செவ்வாய், டிசம்பர் 31, 2013

Thiruppavai 17

வெளிலே கதவ திறந்து போக முடியாது போல இருக்கே
பனி கொட்டறது.
வாசல்லே  பார்க்கறேன்.ஒரு நிலாவுக்கு பத்து நிலா   இருக்கு.
 என்ன இது ?




பனி வருஷா வருஷம் தான் கொட்டறது. அதற்காக ஆண்டாள் திருப்பாவை பாடற மாசத்திலே வாசல் லே கோலம் போடாம குத்து விளக்கு ஏத்தாம இரண்டு பேர் கோலாட்டம் போட்டுண்டு பாடாம இருக்கலாமா?

உனக்கு முடியல்லேன்னா நான் போடறேன், என்று கோல மாவு, காவி அனைத்தையும் எடுத்துண்டு தலைலே மப்ளர் சுத்திண்டு வாசலுக்கு போனால்,

பிரமித்து போய்விட்டேன்.

ஏ , மீனாச்சி, இங்கே வந்து பாரு.

இங்கே ஏற்கனவே ஒரு திவ்யமா கோலம் போட்டு இருக்கா.

.
யாரு போட்டு இருப்பா ?
என்று கேட்பதற்கு முன்னாடி,
நான் தான் தாத்தா போட்டேன் என்று என் பேத்தி சஞ்சு சொல்றா.
நீயா போட்டே.
ஆமாம்.
யாரு சொல்லிகொடுத்தா.
அத நானே கத்துண்டு போட்டேனாக்கும்.

அது தான் நம்ம பேத்தி. mezzo  சுப்ரானோ வும் பாடும். அதே சமயம் பூக்கோலமும் போடுவாள். ஷி இஸ் எ க்ரியேடிவ் ஜீனியஸ் . நான் அன்னிக்கு அவ பாடறத பாத்த உடனே சொல்லிட்டேனே என்கிறாள்  வீட்டுக்காரி.

என் பொண்ணு முகத்திலே அத்தனையும் பெருமை. 

கௌரி பொண்ணா , கொக்கா என்றாள் என் அகமுடையாள்.

சரி சரி  அப்படின்னு சொல்லிட்டு திருப்பி ஒரு தரம் கோலத்தை பார்ப்போம் அப்படின்னு திரும்பினா கோலம் காணாம போச்சே.

என்னது ?
தாத்தா இது ஹோலொக்ரம் டிஸ்ப்ளே .
என்றாள் பேத்தி.
அதானே பார்த்தேன். கோல மாவே இல்லாம ஒரு கோலமா !!

சரி சரி; திருப்பாவை பாசுரம் 17 இன்னிக்கு
.எம்.எல்.வி. அம்மா பாட்டு


ஆஹா !! இப்ப தானே தெரியறது... இன்னும் அந்த கண்ண பிரானே துயில் களைந்து எழவில்லை !!

அதுனாலே தூங்காதே தூங்காதே அப்படின்னு சொல்லி எழுப்பு உன் தம்பியை அப்படின்னு பலதேவன் கிட்டே கோதையும் அவங்க பிரண்ட்ஸ் ம்
ரிக்வெஸ்ட் பண்றாங்க.

கண்ணனுக்குத் தெரியாதா ! எப்ப எழுந்திருக்கணும் அப்படின்னு !
மாயன் அல்லவா ! அவனும் மாயன் அவன் துயிலும் மாயமே அல்லவா !

கண்ணதாசன் இந்த பாசுரத்திற்கு தந்த உரை பார்ப்போம்.

நீங்க என்ன வேற ராகத்துலே பாடி இருக்கீங்க..!!

இது ஒரு அதிசய ராகம். ஆனந்த ராகம். அபூர்வ ராகம். 

இந்த பெருமைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.
கேட்கறவங்க சொல்லணும் என்ன ராகம்
அப்படின்னு

பாடி முடியறதுக்குள்ளே சத்தமான சத்தம்.
ஒரே கோலாட்ட சத்தம்.

என்னது ஒரு கல்யாண கோஷ்டியே வர்றது !!

ஆமாம். இன்னிக்கு கோதை திருக்கல்யாண உத்சவம். கெட்டி மேளம் கொட்டற கல்யாணம். 

இந்த ஊர் மாமி எல்லாம் நம்மாத்துலே வந்து கல்யாணம் உத்சவம்
இன்னிக்கு ஒரு கோலாட்ட நிகழ்ச்சி.

பேஷ் பேஷ்.
Reception Rose petals.
courtesy: tripadvisor.com


வாங்க.வாங்க. எல்லோரும் வாங்க.
வந்த உடனே ஒரு நிமிஷம் கூட டிலே பண்ணாம, கோலாட்டம், கொண்டாட்டம் எல்லாம் ஆரம்பம்.
vanga vanga.




அமக்களம் தான் இன்னிக்கு.

வந்தவர்கள் எல்லாமே களைச்சு போயிட்டாங்க.
அவங்களுக்கு என்ன கொடுப்பது ? என்ன நைவேத்தியம் ?

அதெல்லாம் சின்ன சின்ன நைவேத்யம் எல்லாம் சரிப்படாது.
அப்படின்னு சரவணா பவன் லே சொல்லி ஒரு கல்யாண சாப்பாடுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்.

யாரு இத்தனை பணம் கொடுத்தா?

பணத்துக்கு என்ன குறைச்சல் ? ஒரு ஈமெயில் போட்டேன். பணம் கொட்டு கொட்டுன்னு கொட்டிடுத்து. பெருமாள் நா அனுப்பறார் !! தாயார் கவனிச்சுப்பா அப்படின்னு இருந்துட்டா எதுக்குமே கவலைப்பட வேண்டாம்.

இப்ப எனக்கு பசி வந்துடுத்து.

பசி தினம் தான் வரது.  ஷைலஜா அம்மா உரை இங்கே இருக்கு. அதை முதல்லே படிச்சு இன்னம் நன்னா இந்த பாசுரத்தை மனசுக்குள் வாங்கிக்கங்க.



இது என்ன துளசி கோபால் 60 வது ஷஷ்டி அப்த் பூர்த்தி அன்று கிடைச்ச சாப்பாடு மாதிரி இருக்கு.

ஜோர்.ஜோர்.

அது மாதிரி இன்னொரு சாப்பாடு என்னிக்கு கிடைக்கும் என்றே தெரியல்ல.
எல்லாம் +revathi narasimhan கைங்கர்யம்.

அவர் மூலமா அந்த பெருமாளே அனுக்ரஹம் பண்ணி இருக்கார்.

யார் யார் வந்திருக்கிராளோ அவர்களுக்கெல்லாம் தேங்காய்,குங்குமம்,0பழம் வெத்தலை பாக்கு , பக்ஷணம் ஒரு தாம்பூல பைலே போட்டு   கொடு.

ஆச்சு. கோதை கல்யாணம் ஜாம் ஜாம் அப்படின்னு முடிஞ்சது.

எல்லாம் அந்த பெருமாள் அனுக்ரஹம்.

*****************************************************************************
இன்னிக்கு எல்லோருக்கும் ஒன்னு சொல்ல மறந்து போயிடுத்தே..

என்ன இது.. கோதை கல்யாணத் திருவிழா.

இதுலே கூட மறந்து போறதுக்கு என்ன இருக்கு ?



ஹாப்பி நியூ இயர் சொல்லுங்கோ.




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
*****************************************************************
*****************************************************************
When celebration becomes service,
there is no guilt.
And when service becomes celebration,
there is no pride.

+Sri Sri Ravi Shankar