JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், டிசம்பர் 20, 2010

தானே யாகிய தனிமுதற் கடவுள்




Subramania Bharathi invokes Lord vinayaka
Courtesy: Jeeva Venkataraman.

இராஜ யோக நெறியில் கணபதி வாயில் காப்போன் போல. அவனுடைய அனுமதியில்லாமல் முக்தி என்னும் உயரிய வீட்டுக்குள் நுழைய முடியாது. கணபதியின் காற்பதத்தை கண்ணிலொற்றி அவன் அருள் பெற்றபின் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். எல்லா சித்திகளையும் பெறச் செய்யும் சித்தி விநாயகர் அவர். ஆகவே கணபதியைப் பாடிப் பணிந்து பக்தி செய்து அவன் அருள் பெறுவோம்.
 
ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான் ..
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச்சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள் 

-மகாகவியின் விநாயகர் நாண்மணிமாலை