JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், மே 26, 2009

தாயே ஒன்னக் காணலியே

MADAM KAVINYA SINGS AGAIN. THIS TIME THE ARDENT DEVOTEE OF GODDESS EARNS FOR HER IMMEDIATE PRESENCE BEFORE HER. SHE DOES NOT KNOW HOW AND WHEN WOULD SHE COME BEFORE HER !
  • ஆத்தான்னு கூப்பிட்டாக்க
  • ஆசையோட வந்திடுவா
  • அம்மான்னு கூப்பிட்டாக்க
  • அன்போட அருள்புரிவா
  • ஆத்திரமாப் பேசினாலும்
  • ஆதரவாக் கேட்டுக்குவா
  • அழுதழுது கெஞ்சினாக்க
  • ஆறுதலத் தந்திடுவா
  • ஆடிப்பாடிக் கூப்பிட்டாக்க
  • ஆனந்தமா வருவாயேன்னு
  • ஆடிப்பாடிக் கூப்பிட்டேனே
  • ஆத்தா ஒன்னக் காணலியே
  • தேடித்தேடிக் கூப்பிட்டாக்க
  • தெய்வமேநீ வருவாயேன்னு
  • தேடித் தவிச்சிருந்தேன்
  • தாயே ஒன்னக் காணலியே
  • கோடிக்கோடி உயிருக்கெல்லாம்
  • ஒத்தத்தாயி நீதானேடி
  • ஓடிவந்து என்னப்பாக்க
  • ஒருநொடியும் இல்லையோடி?
--கவிநயா please click at the above title to move to her blog.