்னது அப்படி உனக்கு.. யாரு அந்த சரவணன் , உனக்கு, என்னது பண்ணினான் , சொல்லித் தொலையேன். 

சொல்லாட்டா       விடமாட்டீகளே..

இப்ப தான் டென்சன் ஜாஸ்தி ஆறது. 

சரி. சொல்லறேன்.

சொல்லு. 

இந்த சரவணன் இருக்கானே...

அதான் ,அது யாரு ? 

அதாங்க...இந்த சரவணன் மீனாட்சி சீரியல் லே வர்றானே...அவன் பண்ணினது ரைட்டா...?  மாமனார் ஐ.சி. யூ இருக்கார் அப்படின்னு கட்டின பொண்டாட்டி சொல்றா.  போய் பார்க்கவேண்டாமோ... 

இப்ப பாருங்க.. என்ன ஆச்சு.


சரவண பவனே ...ஆறுமுகா..
என்னை காப்பாத்து. 

தாத்தா வை  காப்பாத்த என்ன முருகன் என்ன செய்தார்?

இங்கே கிளிக்கவும்.

HAPPY ONAM TO ALL MY KERALA FRIENDS 

ஓணம் 
இந்த ஓணம் கோலம் யார் வீட்டிலே ? தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும். 


ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

Namami VignEswara Paadha Pankajam.

திருமதி அம்பாள் அடியாள் இயற்றிய அருமையான பாடல் இது.
தும்பிக்கையான் துணை இருக்க துயர்கள் யாவும் மறையட்டும்.
அவர்கள் வலைப் பதிவுக்கு சென்று முழுப் பாடலையும் கேட்டு மகிழுங்கள்.















Ganesa Pancharathnam by M.S.






natyam.

vinayaka chathurthi அன்று சுப்பு தாத்தா என்ன செய்தார் ?
vinayakar poojai செய்வார்.

அறிந்து கொள்ள காலை 9 மணிக்கு மேல் 10 30 மணிக்குள்
சுப்பு தாத்தா வின் இன்னொரு வலைக்கு சென்று பாருங்கள்.

இங்கே கிளிக்கினாலும் உங்களை விநாயகன் அங்கே அழைத்து செல்வார்.

நினைவு இருக்கட்டும்.  நாளை காலை 9 மணிக்கு.


செவ்வாய், செப்டம்பர் 03, 2013

கனி முகம் காண வந்தேன் கற்பகமே...


மேடம் கவிநயா இயற்றிய அழகான பாடல் இது.
கனி முகம் காண வந்தேன் கற்பகமே...எனத்துவங்கும் பாடலின்
முழுமையான வரிகளை, அம்மன் பாட்டு என்னும் அவர்களின் வலைத்தளத்தில் காணுங்கள்.
வழக்கம் போல நான் இதை என் குரலில் ராகம் அடாணா வில் பாடுகிறேன். 





புதன், ஆகஸ்ட் 28, 2013

கோகுலாஷ்டமி



இன்று குட்டிக் கிருஷ்ணன் கண்ணன் மணி வண்ணன் பால கிருஷ்ணன் பிறந்த  நாள்.

பாடல்கள் பஜன் இங்கே.  பூஜைகள் அங்கே.



கோகுலாஷ்டமி.
பால கிருஷ்ணன் வருகையை முன்னிட்டு எல்லோர் அகங்களிலும் உற்சாகம்.



GOVINDA MADHAVA GOPALA KESAVA

கோவிந்தா மாதவ கோபாலா கேசவா.

HEY GOVINDA HEY GOPALA HEY DAYALU NATH







hare krishna hare krishna krishna krishna hare krishna

சனி, ஆகஸ்ட் 24, 2013

மகா சங்கட ஹர சதுர்த்தி.

இன்று மகா சங்கடஹர சதுர்த்தி.

எனது வலை நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் தஞ்சயம்பதி என்னும் பெயரிட்ட வலையிலே

ஆதி சங்கரர் இயற்றிய அற்புத பாடலான கணேச பஞ்சரத்தினத்தை இட்டு இருக்கிரார்கள்.

அப்பொழுதுதான் சங்கட ஹர சதுர்த்தி என அகத்தீஸ்வரர் கோவிலிலும் வினை தீர்த்த விநாயகன் கோவிலிலும் விநாயகனை தரிசித்து வந்த எனக்கு, கணினியைத் திறக்கும்பொழுது  பார்க்கக் கிடைத்த இந்த பஞ்ச ரத்தினம்

விநாயகனின் அருட்பிரசாதமாக விளங்கியது.

ஆண்டவன் நமக்கு யார் உருவில் நமக்கு நல்லது செய்வார் என நமக்கே தெரியாது.  ஆகவே தான் வீட்டுக்கு வரும் அனைவருமே சிவன் என நினைக்கவேண்டும், விருந்தோம்பவேண்டும் என்பது முதியோர்கள் சொன்னது.

திரு துரை செல்வராஜ் அவர்களுக்கு எனது நன்றி.


பாடலை பல முறை பாடியிருக்கிறேன் என்றாலும் இன்று எனது நண்பருக்காகவும் அவரது குடும்பத்தார் எல்லா நலன்களும் பெறவேண்டும் என பிரார்த்திக்கொண்டு இன்று பாடுகிறேன்.


மகா சங்கட ஹர சதுர்த்தி.


வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

Varalakshmi Nombu

வலை நண்பர் திருமதி கவிநயா அவர்கள் இன்று வரலக்ஷ்மி நோம்பினை முன்னிட்டு அழகான கவிதை ஒன்றை அம்மன் காலடியிலே சமர்ப்பித்து இருக்கின்றார்கள்.


அதை சுப்பு தாத்தா தனது வழக்கமான குரலில் ஆனந்த பைரவி ராகம்  என நினைத்து கொண்டு பாடி இருக்கிறார்.







பாடல் என்ன வென்று பார்க்க மேடம் கவிநயா அவர்கள் வலைக்கு செல்ல இங்கே கிளிக்கவும்.















வெள்ளி, ஜூலை 26, 2013

வாழ்வில் ஒரு பொருள் வேண்டும்

ஷிர்டி சாய் பாபா கோவில் 
இன்று குரு வாரம். மாலை ஐந்து மணி இருக்கும். கடைக்குப் போகத்தான் கிளம்பினோம். அங்கு சென்ற உடன் பக்கத்து கோவிலுக்கு போகலாம் என்று தோன்றியது. எந்த கோவிலுக்கு என்ற உடன் மாப்பிள்ளை இங்கு பக்கத்தில் சுவாமி நாராயண மந்திர் இருப்பதாக சொன்னார்.

என் பெண்ணுக்கு மாப்பிள்ளை செல் போன் போட்டு கேட்டதில் சுவாமி நாராயண மந்திருக்கான விலாசம் தந்தாள். அதை ஜி.பி. எஸ்.ல்  வழி கேட்டபோது அந்த ஜி.பி. எஸ் எங்களை நேரே சர்டி சாயி பாபா கோவிலுக்கு வந்து . சேர்த்து விட்டது..

கோவில் மூடும் நேரம். இன்னமும் ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தாலும் மூடி இருப்பார்கள்.  ஷிர்டி பாபா தர்சன் எனக்கு ய்தேச்சியாக கிடைத்தை பெரும் பாக்கியமாகத் தான் சொல்லவேண்டும்.

பக்கத்திலே அதே காம்பௌண்டிலே ஒரு ராதா கிருஷ்ணா மந்திர். அங்கு நமது சமூகத்தினர் விநாயகருக்கு எல்லா அபிஷேகங்களும் செய்து கொண்டிருக்கும் காட்சிதனையும் கண்டு மன மகிழ்ந்தோம்.

எல்லாம் வல்ல இறைவன் அருள்.

வீட்டுக்கு வந்து கணினியை திறந்தால், கவிஞர்  கி. பாரதி தாசன் அவர்கள் முருகன் மீது ஒரு அழகான கவிதை எழுதி இருக்கிறார்கள். 

மயிலேறி வருவான் முருகன்

 ..எனத் துவங்கும் கவிதை.

அதை நான் பிருந்தாவன் சாரங்க எனும் ராகத்தில் முதல் முயற்சியிலேயே பாடிவிட்டேன்.

மிக அழகான கவிதை அது. எத்துணை பாராட்டினாலும் தகும்.

அதுவும் அந்த முருகப்பெருமானின் அருளே. அதை எனது கந்தனைத் துதி என்னும் வலையில் நாளை இடுவேன்.


இன்னும் ஒரு அதிசயம். இன்று காலை இட்ரா எனும் அமைப்பு எனக்கு அனுப்பிய ஒரு துதிப்பாடலை நான் மொழி பெயர்த்து எனது வலையில் இட்டு இருந்தேன்.

எல்லாம் வல்ல இறைவன் 
வாழ்வில் ஒரு பொருள் வேண்டும் என்றாலும் தருகிறான்.
வாழ்வின் பொருள் எனக்குப் புரியவேண்டும் எனினும் சொல்லித் தருகிறான்.

இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எனது தஞ்சை நண்பர் திரு துரை செல்வராஜ்  அவர்கள் விளக்கி இருந்தார்கள் தனது பின்னூட்டத்திலே.

வாழ்வில் ஒரு பொருள் வேண்டின் இறைவனைத் துதியுங்கள்.  வாழ்வின் பொருள் தெரியவும் இறைவனைத் துதியுங்கள்.

 அந்த விளக்கத்தின் நுணுக்கமான துல்லியமான உண்மை இன்று அவர் சொல் கேட்டு எனக்கு புரியக்கண்டு வியந்தேன்.

இது எல்லாமே இன்று மதியம் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலையில் குறிப்பிட்ட அம்பாளின் அனுக்ரஹம் தான்.  திருச்சி செல்லும்போது அவர்கள் குறிப்பிட்ட உறையூர் கோவிலுக்கு செல்லவேண்டும்.
Posted by Picasa

புதன், மே 15, 2013

STUNNING PERFORMANCE... Can U imitate it ? At least for a few minutes ?



Will U and me try to imitate these men and women of exceptional calibre ?

இது போல பாட இயலுமா ?

ஒரு சில நிமிடங்களாவது இந்த இசையில் குளியுங்களேன்