JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

புதன், ஜூன் 04, 2014

anandha bhairavi



I SAW AND READ THIS SONG IN MADAM KAVINAYA'S BLOG
www.ammanpaattu.blogspot.com
I have immense pleasure in singing this song in my own style and rhythm in a raaga that suits this lyric best.
Yes. anandha Bhairavi.


உன்னை விட்டால் எவருண்டு எனக்கு? என்னைக்
காப்பாற்றுதல் உந்தன் பொறுப்பு…
(உன்னை)

உந்தன் திருப் பாதங்கள் கருத்தினிலே பதித்தேன்
பதமலர் தனையன்றி மற்றதெல்லாம் வெறுத்தேன்!
விதி என்ன விதி என்று தள்ளி வைத்தேன், பொறுத்தேன்
நீயே என் கதியென்று உன்னை இறுக்கிப் பிடித்தேன்!
(உன்னை)

பற்றிக் கொண்டேன் உந்தன் பஞ்சுமலர்ப் பாதம்
சுற்றிக் கொண்டேன் கொடியாய், வெட்டிடுதல் பாவம்!
கொட்டும் உன் அருள் மழையில் நனைவதுவே யோகம்
சற்று நீ அருகில் வந்தால் விலகிடும் என் சோகம்!

(உன்னை)


--கவிநயா