JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

ஞாயிறு, மே 23, 2010

மேடம் கவிநயா இயற்றிய சுப்ரபாதம்



64 உபசாரங்களையும் தமிழில் சகோதரி கவிநயா அவர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.
தமிழில் கவிநயா அவர்கள் எழுதியிருக்கும் பாடல்களை, திரு. கே.ஆர்.எஸ் அவர்கள் அழகாகப் பாடிய லிங்க் கீழே!.

மேடம் கவிநயா இயற்றிய சுப்ரபாதம் படிக்க தலைப்பை கிளிக்குங்கள்.

சனி, மே 08, 2010

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் மலேசிய மண்ணில் கோலாலம்பூரில் உறையும் குமரக்கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தபோது எழுதிக்கொடுத்த பாடல் இது!



ஆலோலம் பாடுகிற வள்ளியம்மை கழுத்தில்
....... அணியாரம் இட்ட பெருமான்
ஆகாயம் பூமியிடை நீராவிபோல் வடிவில்
....... ஆதாரமான பெருமான்
மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாது
....... மெய்யான வந்த பெருமான்
மின்னாகி இடியாகி மழையாகிக் காற்றாகி
...... விளைவாக நின்ற பெருமான்
கோலாலம் பூரில்வளர் கோதண்ட பாணிஇவன்
....... கோவில் கொண்டாடு மனமே
கூற்றேதும் வாராது கொடு நோயும் சேராது
....... குறையாத வாழ்வு மிகுமே!


“ஓம்” என்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு
....... உன்வீடும் அந்த இடமே
ஓசைக்கு மணியுண்டு பூசைக்கு மனமுண்டு
........உன்வாழ்வு கந்தன் வசமே
நாமென்ற ஆங்காரம் நமதென்ற எக்காளம்
....... நடக்காது வேலனிடமே
நடக்கட்டும் பார்ப்போ மென்றிருக்கட்டும் உன்உள்ளம்
....... நலம் யாவும் வீடுவருமே
கோமன்னன் வாழ்கின்ற கோலாலம் பூர்செந்தூர்
........கொடிகட்டி ஆளவிடுமே
கொண்டாடு கொண்டாடு தெண்டாயுதத்தானைக்
........குறையாத செல்வம் மிகுமே!
------- கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் மலேசிய மண்ணில் கோலாலம்பூரில் உறையும் குமரக்கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தபோது எழுதிக்கொடுத்த பாடல் இது!

எதுகை மோணை சந்தத்துடன் பாடல் அருமையாக இருக்கும். ஒருமுறைக்கு இருமுறை படித்துப்பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
இந்த அற்புதமான கண்ணதாசன் பாடலை நமக்கு வழங்கிய வாத்தியார் அவர்களுக்கு
எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
திரு சுப்பையா அவர்களின் பதிவுக்கு செல்ல தலைப்பை கிளிக்கிடுங்கள். 



வெள்ளி, மே 07, 2010

GREETINGS FOR ALL MOTHERS.

A MOTHER'S DAY GREETING FROM MY DAUGHTER JAYAGOWRI FROM NEW JERSEY

IN CASE U R NOT TAKEN THERE:
PLEASE CUT AND PASTE THE URL :
http://www.123greetings.com/send/view/05506010414533508766

THANK U GOWRI. 

HAPPY MOTHERS' DAY





திங்கள், மே 03, 2010

KONJI KONJI VAA MURUGA...










ஞாயிறு, மே 02, 2010

When r u going to close ?


இன்னிக்கு காலைலே வலை நண்பர் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள் பதிவு பார்த்தேன்.  அழகான புகைப்படங்கள்  முன்று இட்டிருந்தார்கள். எல்லாமே நன்றாக இருந்தன.  புத்தகங்கள் இரவல் தருவது பற்றி ஒரு கமெண்ட்ஸ் கொடுத்துவிட்டு அவர்களின் இன்னொரு பதிவு பார்த்தேன். முதுமை எப்போது வரும் என்று மிகவும் நகைச்சுவையுடன் ஒரு பதிவு .  அதன் மையக் கருத்துடன் இந்த போட்டோவை இணைத்துபார்த்தேன்.
டிக்கியை திறப்பது வாழ்வின் துவக்கம் என்றால் டிக்கியை   மூடுவது முடிவு.
திறந்த டிக்கியை முடாது எத்தனை நாள்தான் திறந்தபடியே வைத்து இருக்க முடியும் ?
போடோவுக்கும் கருத்துக்கும் வல்லி நரசிம்ஹன் அவர்களுக்கு நன்றி.  



வியாழன், ஏப்ரல் 29, 2010

மனித்த பிறவி எடுத்ததே இதற்குத்தானே !!!

அப்பொழுது தான் வானலிலே இருந்து எடுத்த‌
      ஆவி பறக்கும்
      சூடான எட்டு  இட்டிலியும் இரண்டு உளுந்து வடையும்
      தெவிட்டாத‌
      தேங்காய் சட்டினியும் ,
      கொஞ்சமா உரைப்பு போட்ட கொத்துமல்லி சட்னியும்
      வேக வைக்காத வெங்காயத்தை நறுக்கி  பக்குவமாய்  பச்ச மிளகாய் கலந்து ஒரு சட்னி,
      இதமான இட்லி மிளகாய் பொடி, இதயம் நல்லெண்னை கலந்து,
      கதம்ப சாம்பாரும் கண்ணெதிரிலே வைத்து விட்டால்,
      ஆஹா...ஆஹா...ஆஹா...

      மனித்த பிறவி எடுத்ததே இதற்குத்தானே !!!
          
      பின்னே ஒரு  டிக்ரி காப்பி ( சக்கரை கொஞ்சமா போட்டாதான் டேஸ்ட் அபாரம் !!!)
                                    அம்சமாய் அரை கப் கண்டால்
                                    இதுவல்லவோ சொர்க்கம், என
                                    எகிறிக்குதித்திடுவேன்.

      சுப்பு தாத்தா சாப்பிட்ட இட்லி எங்கே கிடைக்கும் என்ற கேட்கிறீர்கள் ?
     இதோ.. 
தாத்தா அனுபவித்து சாப்பிட்ட இட்லி வடை சட்னி சாம்பார் காண இந்த பதிவின்
தலைப்பை கிளிக்குங்கள்.


ஞாயிறு, ஏப்ரல் 25, 2010

Akshaya Wins a Cup in Drawing Competition.



      இந்த ஊர் ( தோஹா, கடார்) இந்தியன் பள்ளிகளில் படிக்கும் மாணவருக்காக ,  FRIENDS OF THRISSUR    எனும் ஒரு அமைப்பு ஒரு சித்திர வரையும் போட்டி நடத்தியது   அதில் பரிசு பெற்றவருக்கு   பற்பல பரிசுகளும் வழங்கியது.   சுமார் 2000 குழந்தைகளுக்கு மேல் போட்டிகளில் கலந்து   கொண்ட இப்போட்டியிலே பிர்லா பப்ளிக் ஸ்கூலில் படிக்கும்  எனது பேத்தி அக்ஷயாவும் ஒரு கப் வாங்கியிருக்கிறாள்.
     இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி உள்ளூர் பத்திரிக்கை பெநின்சுலாவில் போடோவுடன் 
வந்திருக்கிறது.( Please click here to know more.)

தோஹா செய்தி தாளில் அவளது படம் கண்டு தாத்தா பூரித்து போய்விட்டார் என சொல்லவும் வேண்டுமோ.  !!
      அக்ஷயாவுக்கு தாத்தா பாட்டி வாழ்த்துக்கள்.

P


     


வெள்ளி, ஏப்ரல் 23, 2010

ஆதிபராசக்தி மேல் ஒரு அற்புதமான பாடல்.

 


  ஆதிபராசக்தி மேல் ஒரு அற்புதமான பாடல். திரு V.S.K. அவர்கள் பாடியது. அவர்கள் வலைக்கு செல்ல இங்கு கிளிக்குங்கள்.

   
    சுப்பு தாத்தாவுக்கு பல் எல்லாம் இல்லை. உச்சரிப்பு சரியாக இல்லை. இருந்தாலும் பாட்டின் மெட்டை மனதில் பதித்து கொண்டு பக்தர் எல்லோரும் பாடிடவேண்டும்.


ஞாயிறு, ஏப்ரல் 18, 2010

Volcanish Ash Spread in Europe


இந்த நிலை இன்னும் ஓரிரு தினங்கள் தொடரும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். சென்னை விமான நிலையத்திலும் முன்று விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் . பயணிகளின் நிலை பரிதாபமாக உள்ளது.  நடு வழியில் நிற்கும் பயணிகளின் மன நிலை எவ்வாறு இருக்கும் என்று சொல்ல தேவை இல்லை.    சீக்கிரம் இந்த சாம்பல் புகை மண்டலம் அகன்று விமான போக்குவரத்து மீண்டும் செயல்பட ஆண்டவன் அருள்வாராக. 

மேலும் இது பற்றிய செய்தி படிக்க இப்பதிவின் தலைப்பை கிளிக்கிடுங்கள். 





சனி, ஏப்ரல் 17, 2010