JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், டிசம்பர் 28, 2015

திருப்பாவை 12



 எனது வலை நண்பர் ஜி ரா அவர்கள் தரும் விளக்கம் இப்பாடலுக்கு. 
அவர்கள் வலைத் தளத்திற்குச் செல்ல இங்கே கிளிக்கவும்.


“மடி நிறைய பாலின் சுமை அழுத்த, அதைத் தாங்காமல் கனைத்து, எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்ததும் மடியில் தானாகப் பால் சுரந்து நிலத்தில் விழும். அந்தப் பால் அளவில்லாமல் நிறைந்து அந்த இடத்தையே சேறாக்கும்.
அப்படிப்பட்ட இல்லத்தின் உரிமையாளரான நற்செல்வனுடைய தங்கையே எழுந்திரு! தலையில் பனி கொட்டும் படி எவ்வளவு நேரம் உன் வீட்டு வாசலில் நின்று உன்னை எழுப்புவது?”
எருமை கனைக்கும் ஒலி கேட்டதே தவிர அம்பொய்கையின் குரல் கேட்கவில்லை. கோதையும் அழைப்பைத் தொடர்ந்தாள்.
”சீதையைச் சிறையெடுத்ததால் சினம் கொண்டு தென்னிலங்கை மன்னனை அழித்தான் அந்த சூரிய வம்சத்து இராமன். நினைத்தாலே இனிக்கின்ற அந்த மனதுக்கு இனிய இராகவேந்திரன் பெயரைப் பாடுவதற்காகவது உன் வாயைத் திற. ”
அவள் எழவில்லையே தவிர கோதை பாடுவதைக் கேட்டு மற்ற வீட்டுக்காரர்கள் என்னவென்று எட்டிப் பார்க்கிறார்கள். அம்பொய்கை இன்னும் தூங்குவது அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது.
”தோழியே! இப்பொழுதாவது எழுந்திரு. இது என்ன இப்படியொரு ஆழ்ந்த உறக்கம்? அருகிலுள்ள அனைத்து இல்லத்தாரும் நீ இன்னும் தூங்குவதை அறிந்தனர். விரைந்து எழுந்து வந்து நோன்பில் கலந்து கொள்.”