JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

புதன், ஜூன் 29, 2011

கோளறு பதிகம்

கோளறு பதிகம். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம். "வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியார‌ வர்க்கு மிகவே." "என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும் உடனாய நாள்க ள‌வைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார‌வர்க்கு மிகவே. " "உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே. " "மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்களான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதம‌வையும் அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல் கொடு நாகமோடு கரடி ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய் வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த வத‌னால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார‌வர்க்கு மிகவே." "தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே."

திங்கள், ஜூன் 27, 2011

The exceptionally stunning saree

Please click the URL above to see the amazing saree.
இந்த புடவை விலை மிகக் குறைவாம். 
ரூபாய் 40 லட்சம் தானாம்.
அப்படி என்ன இதில் ?
12 விலை மதிப்பற்ற ரத்தினங்கள் இருக்கிறதாம்.
கூடவே ராஜ ரவி வர்மாவின் 12 ஓவியங்களும் உண்டாம்.

ஞாயிறு, ஜூன் 26, 2011

kichan

வியாழன், ஜூன் 23, 2011

INDECO HOTELS SWAMIMALAI

ஞாயிறு, ஜூன் 05, 2011

Shakthi Sahitha Ganapathim

Worship Vinayaka To rid of all obstacles in your way.
அலை அலை போல ஆழி அலை போல
அடுத்து அடுத்து இன்னல்கள் வரினும்
மனம் சலியாது அவற்றை எதிர்நோக்கி
இன்னல்கள் களைந்து இன்பங்கள் பெற்றிட
ஈசன் ஒருவனே .  அவனே விநாயகன்.

This is the Nottuswaram as composed by Muthusamy Deekshitar.
taaLam: tishra Eka
Composer: Muttuswami Dikshitar
Language: Sanskrit.


  shakti sahita கணபதிம்
  shankarAdi sevitham
  virakta sakala munivara sura rAja vinuta குருகாம்
  bhaktAnipOSakam bhavasutam 
vinAyakam bhakthi mukthi pradhaam
  bhUSitAngam raktapadAmbujam bhAvayAmi

செவ்வாய், மே 31, 2011

Om Sakthi

Madam Kavinaya sings the Glory of Goddess Shakthi. Subbu thatha sings in Raag Hindholam.

ஞாயிறு, மே 29, 2011

Ghanam for removing fear of death

TRIAMBAKAM YAJAMAHE SUGANDHIM PUSHTI VARDHANAM

Thrayambakam Yajamahe

I turn Seventy today.

திங்கள், மே 16, 2011

ADHI SAKTHI KALI MARI

Thiru Sivakumaran has composed a lyric on Goddess Adhi Sakthi Please click the title to log on to his posting to see the text. Thatha sings in Raag Desh.

ஞாயிறு, மே 15, 2011

Shambho Maha Deva Deva

margabhandhu stotram composed by APPAYYA DEEKSHITAR as translated by Mrs.Lalitha Mittal. Please click the title of this posting to see the lyric in full