வியாழன், ஆகஸ்ட் 19, 2010
சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே
சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே
அற்புதமான இப்பாடலை எழுதியவர் மேடம் கவிநயா அவர்கள்.
அவரது வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை கிளிக்கவும்.
இங்கே படுவது சுப்பு தாத்தா. பாடும் ராகம் மத்யமாவதி.
வியாழன், ஆகஸ்ட் 12, 2010
மலயத்வஜன் மகள் மீனாட்சி
மலயத்வஜன் மகள் மீனாட்சி
ராகம் ஷண்முக பிரியா
ஆடிப் பூரத்தன்று ஒரு அழகான பாட்டு. கவிநயா மேடம் எழுதியது.
இதை பார்க்க இப்பதிவின் தலைப்பை கிளிக்குங்கள்.
ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2010
நெஞ்சில் நிறைந்திடும் .. மங்கலம் பொங்கிடும்
நெஞ்சில் நிறைந்திடும் என்று அழகான பதிகத்தைப் படிக்க இப்பதிவின் தலைப்பை கிளிக்குங்கள். அம்பிகையின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்யும் கவிநயா, குமரன், மீனாட்சி சங்கரன், கே.ஆர். எஸ். குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் அம்பிகை ஆவன
தருவாள்
.
புதன், ஆகஸ்ட் 04, 2010
sivanai thuthi
ne
sivanai thuthi maname.
endru manam nekizhap padukiRaar thirumathi thangamani avarkaL.
சிவனை துதி என்று நம் எல்லோரையும் கேட்டுக்கொள்வது திருமதி தங்கமணி அவர்கள்.
அவர்களது வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை கிளிக்கவும்.
சிவனை துதி என்று நம் எல்லோரையும் கேட்டுக்கொள்வது திருமதி தங்கமணி அவர்கள்.
அவர்களது வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை கிளிக்கவும்.
செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010
இன்னிக்கு பத்திய சமையல்
நம்ம வீட்டிலே,
இன்னிக்கு என்ன சாப்பாடு அப்படின்னு என் தர்ம பத்தினியை கேட்டேன்.
எனக்குன்னு ஒன்னும் வேண்டாம். உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள் என்றால் அவள்.
சரி என்றேன்.
ஆக இன்னிக்கு,
காரட் கொத்தமல்லி பச்சடி,
காரட்,பீன்ஸ் , வெங்காயம , முருகைக்காய் போட்ட கதம்ப பருப்பு சாம்பார்.
காரட் கரி. ( பொரியல்)
அரிசி அப்பளம், மிளகு அப்பளம், லேய்ஸ் சிப்ஸ்
மிளகு ரசம்,
தயிர் சாதம், எலுமிச்சை ஊறுகாய்.
ஹெரிடேஜ் பிராண்ட் சோன் பப்டி.
அவ்வளவே.
.அது என்ன காரட் எல்லாத்திலேயும் அப்படின்னு கேட்க கூடாது.
வெள்ளி, ஜூலை 23, 2010
சின்ன மணி சிலம்பொலிக்க
இந்த பாடல் வரும் பதிவுக்குச் செல்ல தலைப்பைக் கிளிக்குங்கள்.
சின்ன மணி சிலம்பொலிக்க
வெள்ளி மணி பரல்சிரிக்க
கண்மணியே நீ ஓடி வர வேணும் – வந்து
கட்டி முத்தம் ஒன் றெனக்கு தர வேணும்
நீண்ட பின்னல் தானசைய
நீள் நிலமும் சேர்ந்தசைய
நித்திலமே நீ ஓடி வர வேணும் – வந்து
நித்தம் கொள்ளை அன் பெனக்கு தர வேணும்
முத்து மணி நகையாட
முத்து நகை இதழாட
சித்திரமே நீ ஓடி வர வேணும் – வந்து
சித்த மெல்லாம் நிறைந் தருளைத் தர வேணும்
கா தணிகள் தான்குலுங்க
கை வளைக ளும்சிணுங்க
கண்மணியே நீ ஓடி வர வேணும் - வந்து
கன்னல் மொழி இன் னமுதம் தர வேணும்
பன்னிப் பன்னி நான் பாட
பண்ணில் உன்னைத் தினம் பாட
பொன்மணியே கொலு சொலிக்க வர வேணும் – வந்து
பண் ணமர்ந்து இன் னருளைத் தர வேணும்
--கவிநயா
எழுதியவர் கவிநயா
சனி, ஜூலை 17, 2010
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!
அன்னமாச்சார்யா அவர்களின் அற்புத கிருதி ஸ்ரீமந நாராயண எனத் துவங்கும் பௌளி ராகத்தில் பாடப்பெறுகிறது. அதைக் கேட்டு மகிழாதார், மயங்காதார் இல்லை.
வலை அன்பர் திரு கண்ணபிரான் ரவி ஷங்கர் கே. ஆர். எஸ். அவர்கள் அந்தப்பாடலினை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார்கள்.
http://kannansongs.blogspot.com/2010/07/ms-immortal.html
திருநாரணன் திரு! திருநாரணன் திரு!
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!
கமலா சதீ, முக கமல, கமல ஹித!
கமல ப்ரியா, கமலேக்ஷனா!
கமலாசன ஹித, கருட கமன ஸ்ரீ!
கமல நாப நீ பத கமலமே சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)
தாமரை யாளுடன், தாமரை முகம்-அகம்!
தாமரை வேள், செந் தாமரைக் கண்ணா!
தாமரை யில் உறை, கருடனின் மேல் நிறை
தாமரை உந்தி, உந்தன் மலரடிகளே சரணம்!
(திருநாரணன் திரு)
பரம யோகிஜன பாகதேயஸ்ரீ
பரம புருஷா பராத்பரா!
பர மாத்மா பரமாணு ரூபஸ்ரீ
திருவேங்கடகிரி தேவா சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)
பரமான அன்பருக்கு வரமான வரதனே
பரமான பரமே, பரம் பொருளே!
பரமானே, அணுவில் அணுவே
திருவேங்கட மலை உடையானே சரணம்!
அந்தப்பாடலை, இந்த பல் போன கிழவன் பாடுவதை மேலே கேளுங்கள். அசல் பாட்டு தெலுங்கில் அன்னமாச்சார்யா இயற்றி டாக்டர் எம். எஸ். பாடியது, இப்பதிவின் தலைப்பை க்ளிக் செய்தால் கேட்கலாம். கூடவே தமிழ்ப் பாடலை இயற்றிய கே.ஆர்.எஸ்.ஐயும் சந்திக்கலாம்.
இப்ப என்னோட பேத்தி ஒரு முனு வருசத்துக்கு முன்னாடி இதே பாட்டை பாடினதை கேட்போமா ?
திங்கள், ஜூலை 12, 2010
வெள்ளி, ஜூலை 09, 2010
வி ஹாவ் ஆல்சோ கம் டு பாரிஸ்.
தாத்தா ! நம்ப எப்ப பாரிசை பாக்கிறது அப்படின்னு தினேஷ், பிச்சை, கிச்சன் எல்லோரும் கேட்டாங்க. அதுலே என்னடா கஷ்டம் கீது ? இப்பவே வா பரிசைப் பாக்கலாம் அப்படின்னு தாத்தா கிச்சன், பிச்சை, தினேஷ், அக்ஷயா எல்லோரையும் கூட்டிடுண்டு பாரிசுக்கு வந்தா அங்கே சஞ்சு ஈபில் டவர்லே இருக்கா. ஹே சஞ்சு ! வி ஹாவ் ஆல்சோ கம் டு பாரிஸ்.
Paris
Paris by Night
Paris at Night from Eiffel Tower.
Paris
Paris by Night
Paris at Night from Eiffel Tower.
புதன், ஜூலை 07, 2010
"முருகா!" நினைத்தபோது நீ வர வேண்டும் !!
"முருகா!" நினைத்தபோது நீ வர வேண்டும். landanil irukkum
லண்டனில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று முருகனை தரிசிக்க
பதிவின் தலைப்பை கிளிக்குங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)