JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, ஜனவரி 04, 2013

Thiruppavai 20th Pasuram


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்!
செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்!
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

Courtesy:
The following text is reproduced from the blog of my web friend Thiru +Kumaran.
Thank U Mr.Kumaran.



முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்னால் சென்று அவர்களது இடர்களை எல்லாம் நீக்கும் கடவுளே எழுந்திருப்பாய்!

சிறந்த குணங்களை உடையவனே! வலிமை உடையவனே! உன்னை வெறுத்தார்களுக்கு வெப்பம் கொடுக்கும் குற்றமில்லாதவனே! எழுந்திருப்பாய்!

செப்பு போன்ற மெல்லிய முலையும் சிவந்த வாயும் சிறிய இடையும் உடைய நப்பின்னைப் பிராட்டியே! திருமகளே! எழுந்திருப்பாய்!

உன் கணவன் மூலமாக நாங்கள் வேண்டியதெல்லாம் தந்து இப்போதே நாங்கள் மார்கழி நீராடும்படி செய்வாய்!