JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், டிசம்பர் 30, 2008

Let All the Best Blessings of The Almighty Be Showered on You during all days in the New Year 2009

Please click below and listen to Sweet music at the dawn of 2009 http://llerrah.com/newyearblessing.htm http://llerrah.com/newyearwishes.htm LISTEN TO DR.M.S.SUBBULAKSHMI SINGING KANAKADHARA STOTRAM. We take immense pleasure in extending OUR HEARTY GREETINGS FOR YOU AND YOUR FAMILY MEMBERS FOR a very happy new year 2009. You may also click below to listen to the KANAKADHARA STOTRAM
10 KANAKADHARA STH...

ஞாயிறு, டிசம்பர் 21, 2008

ஓராறு முகம் கொண்ட வேலா

Kindly click at the title to log on to the Author of this Song; ஓராறு முகம் கொண்ட வேலா ஓம்காரப் பொருள் சொன்ன பாலா ஔவைக்கு தமிழ் தந்த அழகா - இவ் அடிமைக்கு அருள் செய்ய வாவா! நெற்றிக் கண் நெருப்பிலே உதித்தாய் - உனைப் பற்றிக் கொண்டோர் நெஞ்சில் நிலைத்தாய் சுற்றிக் கொண்ட வினைக ளெல்லாம் - எனை விட்டுத் தெறித் தோடச் செய்வாய்! சக்திவேல் ஏந்து கின்ற கந்தா - உனை பக்திகொண் டேத்து கின்றேன் குமரா முத்தாக வந்து தித்த உன்னை - என் சொத்தாக ஆக்கிக் கொண்டேன் முருகா! மயில் மீது ஏறியே வருவாய் - என் மனதிலே கோவில் கொண் டமர்வாய் பரிதியாய் என் னுள்ளே ஒளிர்வாய் பிறவிப் பயன் தந்து அருள்வாய்!

செவ்வாய், டிசம்பர் 16, 2008

MARGHAZHI THINGAL

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

வெள்ளி, டிசம்பர் 12, 2008

nin hiruvadi charanam enru naan nambhi vandhen

A meaningful song composed by Madurai Somu followed by Nithyashree. R.Suryaprakash kambhodhi and bhageswari nithya shree .. thiruvadi charanam. kambhodhi http://www.musicindiaonline.com/p/x/wUm2VSc6Gd.As1NMvHdW/

திங்கள், டிசம்பர் 08, 2008

Tiruvannamalai Deepam .. You hear M.S. Singing in front of the temple

Courtesy: Ms.Chithra Ayyar www.flickr.com worship Lord Arunachaleswara on Thiru karthigai Day and get Blessed.

சனி, டிசம்பர் 06, 2008

Transit of Guru (Jupiter ) from Dhanus to Makara Rasi

GURU 108 STOTRAM.m...
Planet JUPITER (GURU BHAGAVAN ) transits from Dhanus Rasi to Makara Rasi on 6th December 2008 (today). Kindly listen to the stotram in silence and meditate on Guru Bhagawan.

வெள்ளி, டிசம்பர் 05, 2008

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

. சிவபுராணம் audio (திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்) நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

ஞாயிறு, நவம்பர் 30, 2008

41st Anniversary of my father




1900 - 1967 A lawyer and equally a Tamil Scholar and a puritan of Carnatic Classical Music. We remember him today, his 41st Rememberance Day. Of all composers, he adored Arunachala Kavirayar. Of all Raagas he liked most Bhairavi. Of all musicians of Carnatic music, his idol was none other than Dr.M.S.Subbulakshmi. Here follows, a song from RAMA NATAKAM by Arunachala kavirayar, sung by Dr.M.S.S. in Raag Bhairavi. http://www.musicindiaonline.com/p/x/-qX2d--KYS.As1NMvHdW/?done_detect

சனி, நவம்பர் 29, 2008

un chittum irangaadha.. Sahana .. by Ranjani and Gayathri

alapanai Part I chitham irangadthennaiya ?

வியாழன், நவம்பர் 27, 2008

கைத்தல நிறைகனி

THIS PRAYER TO LORD GANESA IS SET TO RAAG YADHUKULA KAMBHODHI .TO LISTEN TO DR.M.S.SUBBULAKSHMI THE SAME PRAYER IN RAAG NAATTAI, PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே