JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், செப்டம்பர் 18, 2014

thalaattu from prabhandam





periyalWar paadiyathu.

பெரியாழ்வார் பாடிய பிரபந்தத்தில் இருந்து ஒரு
தாலாட்டு பாடல்.


மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே, தாலேலோ
வையம் அளந்தானே, தாலேலோ (1)

உடையார் கன மணியோடு  ஒண் மாதுளம்பூ
இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறு கபாலி  ஈசன் விடுதந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ
உலகம் அளந்தானே, தாலேலோ (2)

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரி வளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ
தேவகி சிங்கமே தாலேலோ (4)