JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், ஜூன் 22, 2009

ஆரிரரோ பாடாமல் அன்னையென ஆனாயோ

சொந்தமில்லை என்பதனால் சோதரியாய் ஆனாயோ பந்தமில்லை என்பதனால் பாசமழை பொழிந்தாயோ ஆரிரரோ பாடாமல் அன்னையென ஆனாயோ காரிருளில் கைவிளக்காய் காரிகையே வந்தாயோ ஆதாயம் தேடாத அன்புண்டோ என்றிருக்க ஆகாயம் போல்விரிந்த அன்பையே நீதந்தாய் சேதாரம் இல்லாத உறவுண்டோ என்றிருக்க ஆதாரம் நீயாகி அச்சாணியாய் அமைந்தாய் குற்றமெதும் காணாத சுற்றமென வந்தவளே உற்றவளாய் உரியவளாய் உடனென்றும் இருப்பவளே விட்டகுறை தொட்டகுறை தீர்க்கவென வந்தாயோ சுட்டசங்கைப் போலவெள்ளை நட்பதனைத் தந்தாயோ அன்புக்கும் நட்புக்கும் அடைக்குந்தாழ் ஏதுமுண்டோ காற்றுக்கும் கடலுக்கும் வேலிகட்டி மாள்வதுண்டோ அள்ளிஅள்ளி அனைத்தும்நீ அளக்காமல் தந்துவிட்டாய் கிள்ளித் தரக்கூட ஏதுமில்லை என்னிடத்தில் - உள்ளத்தின் உள்ளிருந்து துள்ளித் தெறித்து வந்த இந்த கவிதைத் துளியைத் தவிர... PLEASE CLICK AT THE TITLE TO LOG ON TO THE AUTHOR OF THE BLOG: --கவிநயா Kindly listen to SUDHA RAGHUNATHAN sing KARUNA JALADHE DHASARATHE in the same raag here: http://www.raaga.com/player4/?id=40460&mode=100&rand=0.6172140685438279 My effort to sing the same Raag is just a sand in the seashore.