JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், ஜனவரி 06, 2014

அவ உசிரையே வச்சுட்டா.

                                                        இது என்ன கோலம் !!
P L A S T I C   R A N G O L I


இருபத்தி ஒரு நாட்களாக கொட்டற பனியிலே கோலம் போட்டுக்கொண்டு இருந்த எங்களுக்கு
எங்கள் பெண் நியூ ஜெர்சி லேந்து

 " ஏ ம் மா
கோலம் கோலம் இப்படின்னு கஷ்டப்பட்டிருண்டு இருக்கே..என்று கேட்டாள்.

கோல மாவு, காவி, கலர் கோலப்பொடி,

 இதெல்லாமே இப்ப கிடையாது. இப்ப எல்லாமே பிளாஸ்டிக் லே வந்துடுத்து. ஜஸ்ட் உனக்கு வேண்டியபடி வாங்கி அட்ஜஸ்ட் செஞ்சு போட்டுக்க வேண்டியது தான்.

பழைய சம்பிரதாயம், எங்களோட குடும்ப நம்பிக்கைகள், எங்கள் ஊரு கட்டுப்பாடு, அப்படின்னு எல்லாம் வச்சுண்டு இருக்கோமே, அதெல்லாம் என்ன ஆவுறது ?

அம்மா, இன்னிக்கு 2014லே நம்ம லைப் லே எல்லாமே அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வது தான் முக்கியம். இப்படித்தான் நடக்கணும் அப்படின்னு வீம்பு புடிச்சுண்டு இருக்கக்கூடாது.

அவ சொல்றதும் ஒரு விதத்துலே பார்த்தா சரிதான்.

நீ எப்பவுமே உன் பொண்ணு கட்சி .

சர்டன்லி. நீங்களே பாருங்க.  நீங்க சொல்ற கோதை சரித்ரத்துலே பாருங்கோ.
கட்டிண்டா அந்த கண்ணனைத் தான் கட்டிப்பேன் என்று அந்த காலத்திலேயே கோதை சொல்லி இருக்கிறாள். இதை பிடிவாதம் அப்படின்னு சொல்வேளா?

மாட்டேன். அது பகவான் மேல அவ உசிரையே வச்சுட்டா.

அவரவர்களுக்கு பகவான் என்று யாரைத் தோன்றதோ அவர் மேலே உயிரை வச்சுடலாமா ? என்ன சொல்றேன் ? அது சரின்னா இதுவும் சரிதான்.


 கோதையோட அப்பா SAYEE matrimonial  லே இல்ல ஒரு தமிழ் மாட்ரிமோனி லே ஒரு ad கொடுக்கல்ல.  ஏன் அப்படின்னா,

அவருக்கு, கோதை பிறக்கும்போதே , இவ  தாயார் அவதாரம்.
நடந்தது எல்லாமே தெய்வ நிச்சிதம் ஈச்வர சங்கல்பம் அப்படின்னு தெரிஞ்சது.

அந்த கோதை ஆகப்பட்டவள்  பெருமாளே அவதரித்த பெண் வடிவத்தில் பிறந்த ஒரே ஆழ்வார் என்று பெரியவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்.


paasuram 22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான 
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்க்  கீழே 
சங்கம் இருப்பார்ப்போல் வந்து தலைப்பெய்தோம் 
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போல 
செங்கண்சிறுத் சிறிதே எம்மேல் விழியாவோ 
திங்களும் ஆதித்யனும்  எழுந்தால்போல்  
அங்கண் இரண்டுங் கொண்டெங்கள்மேல்  
நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் 


என்ன இது ! நீங்களே பிரவசனத்தை ஆரம்பிச்சுட்டேள். இது என்ன உங்க காலேஜ் ஆ ? நாங்கள் எல்லாம் என்ன உங்க ஸ்டூடெண்ட்ஸ் அப்படின்னு நினைப்பா ?

 முதல்லே எம்.எல்.வி. அம்மா டி.வி.டி போடுங்கோ. என்கிறாள். சக தர்மினி.





வேளுக்குடி  வந்துட்டார். அவரது உபன்யாசத்தை கேட்போம்.
velukkudi krishnan 22 pasuram. upanyasam.



அடுத்து கண்ணதாசன் உரை இந்த பாசுரத்துக்கு



வேளுக்குடி சார்  சொல்றது எதுவுமே மூளைக்கு எட்டுவதற்கு முன்னாடி, பசி பசி அப்படின்னு இடும்பை கூர் என் வயிறு ஒன்றின் வைப்ரேஷ்னஸ் மட்டும் தான் மூளைக்கு புரியறது.

அவசரப்படாதே வயிறே. பொறு.
இன்னிக்கு நைவேத்யம் பூரி சென்னா படோரா .
யதா சௌகர்யம் துஷத்வம்

சத்தமா சொல்லாதீங்கோ..இன்னிக்கு உபவாசம் இருக்கிறவா கூட வ்ரதத்தை நாளைக்கு போஸ்ட்போன் பண்ணிடுவா..

+Balu Sriram +kg gouthaman +Anandaraja Vijayaraghavan
இதிலே பூண்டு இருக்கா வெங்காயம் இருக்கா அப்படின்னு சந்தேஹம் இருந்தா

நீங்க நினைக்கிறவா பக்தர்ஸ் எல்லாம் இன்னிக்கு வலைச்சரம் போயிருக்காங்க. அங்க ஆதி வெங்கட் அவங்களோட பிரவசனம். உபன்யாசம். சொற்பொழிவு.
சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஒரு ஆடோ புடிச்சுண்டு நாமும் போய் கேட்கணும். ஸ்ரீரங்கத்துலேந்து, அவர்கள் இந்தப் பனிலே வந்து இருக்காங்க.
+Geetha Sambasivam
+Ananya Mahadevan +Adhi Venkat

 அவங்களுக்கு மட்டும் வெறும் பூரி மசாலா, சாஸ்த்ரோக்தமா பண்ணியது.
  சுத்தமான கிணற்று ஜலம் . RO மூலம் பரிசுத்தப்படுத்தியது.


இதுவும் சரியா படலே அப்படின்னா,
இந்தாங்கோ துளசி தீர்த்தம்.
+Vasudevan Tirumurti
+Venkata Ramani
+Venkataraman Nagarajan
ஓம் ஹரிஹி

இன்னிக்கு இது போதுமா.

இருங்கோ.

செவிக்கு உணவு வேண்டாமா ?
சாப்பிட்டது ஜீரணம் ஆகவேண்டாமா !!



கோபிகாதி ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா.



***********************************************************************************************************************************************************************************************************************************************.
இன்னிக்கு நீங்க படிக்கவேண்டியது.

LEARN TO FLOW WITH LIFE.
மேலே கிளிக்குங்கள்.