JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், நவம்பர் 27, 2008

கைத்தல நிறைகனி

THIS PRAYER TO LORD GANESA IS SET TO RAAG YADHUKULA KAMBHODHI .TO LISTEN TO DR.M.S.SUBBULAKSHMI THE SAME PRAYER IN RAAG NAATTAI, PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே